t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

திருக்குறள்: 

குறள் 241: 
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணு முள.                   

விளக்க உரை: 

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்

பழமொழி :
Good things take time.        

நல்லவை நடக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

பொது அறிவு : 

01.இந்திய தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?

  சேவைத் துறை -Tertiary Sector

2. உலக அளவில் தொழிற்புரட்சி முதல் முதலில் நடைபெற்ற நாடு எது?

     இங்கிலாந்து- England 

English words :

swoop-dive

 bifurcated-split

தமிழ் இலக்கணம்:


போடு, செய் , எடு – இவை நம் வினை மரபுச் சொற்களை எவ்வாறு மங்கி அழிந்து போகச் செய்கிறது என்பதைக் குறித்து இன்று காண்போம்.
*போடு*
1.பசு கன்று போட்டது –தவறு
பசு கன்று ஈன்றது 
2.வீட்டின் மேல் கூரை போட்டனர் – தவறு 
வீட்டின் மேல் கூரை வேய்ந்தனர் 
3.நீதி மன்றத்தில் வழக்கு போட்டார் –தவறு 
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
4.புதிதாக சாலை போட்டனர் – தவறு 
புதிதாக சாலை அமைத்தனர்
இன்று சில சரியான வினை முற்றுச் சொற்களை பார்த்தோம். நாளையும் தொடரும்
அறிவியல் களஞ்சியம் :

நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.

ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.
நீதிக்கதை

 கரடியும் இரண்டு நண்பர்களும்



ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான். 

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான். 

சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான். 

அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. 

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். 

ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான். 

நீதி :

ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.

இன்றைய செய்திகள்

19.01.2026

⭐வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை செய்யும் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அனைத்து வாகனத்திலும் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐2024-ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

⭐தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் வகையில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 9 புதிய அம்ரித் பாரத் ரயில்களின் சேவை  தொடங்கின.

⭐242 சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்களின் இணைப்புகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய ஓபன் பேட்மிண்டன்:  
தென் கொரிய வீராங்கனை
அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி வெற்றி. உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்.

Today's Headlines

⭐The central government is planning to make it mandatory to install Vehicle-to-Vehicle (V2V) communication technology in all vehicles, which will immediately alert you when vehicles come too close.

⭐Tamilnadu has ranked 2nd in the NITI Aayog's export ranking list for the year 2024.

⭐9 new Amrit Bharat trains, including three new Amrit Bharat trains connecting Tamilnadu and West Bengal, have started service.

⭐The Indian government has blocked links to 242 illegal betting and gambling websites.

 *SPORTS NEWS* 

🏀Indian Open Badminton: South Korean player Ahn Se-young has already won the championship title in 2023 and 2025. Now she has won the championship title for the 3rd time.

🏀 In Australian Open Tennis  series, Suvarev and  Jasmine Paolini won in first round   Alexander Suvarev is ranked 3rd in the world.


13 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2026


திருக்குறள்: 

குறள் 136: 
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.                 
உரை: 

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

பழமொழி :
Actions speak louder than words.      

சொற்களை விட செயல்களே அதிகமாக பேசும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

 2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி : 

இயற்கை ,காலம், பொறுமை இவை மூன்றும் பெரும் மருத்துவர்கள். பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் -ஹெச் ஜி பான்

பொது அறிவு : 

01.சர்வதேச அளவில்,  ""சட்டத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?

    ஜான் ஆஸ்டின் (John Austin) 

02. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

       மார்ச் 15- March 15

English words :

Devour -consume

Whet-sharpen

தமிழ் இலக்கணம்: 

 சென்னைப்பட்டினம் 
சென்னைப்பட்டணம் 
எது சரி?
பட்டினம் என்பது கடற்கரை ஒட்டிய நகரத்தை குறிக்கும் 
பட்டணம் என்பது பெரிய நகரத்தை குறிக்கும்.
எனவே இரண்டு பெயர்களும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகாடன் அணு குண்டுகளை ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கு கோடான கோடி நன்றிகள்!

நீதிக்கதை

 எறும்பும் வெட்டுக்கிளியும்



வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத்தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது. 

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் என்றது. வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது. 

நாட்கள் கடந்தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அதனிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு. 

