t> கல்விச்சுடர் புதிய முறையில் வரி செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 July 2024

புதிய முறையில் வரி செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும்!



* வருமான வரி நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிப்பு

* தனி நபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை.

வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனி நபர்களுக்கான வருவாயில், ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை .

ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் விரி விதிக்கப்படும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்படுவது ஏஞ்சல் வரி. புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கோரினால், ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது ரத்து செய்யப்படுகிறது.

NEW TAX REGIME 

Standard deduction at 75000 vs 50000 earlier 

Tax rates changed in New Tax regime 

0-3 lakh - Nil

7-10 lakh -10%

10-12 lakh -15%

12- 15lakh -20% 

Above 15Lakh -30% 



Capital Gains Tax:


Short Term now 20% 

(instead of 15%)



Long term now 12.5%

(instead of 10%)



புதிய முறையில் வரி செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும்!


மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் புதிய வரி முறையை தேர்வு செய்திருப்பதாக கூறிய அவர், வருமான வரி முறையை மேலும் எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.


அதன்படி, புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 அதாவது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் அல்லது சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி இல்லை. ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ,10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.12,00,001 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருமானத்திற்கு 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது புதிய வரி முறையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தால் ரூ.12 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டுவோர் ரூ.12,500 வரை வருமான வரியில் சேமிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய வருமான வரி முறையில் முன்பு ரூ.50,000 மட்டுமே நிரந்தர கழிவாக இருந்தது. அதை தற்போது ரூ,75 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிரந்தரக் கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL