t> கல்விச்சுடர் தமிழக ஆளுநரிடம் ஓ.பி.எஸ்.15 நிமிடங்கள் பேசியது என்ன ? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 February 2017

தமிழக ஆளுநரிடம் ஓ.பி.எஸ்.15 நிமிடங்கள் பேசியது என்ன ?

தமிழக ஆளுநருடன் 15 நிமிடங்கள் பேசிய பன்னீர் செல்வம் முக்கியமான 4 கோரிக்கைகள் முன்வைத்துள்ளார். கட்டாயப்படுத்தி தம்மிடம் ராஜினாமா கடிதத்தை சசிகலா தரப்பு பெற்றுவிட்டதாக ஓ.பி.எஸ்.முறையீட்டுள்ளார். தனது ராஜினாமாவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு ஆளுநரிடம் ஓ.பி.எஸ். கோரியிருக்கிறார்.
தமிழக முதலமைச்சராக சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்திருப்பது சட்டவிரோதம் என்று அவர் கூறினார். ஆளுநர் மாளிகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது. தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் தான் அரசின் பெரும்பான்மை பலத்தை முடிவு செய்யவும் பன்னீர் செல்வம் கோரியுள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL