t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 June 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.2026


திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:435

குறள்: 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 

பொருள்:

  குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும் .

பழமொழி :
A contended mind is a continual feet

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .

 2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.

பொன்மொழி : 

"நீங்கள் உலகில் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்.""மகாத்மா காந்தி

Thought for the Day :

"Be the change that you wish to see in the world."

பொது அறிவு : 

1. உயிர் காக்கும் ஹார்மோன் எது? 

கார்டிசோல். 

2 . எந்த தனிமம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது?

கோபால்ட் -60

English words :

Arrived - reached the place,வந்து சேர்தல்.          

Profession - Job or work, தொழில்.

புவியியலும் சுற்றுசூழலும் :

"உலகம் பொதுவாக 7 கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது . Asia (ஆசியா)

Africa (ஆப்பிரிக்கா)

North America (வட அமெரிக்கா)

South America (தென் அமெரிக்கா)

Antarctica (அண்டார்டிகா)

Europe (ஐரோப்பா)

Australia (ஆஸ்திரேலியா) ஆகும்"

NMMS :

SAT - SCIENCE

ஒரு கம்பியின் வழியே 60 கூலூம் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது??

மின்னூட்டம் q.      = 60 கூலூம்

நேரம் t.                     = 2 நிமிடம் ×  60விநாடிகள் 

                                    = 120 விநாடிகள்

    மின்னோட்டம் l = q/  t = 60C/120s = 0.5 A               

   (1) 0.5 ஆம்பியர்                  

 (2) 0.1 ஆம்பியர்                          

(3) 0.25 ஆம்பியர்                      

(4) 120 ஆம்பியர்                                

 விடை: (1) 0.5 ஆம்பியர்

ஜூன் 23

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
நீதிக்கதை

அம்மாவின் அறிவுரை. 

கண்ணனூர் என்ற கிராமத்தில் ஹரீஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அம்மா, அப்பா எப்போதும் நல்ல அறிவுரைகளைக் கூறுவார்கள். ஆனால் ஹரீஷ்அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் தன் விருப்பப்படி நடந்துகொள்வான்.

ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது, நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரையில் விளையாடச் சென்றான். செல்லும் முன் அவனுடைய அம்மா, “மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு போகாதே, அது ஆபத்தான இடம்” என்று எச்சரித்தார். ஆனால் ஹரீஷ் அதைக் கவனிக்கவில்லை.

விளையாடிக்கொண்டிருந்தபோது அவன் தவறி வழுக்கி விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனை காப்பாற்றினார்.

வீட்டிற்கு வந்த ஹரீஷ், அம்மாவின் அறிவுரையை மதிக்காமல் நடந்ததற்காக வருந்தினான். “அம்மா, இனிமேல் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பேன்” என்று கூறினான்.

அதன் பிறகு அவன் பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடக்கத் தொடங்கினான். அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.

நீதி: பெற்றோரின் அறிவுரையும் அன்பும் நம் நலனுக்காகவே இருக்கும்; அவர்களை மதித்து நடக்க வேண்டும். 🌷👨‍👩‍👦 

இன்றைய செய்திகள்

23.06.2026

🗒️மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக என்.டி.ஏ (NTA) தலைவர் அறிவித்துள்ளார்.

🗒️விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கான தினசரி உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

🗒️இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம், ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெறவுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி.

🏀 உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் பரிசு.

Today's Headlines

🗒️ The Chairman of the National Testing Agency (NTA) has announced that the results for students who appeared for the re-examination will be released soon.

🗒️ Minister Aadhav Arjuna has announced an increase in the daily food allowance for boys and girls staying and studying in sports hostels.

🗒️ Under India's presidency, the meeting of Energy Ministers of the BRICS member nations for the year 2026 will be held in Gurugram, Haryana.

Sports News

🏀 Asian Relay Championships: The Indian women's team created history by winning the gold medal.

🏀 At the World Cup Boxing Championship, an Indian woman boxer was awarded the gold medal.


22 June 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.06.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:434

குறள்:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   

பொருள்:

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

பழமொழி :
A cat may look at a king.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .

 2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.

பொன்மொழி : 

யோகா செய்வோம்; நலமான வாழ்வை உருவாக்குவோம்.

Thought for the Day :

Yoga is not about touching your toes; it is about what you learn on the way down."

பொது அறிவு : 

1. பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளியேறும் நச்சு வாயு எது?

டையாக்சின். 

2. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி எது? 

எண்டோசல்பான்.

