t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 January 2026

ஒரு தாயின் கடமை - கவிதை


ஒரு தாயின் கடமை

அன்பு மகனே,

என் கற்பனைகளும் கனவுகளும்
மலைப்போல் உயர்ந்து நிற்கின்றன.
மருமகள் நம் வீட்டின் மகளாக
மறு பிறவி எடுக்கும் குலமகள்,
உன் உயிரில் கலக்கும் தெய்வமகள்
உன் துணைவியாக வேண்டுமென
இறைவனிடம் கையேந்துவேன்.
மெய்யழகு தோற்றத்தில் இல்லை
அது உள்ளத்தில் இருக்கிறது,
அன்பான நேசத்தில் இருக்கிறது,
பரிவான கவனிப்பில் இருக்கிறது,
மென்மையான உரையாடலில் இருக்கிறது.
உள்ளத்தின் அழகைக்காட்டும் தேவதை
உன் துணைவியாக வேண்டுமென
இறைவனிடம் கையேந்துவேன்.
ஒலிமயமான வாழ்க்கை பாதையில்
பனித்துளியாய் வருத்தங்கள் படர்ந்தாலும்,
மழைசாரலாய் மகிழ்வுகள் தூரினாலும்,
இளந்தென்றலாய் உயர்வுகள் வளர்ந்தாலும்,
கடும்புயலாய் கஷ்டங்கள் தாக்கினாலும்,
உன் நிழல் உன்னை பிரிவதில்லை.
நிழலை மிஞ்சும் உணர்வுள்ள தேவதை
உன் துணைவியாக வேண்டுமென
இறைவனிடம் கையேந்துவேன்.
என் அன்பு செல்வமே,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
அனைத்து செல்வங்களும் பெற்று
மகிழ்வுடன் ஆரோக்கியத்துடன்
நீடூழி வாழ இறைவன் என்றும்
உன்னை வாழ்த்தட்டும்
என் இனிய மகனே
இப்படிக்கு,
உன் அன்பு அம்மா


திருமதி M. புவனேஸ்வரி
கணித பட்டதாரி ஆசிரியை,
அரசு முஸ்லீம் மேனிலைப் பள்ளி,
வேலூர்.

அரசு ஊழியர்களுக்கான அனைத்து விடுப்புகள் பற்றிய விபரங்கள்.. ஒரே பக்கத்தில்..

அரசு ஊழியர்களுக்கான அனைத்து விடுப்புகள் பற்றிய விபரங்கள்.. ஒரே பக்கத்தில்..



ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` MOVIE LINK ATTACHED

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடுவதற்க்கான வழிமுறைகள்

▪️ பள்ளி EMIS உள்ளீட்டு தளத்தில், Clubs Option-இல் உள்ள Children Film பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


OR

🖇️ *EMIS Website Link:*
https://emis.tnschools.gov.in/dashboard

🪜 EMIS -> School Login -> School -> Clubs -> Children Film

▪️ Download செய்தும் காண்பிக்கலாம். அப்படியே Play செய்தும் காண்பிக்கலாம். 

நன்றி!
Thanks to ALEX PANDIYAN 

23 January 2026

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


திறன் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இயக்குநரின் இணை செயல்முறைகள்


அனைத்து மாணவர்களுக்கும் இம்மாதத்திற்கான திறன் தேர்வு நடத்தப்படவேண்டும்

28.01.2026முதல்   30.01.2026 வரை

31.01.26 முதல் 07.02.2026 க்குள் மதிப்பெண் உள்ளீடு செய்யவும்.




Teacher Recruitment Board annual plan 2026


Teacher Recruitment Board annual plan 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2026

திருக்குறள்: 

குறள் 249: 

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம். 

விளக்க உரை: 

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

பழமொழி :
One step each day changes everything. 

தினமும் ஒரு அடி அனைத்தையும் மாற்றும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதே போல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மன்ட் பிராய்டு

பொது அறிவு : 

01.காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?


மயிலாடுதுறை - பூம்புகார் 
Mayiladuthurai -Poompuhar


02.இன்சுலினை சுரக்கும் உறுப்பு 
எது?

கணையம் -pancreas

English words :

plaintively-sadly

gloomy-depressing

தமிழ் இலக்கணம்: 

 பொருள்கள் –பொருட்கள் எது சரி என்று பார்ப்போமா? 
இதற்கு ஒருமை பன்மையின் இலக்கண விதியை முதலில் தெரிந்து கொள்வோம். 
குறிலுக்கு அடுத்ததாக வரும் ல்,ள் சொற்கள் பன்மைக்கு மாறும் போது ல் 'ற்' ஆகவும், ள் 'ட்' ஆகவும் மாறும் 
எ.கா –கல் –கற்கள்
சொல் –சொற்கள்
முள் –முட்கள்
புள்.  –புட்கள்
ஆனால் இரண்டு குறில் எழுத்துக்களை அடுத்து வரக்கூடிய ல், ள் ஆகிய எழுத்துக்கள் பன்மையில் எழுதும் போது கள் விகுதி மட்டும் சேர்ந்து வரும்.
எ.கா –விரல் –விரல்கள்
குறள் –குறள்கள்
எனவே பொருள்கள் என்பது தான் சரி.
ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்





நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன் சுருக்கம் இதோ

”நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!” 
நீதிக்கதை

 சேவலும் இரத்தினக்கல்லும்



ஒரு சேவல் தனக்குத் தேவையான உணவை குப்பையைக் கிளறித் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனை பார்த்த சேவலின் குஞ்சு ஒன்று சேவலின் அருகே வந்து ஆவலுடன் அந்தக் கல்லை திருப்பி போட்டது. உடனே சேவல் வருத்தமாக இந்தக் கல் எனக்கு கிடைத்ததனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அதுவே ஒரு இரத்தின வியாபாரியின் கைக்கு கிடைத்திருந்தால் இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று அவனுக்கு தெரிந்திருக்கும். எனக்கு இந்தக் கல் கிடைத்ததைக் காட்டிலும் இந்த குப்பையிலிருந்து ஒரு தானியம் கிடைத்திருந்தால் அதுவே எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாதப் பொருள் என்று கூறியது சேவல். 



நீதி :

எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.

இன்றைய செய்திகள்

23.01.2026

⭐திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு. சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

⭐நியூசிலாந்து மலையடிவாரத்தில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த சுற்றுலா முகாம்கள் பலர் மாயம்.

⭐இந்தியாவில் குருகிராமில் தனது முதல் பல்கலைக்கழக வளாகத்தை அமைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் மேலும் 9 கிளைகளை ஆரம்பிக்க உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Today's Headlines

⭐A Thiruvarur schoolgirl was invited to participate in the Republic Day celebrations in Delhi. She wrote an article about a woman named Neera Arya, who served in Subhas Chandra Bose's army during the freedom struggle. Vaigayoshana will be awarded a medal and Rs. 10 thousand in cash. 

⭐A terrible landslide in the foothills of New Zealand. Many people are missing from tourist camps buried in the soil.

⭐The British government, which set up its first university campus in Gurugram, India, is set to open 9 more branches in India.

 SPORTS NEWS 

🏀Afghanistan's Mujibur Rahman took 4 wickets in the 2nd T20I against West Indies. He became the 3rd player to take a hat-trick in 3 T20Is


JOIN KALVICHUDAR CHANNEL