அரசு ஊழியர்களுக்கு 01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்கிறது.
தற்போது 53% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 2% அகவிலைப்படி உயர்வினால் 55% அகவிலைப்படி பெறுவார்கள்.
01.01.2025 முதல் 31.03.2025 வரை 3 மாதங்களுக்குரிய அகவிலைப்படி உயர்வுத் தொகை ஏப்ரல் முதல் வாரத்தில் நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாத இறுதியில் வெளியாகும்.
ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்ததும், இதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும், அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.