t> கல்விச்சுடர் பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்கும் மெகா நடவடிக்கை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 March 2020

பத்து பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்கும் மெகா நடவடிக்கை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு அறிவித்தபடி செயல்படுத்தப்படும் என சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதனால், ஓரியண்டல் வணிக வங்கி மற்றும் யூபிஐ வங்கி ஆகிய இரண்டும் பஞ்சாப் தேசிய வங்கியுடன் இணைகின்றன.

சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைகிறது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கி உடன் இணைகிறது.

ஆந்திரா வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் யூனியன் இந்திய வங்கி உடன் இணைகின்றன.

இணையும் வங்கிகள் தலைமை வங்கிகளின் கிளைகளாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படும்.

இணைப்பு நடவடிக்கையினுள் வரும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தலைமை வங்கியின் வாடிக்கையாளர்களாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கருதப்படுவர்.

சிண்டிகேட் வங்கி இனி தலைமை வங்கியான கனரா வங்கியின் கிளையாக செயல்படும்.

சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கனரா வங்கியின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவர்.

இதேமுறைதான் இதர வங்கிகளுக்கும் பொருந்தும்.

JOIN KALVICHUDAR CHANNEL