English words :

Generate – Produce, உருவாக்கு. 

Choose - select,தேர்ந்தெடு

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியின் வயது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகள்.
பூமி ஒரு முறை சுழல 24 மணி நேரம் ஆகிறது.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365¼ நாட்கள் ஆகின்றன.
உலகின் மிகப்பெரிய பெருங்கடல் Pacific Ocean ஆகும்.

NMMS :

SAT - SCIENCE

1. பொருந்தாததைக் கண்டுபிடி 

(1) மின் விளக்கு 

(2)மின்சார மணி 

(3) வெந்நீர் கொதிகலன் 

(4) மின் சலவைப் பெட்டி 



விடை: (2) மின்சார மணி

நீதிக்கதை

 “பொறுமையே வெற்றியின் வழி”

ஒரு பள்ளியில் கார்த்திக் என்ற மாணவன் படித்தான். அவன் எதையும் உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாள் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டான். முதல் முறையிலேயே அவன் ஓவியம் சிறப்பாக வரவில்லை.

“என்னால் முடியாது!” என்று சோர்ந்து போனான். அப்போது அவனுடைய ஆசிரியர், “பொறுமையுடன் தொடர்ந்து பயிற்சி செய். வெற்றி கண்டிப்பாக வரும்” என்றார்.

அதன்பிறகு கார்த்திக் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி ஓவியம் வரையப் பயிற்சி செய்தான். சில மாதங்களுக்குப் பிறகு நடந்த போட்டியில் முதல் பரிசை வென்றான்.

அப்போது அவன், “வெற்றி உடனே கிடைக்காது; பொறுமையும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்” என்பதை உணர்ந்தான்.

நீதி:

🌱 “பொறுமையே வெற்றியின் வழி.”

🌱 “தொடர்ந்த முயற்சியும் பொறுமையும் வெற்றியைத் தரும்.”

இன்றைய செய்திகள்

22.06.2026

🗒️யோகா தினம்  ஜூன் 21., அனைத்து மக்கள் வாழ்விலும் யோகா அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

🗒️திருவள்ளூரில் நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

🗒️உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 *விளையாட்டுச் செய்திகள்* 
🏀நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது

🏀டைமண்ட் லீக் தடகளம்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்
இலங்கையின் ருமேஷ் தரங்கா முதலிடம் பிடித்தார்.

Today's Headlines

🗒️ International Yoga Day – June 21: Prime Minister Narendra Modi emphasized that yoga should become a part of the daily lives of all people.

🗒️ In the ammonia gas leak accident in Tiruvallur, financial assistance of ₹2 lakh each has been announced for the affected families.

🗒️ Scientists have discovered the world’s largest underground thermal lake in southern Albania.

Sports News

🏑 In the Nations Cup Hockey Tournament, India defeated New Zealand and created history by winning the championship title.

🏃 Diamond League Athletics: Neeraj Chopra had a disappointing performance, while Rumesh Tharanga of Sri Lanka secured the first position


20 June 2026

ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" - Direct Download Link

ஜூன் மாத சிறார் திரைப்படம் – "தி லிட்டில் பிரின்சஸ் (The Little Princess)"

"தி லிட்டில் பிரின்சஸ் (The Little Princess)" என்பது உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரான்சிஸ் ஹாட்சன் பர்னெட் (Frances Hodgson Burnett) எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறந்த சிறார் திரைப்படமாகும்.

இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு அன்பு, தன்னம்பிக்கை, கருணை, பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற உயர்ந்த வாழ்க்கை மதிப்புகளை கற்றுத்தருகிறது.

திரைப்படக்கதை

சாரா க்ரூ (Sara Crewe) என்ற புத்திசாலி மற்றும் அன்பான சிறுமி தனது தந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள்.

ஒருநாள் அவரது தந்தை போருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் சாரா ஒரு விடுதி பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.

தொடக்கத்தில், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அனைவராலும் சிறப்பாக நடத்தப்படுகிறாள்.

ஆனால், போரில் அவரது தந்தை காணாமல் போனதாக தகவல் வந்ததும், சாராவின் வாழ்க்கை முழுமையாக மாறிவிடுகிறது.

பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தாலும், அவள் தனது நம்பிக்கையையும் நல்ல மனதையும் இழக்கவில்லை.

"ஒவ்வொரு குழந்தையும் ஒரு இளவரசி அல்லது இளவரசன் தான்" என்ற எண்ணத்தோடு அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்கிறாள்.

