தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 49 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கொரொனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323இல் இருந்து 1,372ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதிப்பில் இருந்து 365 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
*கொரோனாவால் எண்ணிக்கை 1323ல் இருந்து 1372ஆக அதிகரிப்பு. இது வரை 365பேர் குணமடைந்து சென்று உள்ளனர். இது வரை பலி எண்ணிக்கை 15ஆக உள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் கொரோனாவிற்கு அதிக மருத்துவ வசதிகள் உள்ளன. இன்று மட்டும் தமிழகத்தில் 82பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திருப்பூரில் இன்று மட்டும் 28பேருக்கும், சென்னையில் 7பேருக்கும், நெல்லையில் 2பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது -தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.