t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 September 2026

`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!


தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசனிடம் பேசினோம்:

“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணினி பாடமானது முக்கியமானது என மத்தியக் கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) என்ற திட்டத்தைக் கடந்த 2018-2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவை வளர்க்கவும், தகவல் தொடர்புத் துறை பற்றி பள்ளி வயது முதலே தெரிந்துகொள்ளச் செய்யவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் தங்களது பள்ளிகளில் நடைமுறைப்படுத்திவிட்டன. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவில் கணினி அறிவியலை 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆறாவது பாடமாகக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.

ஆனால், தமிழக அரசானது இதில் இதுவரை எந்த ஆர்வமும் காட்டவில்லை. 2021 முதல் தற்போது வரை கணினி அறிவியலுக்காக மத்திய அரசானது தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹400 கோடிக்கும் மேல் ஒதுக்கியும், அதைச் சம்பந்தப்பட்ட பாடத்திற்குப் பயன்படுத்தவில்லை. இல்லம் தேடி கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட சரியாக முடிக்காமல் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் தரவுப் பதிவு (Data Entry) செய்பவர்களுக்கும் கடந்த திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த நிதியைப் பயன்படுத்தியது.

👉குமரேசன்:

மத்திய அரசு கணினி அறிவியலுக்காக ஒதுக்கிய இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் வந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் அரசே இதை முறைப்படுத்தி கணினிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் செய்முறைத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பயன்படுகின்றனவே தவிர, முழுமையாகக் கணினியைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில், கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்ற சாதாரண விஷயம்கூட கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியவில்லை.

கல்வியில் தமிழகம்தான் முன்னிலை எனப் பெருமைகொள்ளும் அரசானது இந்த விஷயத்தில் மட்டும் பின்தங்கியே நிற்கிறது. எனவே, மற்ற பாடங்களைத் தனிப் பாடமாகப் கற்பிப்பது போல கணினி அறிவியலையும் சேர்ப்பதோடு, அதற்கான தகுதியான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்” என்றார் கோரிக்கையாக.

இது குறித்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பால் ஜெயகுமாரிடம் கேட்டோம்:

“பள்ளிப் பருவத்தில் நாம் படிக்கும் எந்த ஒரு படிப்பும் எதிர்காலத்தில் நமக்கு உதவத்தான் போகிறது; அது கணினிப் படிப்பிற்கும் பொருந்தும். மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் கணினியைப் படிக்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை முற்றிலும் முரணானது. இதில் தமிழ் வழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு படிக்கும் ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கணினியை ஒரு பாடமாக வைத்து, அதைப் பற்றிய புரிதலைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

👉பால் ஜெயகுமார்:
ஆனால், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. இதற்காகத்தான் மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைக் கொண்டு வந்தது. கிராமப்புற ஏழை மாணவர்கள் கணினி அறிவியலில் மேம்படுவதோடு, பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சிறந்து விளங்க கணினி ஒரு அடிப்படைக் கருவியாக இருக்கும் என்பதால் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் கைப்பேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருந்தாலும், அடிப்படையான கணினி விஷயங்கள் தெரியாததால் வேலைக்குச் செல்லும்போது பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். எனவே, அரசானது கணினி அறிவியலை ஊக்குவிக்க மத்திய அரசின் இத்தகைய திட்டங்களை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தித் தர வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

👉ராஜ்மோகன்:


பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம்:

”கல்வியை ஊக்குவிப்பதும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதும்தான் தற்போதைய அரசின் பிரதான குறிக்கோள். கணினி அறிவியல் பாடத்திற்காக மத்திய அரசானது நிதியைப் போதுமான அளவு வழங்கவில்லை. வழங்கப்பட்ட நிதியை இதற்கு முந்தைய அரசு தற்காலிகப் பணியாளர்களுக்கும் ஆய்வகப் பராமரிப்பிற்கும்தான் பயன்படுத்தியது. தற்போதைய ஆண்டிற்கான நிதியைக் கல்வித் துறை சார்பில் கோரியிருக்கிறோம். ஆனால், அந்த நிதி இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தாமல் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட கணினிப் பாடத்திற்கே பயன்படுத்துவோம்” என்றார்.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் , 
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:492

குறள்:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 

பொருள்:

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

பழமொழி :
Once bitten, twice shy.