இறுதியில், அவளது பொறுமையும் தன்னம்பிக்கையும் வெற்றி பெற்று, தந்தையுடன் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியான தருணம் ஏற்படுகிறது.
இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு கற்பிக்கும் வாழ்க்கைப் பாடங்கள்

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.

பணத்தை விட நல்ல குணமே முக்கியம்.

அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை வெற்றியை உருவாக்கும்.

 பொறுமையும் கருணையும் வாழ்க்கையை அழகாக்கும்.

இத்திரைப்படத்தைக்  காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். 

19 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.06.2026


திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:433

குறள்: 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

பொருள்:

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

பழமொழி :
Distance lends enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டும் அல்ல; நல்ல மனிதராக வாழ கற்றுத்தரும் ஒளிவிளக்கு."" 📚✨

Thought for the Day :

Every lesson learned is a step closer to your dreams.

பொது அறிவு : 

1. செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று கருதப்படுபவர் யார்? 

ஜான் மெக்கார்தி. 

2. சதிஷ் தவான்  விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் எது? 

ஸ்ரீஹரிகோட்டா.

English words :

Determine – Decide, தீர்மானி.

Emphasize – Highlight, வலியுறுத்து

NMMS :

ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில், அம்முக்கோணத்தின் மூன்றாவது பக்க அளவு என்ன?    

 (1) 3 செ.மீ      (2) 1 செ.மீ     

 (3) 11 செ.மீ      (4) 9 செ.மீ            

விடை: (1) 3 செ.மீ

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்திய அரசியலமைப்பு 26 நவம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.
நீதிக்கதை

 மரமும் காற்றும்

 ஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரமும், சில நாணல் புற்களும் இருந்தன. 

ஒரு நாள் பலத்த காற்று வீசியது. பெரிய மரம் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், "நான் எவ்வளவு வலிமையானவன்! என்னால் இந்த காற்றை எதிர்க்க முடியும்" என்று அகம்பாவத்துடன் கூறியது.

ஆனால், சிறிய நாணல் புற்கள் காற்று வீசும் திசைக்கேற்ப வளைந்து கொடுத்தன. காற்று நின்ற பிறகு, பெரிய மரம் புயலால் வேரோடு சாய்ந்து கிடந்தது. ஆனால், நாணல் புற்கள் எந்த சேதமும் இல்லாமல் நிமிர்ந்து நின்றன.

நீதி (Moral): வளைந்து கொடுக்கத் தெரிந்தவர்களே வாழ்வின் சோதனைகளை வெல்ல முடியும்; அகந்தை அழிவைத் தரும்.

இன்றைய செய்திகள்

19.06.2026

*தலைப்புச் செய்திகள்*
🗒️21-ம் தேதி நீட் மறு தேர்வு - வார நாட்கள் அட்டவணையில் ரெயில்கள்  இயக்கப்படும் என இரயில்வே துறை அறிவிப்பு.

🗒️ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🗒️பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையில் உலக அமைதிக்கான வழி உள்ளது’ - மேதகு ஜனாதிபதி திரவுபதி முர்மு 
தெரிவித்துள்ளார்.

🗒️அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*
🏀மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டி; உருகுவேவை வீழ்த்திய இந்தியா.

🏀 டி20 உலகக் கோப்பை... 
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.

Today's Headlines

🗒️ NEET Re-Examination on June 21 – The Railway Department has announced that trains will operate according to the weekday schedule.

🗒️ The Directorate of Public Health has issued a circular to all District Health Officers directing them to carry out integrated mosquito control measures without delay.

🗒️ “There is a path to world peace in the way of life of tribal communities,” stated President Droupadi Murmu.

🗒️ SpaceX surpasses Amazon to become the world's 5th largest company.

Sports News

🏀 Women's National Cup Hockey Tournament: India defeated Uruguay.

🏀 T20 World Cup: India won the series by defeating Afghanistan.