பிறகு எறும்பு வெட்டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியுள்ளது. எனவே இனிமேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்து வைத்துக்கொள் என்றது. எறும்பானது கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தியது. 

நீதி :

எதிர்காலத்திற்குத் தேவையானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.01.2026

⭐45 சவரன் நகைகள் ஒப்படைப்பு.தூய்மை பணியாளர் பத்மாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!
நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

⭐16செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
* 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

⭐சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
* முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

Today's Headlines

⭐45 sovereigns of jewellery handed over.   Chief Minister M.K. Stalin awards Rs. 1 lakh to the sanitation worker Padma.  The police enquired about the identity of the jewellery owner and handed it over .

⭐PSLV C-62 rocket with 16 satellites launched. A small test device called 'Kestrel Initial Demonstrator' is also attached.

⭐Chief Minister launches double decker bus services in Chennai. The tourism department has decided to launch double decker bus services to major tourist destinations.

 *SPORTS NEWS* 

🏀 Big Bash League is a domestic T20 series held in Australia. The 15th season of this series is underway. In this, Melbourne Renegades and Sydney Thunder clashed.


12 January 2026

போகிப் பண்டிகை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

போகிப் பண்டிகை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2026



திருக்குறள்: 

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. 

விளக்கம் – 

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

பழமொழி :
Success is built on repeated actions.       

மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் தான் வெற்றி உருவாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

 2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி : 

நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால்,  நான் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன் . - மாவீரன் அலெக்சாண்டர்

பொது அறிவு : 

01.ஐக்கிய நாடுகள் சபை எந்த நாளை சர்வதேச கல்வி நாளாக கொண்டாடுகிறது?

      ஜனவரி 24-January 24

02.பூமி கோள வடிவம் கொண்டது என்ற கருத்துக்கு முதன்முதலில் அடித்தளமிட்டவர் யார்?

 பித்தாகரஸ் -Pythagoras

English words :

ledge-ridge

 preening -grooming

தமிழ் இலக்கணம்: 

 *சுவற்றில்* விளம்பரம் செய்யாதீர். சுவற்றில் என்பது தவறு. ஏன்? எப்படி? என்று பார்ப்போம்
கிணறு + இல் = கிணற்றில்
கயிறு + இல் = கயிற்றில் 
வயிறு + இல் = வயிற்றில்
கிணறு,கயிறு, வயிறு போன்ற வார்த்தைகளுடன் *இல்* (ஐந்தாம் வேற்றுமை உருபு) சேரும் போது கடைசி சொல் மிகுந்து இணையும். 
ஆனால் *சுவறு* என்று நாம் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு தான் *சுவற்றில்*. 
சுவர் + இல்= சுவரில் என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

 ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும்

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்!

ஜனவரி 12

தேசிய இளைஞர் நாள்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது
நீதிக்கதை

 உள்ளதும் போச்சு

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது. 

சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது. 

நீதி :

பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.

இன்றைய செய்திகள்

12.01.2026

⭐தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

⭐போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்-விமான நிலைய ஆணையம் வேண்டுகோள். ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

⭐ ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் 12வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் முழுவதும் இணையதள சேவை முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 நியூசிலாந்தில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழ்நாடு வம்சாவளி வீரர் ஆதித்யா அசோக்
 2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார்.
இவர் கடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

Today's Headlines

⭐There is a possibility of heavy rain in Tamilnadu starting today and continuing till the 13th. There is a possibility of moderate rain in Tamilnadu, Puducherry and Karaikal on the 14th.

⭐Airport Authority appealed regarding burning plastic, tires and others on Bogi Festival. There is a situation of formation of dense smoke and fog that may make the runway  unrecognizable.

⭐ Students and youth are protesting against the ruling government in Iran. The protests have entered their 12th day and 45 people have died so far. Internet services have been shut down across Iran.

 *SPORTS NEWS* 

🏀 Tamil Nadu-origin player Aditya Ashok to play against New Zealand India Aditya Ashok made his international debut in 2023. He has been training at the CSK Academy for the past year.


10 January 2026

01.01.2026 அன்று பணியில் இருப்பவர்கள் (CPS-இல் உள்ளவர்கள்) ஓய்வு பெறும் போது CPS அல்லது TAPS ஆகிய இரண்டில் ஒன்றைத்தேர்வு செய்யும் வாய்ப்பு (Option) வழங்கப்படும்.