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளைஞர்களின் உழைப்பும் திறமையும் இணைந்தால், நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்.”

Thought for the Day :

Engineers’ Day: “Innovate today to build a better tomorrow.”

பொது அறிவு : 

1. தென்னாட்டின் ஜான்சி ராணி என்றழைக்கப்படுபவர் யார்? 

அஞ்சலை அம்மாள். 

2. தென்னாட்டின் பகத்சிங் என்றழைக்கப்படுபவர் யார் ? 

வாஞ்சிநாதன்

English words :

1. Lucid – Easy to understand, எளிதில் புரியக்கூடிய.


2. Proficient – Highly skilled, திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இதற்காக கிராம மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். மக்கள் பெரிய தொழிற்சாலைகளை மட்டும் சாராமல், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும் என்றார்.கதர் மற்றும் கைத்தறி
கதர் நூற்பு, நெசவு போன்ற கிராமக் கைத்தொழில்களை ஊக்குவித்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார்.

NMMS :

SAT 

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் _____

(1) சென்னை

(2) டெல்லி 

(3) மும்பை

(4) கொல்கத்தா

விடை:  (2) டெல்லி

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
நீதிக்கதை

 நேரம் தவறாமை

ஒரு அழகான காட்டில் அணில், முயல், குரங்கு ஆகிய மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆந்தை ஆசிரியராக இருந்தார்.

ஒருநாள், மறுநாள் காலை காட்டில் ஒரு முக்கியமான அறிவுப் போட்டி நடைபெறும் என்று ஆந்தை ஆசிரியர் அறிவித்தார். போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும், அனைவரும் 7:45 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

அணில் அன்று இரவே தனது புத்தகங்களையும் தேவையான பொருட்களையும் தயார் செய்து வைத்தது. காலையில் சீக்கிரமாக எழுந்து, நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றது.

முயலும் சரியான நேரத்தில் வந்தது. ஆனால் குரங்கு, “இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று நினைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் போனது.

குரங்கு அவசரமாக ஓடி வந்தபோது போட்டி தொடங்கிவிட்டது. அதனால் முதல் சுற்றில் கலந்துகொள்ள முடியவில்லை.

போட்டி முடிந்ததும், ஆந்தை ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்:

“நேரத்தை மதிப்பவன் தனது வாழ்க்கையையும் மதிக்கிறான். கடந்துபோன நேரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது. எனவே, ஒவ்வொரு செயலையும் சரியான நேரத்தில் செய்வது மிகவும் முக்கியம்.”

அப்போது குரங்கு தனது தவறை உணர்ந்தது. இனிமேல் எந்த வேலையையும் தாமதப்படுத்தாமல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது.

🌟 நீதி:

“நேரம் பொன்னைவிட மதிப்புமிக்கது; நேரத்தை மதிப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.”

 மாணவர்களுக்கான நினைவுச் சொல்:

“இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளாதே; நேரம் தவறாமல் செய்!”

இன்றைய செய்திகள்

11.09.2026

🗒️சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மூலம்
263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், பள்ளியிலும்  சேர்க்கப்பட்டுளனர்.

🗒️தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம்  எனத் தமிழக அரசு விளக்கம்.

🗒️வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.

🗒️பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில்  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு நடந்தது. விழாவில் நிதியுதவி , சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

Today's Headlines

🗒️ In the Chennai Corporation, a special camp was held for children with disabilities who were not attending school. Through this camp, 263 children were admitted to vocational training centres and schools.

🗒️ The Tamil Nadu Government said that Chief Minister Joseph Vijay is travelling to the United Kingdom to attract more industrial investments.