18 June 2026

TAPSGovernment Order (G.O.Ms.No.111, dt 16.06.2026) இன் முக்கியப் பகுதிகள் தமிழாக்கம்


TAPS

Government Order (G.O.Ms.No.111, dt 16.06.2026) இன் முக்கியப் பகுதிகள் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தலைப்பு: ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான வாழ்வாதார ஆதரவு – இடைக்கால ஊதியம் (Interim Payout) வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.  
முக்கிய உத்தரவுகள் மற்றும் நடைமுறைகள் (G.O. சுருக்கம்):

1. நோக்கம் மற்றும் பின்னணி:
01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
இந்தத் திட்டத்திற்கான விரிவான விதிகள் மற்றும் நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஓய்வுபெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக நடவடிக்கையாக இந்த மாதாந்திர இடைக்கால ஊதியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

2. தகுதி வரம்புகள் (யார் யாருக்குப் பொருந்தும்?):
01.04.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு வழக்கமான ஊதிய விகிதத்தில் (Regular scale of pay) பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்த அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.  
01.01.2026 அன்று பணியில் இருந்து, அதற்குப் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலத்தை முடித்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள் (Superannuation) அல்லது பணியின் போது இயற்கை எய்தியவர்களின் (Death-in-harness) குடும்பத்தினருக்கு இது பொருந்தும்.  

3. யாருக்குப் பொருந்தாது?
வயது முதிர்வு ஓய்வு அல்லது பணியின் போது மரணம் தவிர்ந்த இதர வழிகளில் பணியிலிருந்து விலகியவர்கள்.  
தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(பி)-இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்கள்.  
01.01.2026-க்கு முன்னதாகவே அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.  

4. இடைக்கால ஊதியம் கணக்கிடும் முறை:
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு:
கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) 30% அல்லது ₹10,000 (எது அதிகமோ அது) மற்றும் அதனுடன் 60% அகவிலை நிவாரணம் (Dearness Relief) சேர்த்து மாதாந்திர இடைக்கால ஊதியமாக வழங்கப்படும்.  
பணியின் போது மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு:
மேற்கண்ட கணக்கீட்டின்படி (அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ₹10,000, எது அதிகமோ அது + 60% அகவிலை நிவாரணம்) மாதாந்திர இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  
ஓய்வூதியதாரர் இறந்தால்:
இடைக்கால ஊதியம் பெற்று வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்தால், அவரது தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கு அவர் பெற்று வந்த இடைக்கால ஊதியத்தில் 60% தொகையானது இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  

5. வெளியேறும் விருப்பத்தேர்வுகள் (Exit Options):
அரசு ஊழியர்கள் TAPS திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால் இரண்டு கட்ட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன:
முதல் கட்டம் (உடனடி விலகல் - Stage-I): Comprehensive TAPS விதிகளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக திட்டத்திலிருந்து விலக விரும்பினால், படிவம்-III / IV (Form-III/IV) மூலம் CPS இறுதித் தீர்வுப் பிரகடனத்தை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களின் CPS கணக்கில் உள்ள தொகை (ஊழியர் + அரசின் பங்களிப்பு மற்றும் வட்டி) தற்போதைய CPS வழிகாட்டுதலின்படி முழுமையாகத் தீர்வு செய்யப்படும். இந்த முடிவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது; இதன் பிறகு TAPS திட்டத்தின் எந்தப் பலன்களையும் கோர முடியாது.  
இரண்டாம் கட்டம் (விதிகள் அறிவிக்கப்பட்ட பின் விலகல் - Stage-II): தற்போது இடைக்கால ஊதியப் பலன்களைப் பெறத் தொடங்குபவர்கள், எதிர்காலத்தில் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இத்திட்டத்திலேயே நிரந்தரமாக நீடிக்கலாமா அல்லது இதுவரை பெற்ற இடைக்கால ஊதியத் தொகையை (வட்டியுடன் சேர்த்து) கழித்துக் கொண்டு மீதமுள்ள முழு CPS தொகையையும் பெற்றுக்கொண்டு வெளியேறலாமா என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.  

6. காலக்கெடு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
ஏற்கனவே (01.01.2026 முதல் இந்த அரசாணை வெளியான தேதிக்குள்) ஓய்வு பெற்றவர்கள் அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர், இந்த அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் (Form-I / II) தங்கள் விருப்பப் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  
இனிமேல் ஓய்வு பெறுபவர்கள் அல்லது மரணமடைபவர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற/மரணமடைந்த தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  
இந்த இடைக்கால ஊதியம் தற்காலிகமானது மற்றும் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இறுதிப் பலன்கள் கணக்கிடப்பட்டு, இந்த இடைக்காலத் தொகையோடு சரிசெய்யப்படும் (Arrears or Recovery).

ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள்!!

ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள்!!

TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவு - இடைக்கால பணப்பட்டுவாடா -ஆணைகள் வெளியீடு

ஓய்வூதியம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவு - இடைக்கால பணப்பட்டுவாடா -ஆணைகள் வெளியீடு

JOIN KALVICHUDAR CHANNEL