தகுதி நிலை பொருந்தும் முறை
01.01.2026-க்குப் பின் பணியில் சேருபவர்கள் இவர்களுக்கு TAPS கட்டாயம்.
01.01.2026 அன்று பணியில் இருப்பவர்கள் (CPS-இல் உள்ளவர்கள்) ஓய்வு பெறும் போது CPS அல்லது TAPS ஆகிய இரண்டில் ஒன்றைத்தேர்வு செய்யும் வாய்ப்பு (Option) வழங்கப்படும்.
01.01.2026 அன்று அல்லது அதற்குப் பின் ஓய்வு பெறும் CPS ஊழியர்கள் இவர்கள் TAPS திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
ஏற்கனவே ஓய்வு பெற்ற CPS ஊழியர்கள் TAPS அமலுக்கு வருவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு, பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.


அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய சலுகைகள். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) பரந்த அம்சங்கள் பின்வருமாறு:

(i)

TAPS இன் கீழ் வரும் அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும் கடைசியாகப் பெற்ற மாதச் சம்பளத்தில் (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) 50 சதவீதத்திற்கு சமமான உறுதியளிக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக, அரசு ஊழியர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும், மேலும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவதற்கான முழு கூடுதல் நிதித் தேவையையும் தமிழ்நாடு அரசு ஏற்கும்.

(ii) ஓய்வூதியதாரர் இறந்தால், ஓய்வூதியதாரர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதத்திற்கு சமமான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

(iii) திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி அதிகரிப்புகளுக்குத் தகுதியுடையவர்கள்.

 (iv) பணியில் இருக்கும்போது ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்தாலோ, வழங்கப்பட்ட தகுதிவாய்ந்த சேவையின் நீளத்திற்கு ஏற்ப, அதிகபட்சமாக இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு, பணிக்கொடை வழங்கப்படும்.

(v) CPS இன் கீழ் பணியில் சேர்ந்து, TAPS செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வழங்கப்பட்ட சேவையின் நீளத்திற்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.



(vi) 01.01.2026 முதல் பணியில் சேரும் அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கும் TAPS கட்டாயமாகும். CPS ஆல் நிர்வகிக்கப்படும் மற்றும் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் அனைத்து தகுதியுள்ள அரசு ஊழியர்களும் TAPS இன் கீழ் உள்ளடக்கப்படுவார்கள், இது அறிவிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டது.

(vii) 01.01.2026 க்கு முன்பு பணியில் இருந்த மற்றும் CPS இன் கீழ் உள்ளடக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும் ஓய்வு பெறும் நேரத்தில் TAPS இன் கீழ் சலுகைகள் அல்லது CPS இன் கீழ் அவர்கள் பெற்றதற்கு சமமான சலுகைகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய ஒரு விருப்பம் வழங்கப்படும், அறிவிக்கப்பட வேண்டிய விதிகளின்படி.

(viii) TAPS இன் கீழ் உள்ளடக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும், ஆரம்பத்தில் CPS இன் கீழ் பணியில் சேர்ந்த ஆனால் பின்னர் TAPS இன் கீழ் உள்ளடக்கப்பட்டவர்கள் மற்றும் ஓய்வுபெறும் போது TAPS சலுகைகளைத் தேர்வுசெய்தவர்கள் உட்பட, பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் பெற உரிமை உண்டு.

 (ix) TAPS திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும், ஆரம்பத்தில் CPS திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்கள், பின்னர் TAPS திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெறும்போது TAPS சலுகைகளைத் தேர்வுசெய்தவர்கள் உட்பட, பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்களின் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

6. TAPS-க்கான விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தல் நடைமுறைகள் ஆகியவை அரசாங்கத்தால் தனித்தனியாக அறிவிக்கப்படும்.


7. தமிழ்நாடு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் மேற்கண்ட விதிகள் அறிவிக்கப்பட்டு தேவையான சட்டப்பூர்வ மற்றும் கணக்கியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு செயல்படும்.

(ஆளுநர் உத்தரவுப்படி)

டி. உதயச்சந்திரன்

அரசாங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர்

JOIN KALVICHUDAR CHANNEL