🗒️ Due to the impact of the Gulf War, the price of crude oil has again crossed 100 dollars per barrel. So, petrol and diesel prices may increase in India.

🗒️ The BRICS Summit is going to be held in Delhi. World leaders are expected to visit India to participate in the summit.

🏀 Sports News

🏀 A felicitation ceremony was held yesterday at Nehru Stadium, Chennai, for Tamil Nadu squash players. At the event, Minister Aadhav Arjuna presented financial assistance and certificates to the players.


10 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:491

குறள்:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.  


பொருள்:

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம்.பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டாம்.

பழமொழி :
Old is gold.

பழமையே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கைத்தொழில் கற்ற இளைஞன், தன் கைகளால் தன் எதிர்காலத்தை வடிவமைக்கிறான்.”

Thought for the Day :

You can learn from yesterday and prepare for tomorrow, but don’t forget to actually live today.

பொது அறிவு : 

1. தென்னாட்டின் திலகர் என்றழைக்கப்படுபவர் யார்? 

வ. உ .சிதம்பரனார். 

2. தென்னாட்டின் சாக்ரடீஸ் என்றழைக்கப்படுபவர் யார்? 

பெரியார்.

English words :

1. Feasible – Possible to do, செய்யக்கூடியது.


2. Impartial – Fair to everyone, பாரபட்சமற்றவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

காந்தியடிகளின் கிராம சுயாட்சி (Gram Swaraj) என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் அல்ல. 

ஒவ்வொரு கிராமமும்:

தன்னிறைவு + உள்ளூர் வேலைவாய்ப்பு + உள்ளூர் உற்பத்தி + மக்களின் பங்கேற்பு + சுயநிர்வாகம் என்ற அடிப்படையில் வளர வேண்டும் என்பதாகும்.

NMMS :

SAT 

மனிதக் கண்ணால் __________________ மில்லியன் நிறங்களை வேறுபடுத்திக் காண இயலும். 

(1) 12-24.

 (2) 10-20. 

(3) 1-10. 

(4) 10-12. 

விடை: (4) 10-12.

நீதிக்கதை

 பிடிவாதத்தின் விலை


ஒரு சிறிய ஊரில் மித்ரா என்ற பெண் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் புத்திசாலியும் திறமையானவளும்தான். 


ஆனால் அவளிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது—தனக்குப் பிடித்ததுதான் சரி என்று நினைப்பது.

பெற்றோர் ஏதாவது அறிவுரை கூறினால்,

“எனக்குத் தெரியும்! நீங்கள் எப்போதும் என்னையே குறை சொல்கிறீர்கள்!” என்று கோபமாகப் பேசுவாள்.


ஒருநாள் மித்ரா தனது நண்பர்களுடன் வெளியே செல்ல முடிவு செய்தாள். அன்று மாலை வீட்டிற்கு சீக்கிரம் வரும்படி அவளுடைய அம்மா கூறினார்.

“மித்ரா, இன்று மழை வரப்போகிறது. சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிடு. தாமதமாக வெளியே இருக்க வேண்டாம்,” என்றார் அம்மா.


ஆனால் மித்ரா, “எனக்கு ஒன்றும் ஆகாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் அறிவுரை சொல்லாதீர்கள்!” என்று கோபமாகப் பேசிவிட்டு சென்றாள்.


மாலை நேரம் ஆனது. வானம் இருண்டு, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் மித்ரா இன்னும் வீடு திரும்பவில்லை.


நேரம் செல்லச் செல்ல அவளுடைய பெற்றோரின் கவலை அதிகரித்தது. அம்மா மீண்டும் மீண்டும் வாசலுக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா மித்ராவின் நண்பர்களுக்கு தொலைபேசி செய்து அவள் எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார். 


மழையையும் பொருட்படுத்தாமல், அப்பா அவளைத் தேடி அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்றார். அம்மா வீட்டில் இருந்து அவள் பாதுகாப்பாக வர வேண்டும் என்று கவலையுடன் காத்திருந்தார்.


“காலையில் என்னிடம் கோபமாகப் பேசினாலும் பரவாயில்லை... என் மகள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்தால் போதும்,” என்று அம்மா கண்ணீருடன் கூறினார்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, மித்ரா தனது நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அவள் வீட்டிற்கு வந்தபோது, வாசலில் கவலையுடன் காத்திருந்த பெற்றோரைப் பார்த்தாள்.

அவள் அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றாள்.


அம்மா கோபப்படாமல், “நீ பாதுகாப்பாக வந்துவிட்டாயே, அதுதான் எங்களுக்கு முக்கியம்,” என்று மட்டும் கூறினார்.

அந்த வார்த்தைகள் மித்ராவின் மனதைத் தொட்டன.


“நான் அவர்களிடம் கோபமாகப் பேசினேன். அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ஆனால் நான் தாமதமானதும், அவர்கள் கோபத்தைப் பற்றி நினைக்காமல் என்னுடைய பாதுகாப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறார்கள்,” என்று அவள் எண்ணினாள்.


அப்போது பாட்டி மித்ராவிடம் மெதுவாகக் கூறினார்:

“கண்ணே, பெற்றோர் சொல்வதெல்லாம் கட்டளை அல்ல; பல நேரங்களில் அவர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாதுகாப்பான வழி. கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாகச் சொல்லலாம். ஆனால் அவர்களை எதிர்த்து, காயப்படுத்தும் வார்த்தைகளில் பேசுவது நல்லதல்ல.

உனக்காக வாழும் மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பிடிவாதம் நம்மை உயர்த்தாது; அன்பானவர்களின் மனதை மட்டுமே காயப்படுத்தும்.”


மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது.

“பாட்டி, இனிமேல் எனக்குப் பிடித்ததை மட்டும் நினைக்காமல், அம்மா அப்பாவின் அக்கறையையும் புரிந்துகொள்வேன். அவர்களுடன் கருத்து வேறுபாடு வந்தாலும் மரியாதையாகப் பேசுவேன்,” என்றாள்.


அன்று முதல் மித்ரா தனது பிடிவாதத்தைக் குறைத்து, பெற்றோரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசத் தொடங்கினாள்.


🌸 நீதி:


பெற்றோர்களின் அறிவுரையின் பின்னால் அவர்களின் அன்பும் அக்கறையும் இருக்கும். கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரியவர்களை எதிர்த்து பேசாமல் மரியாதையுடன் பேசுவதே நல்ல பண்பு.

இன்றைய செய்திகள்

10.09.2026

🗒️தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🗒️இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்
போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்.

🗒️கடல்சார் ஆய்வில் புதிய மைல்கல்: ‘சாகர் மந்தன்’ ஆய்வுக் கப்பல் செயல்பாட்டை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
தொடங்கி வைத்தார்.

🗒️விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திய அண்டார்டிகா: தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனி அதிகரித்
துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: 2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா... 

🏀ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Today's Headlines

🗒️ The quarterly examination timetable for government, government-aided, and private schools in Tamil Nadu has been released.

🗒️ Minister Rajmohan distributed prizes to the winners of the State Art Competitions for young artists.

🗒️ New milestone in marine research: Union Minister Jitendra Singh launched the operations of the research vessel ‘Sagar Manthan’.

🗒️ Antarctica surprises the scientific world: Antarctica temporarily gained 695 billion tonnes of ice.

🏀 Sports News

🏀 Para World Archery: India won two gold medals.

🏀 The Indian team comprising Harvinder Singh and Vijay Chandi defeated Slovakia 6–2 to win the gold medal.


9 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:490

குறள்:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பது போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பழமொழி :
Nothing is impossible to a willing heart.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“உன் திறமைக்கு எல்லை இல்லை; உன் முயற்சிக்கு மட்டும் எல்லை வைக்காதே.”

Thought for the Day :

“Your future is shaped by what you learn, practise, and create today.” 🌱

பொது அறிவு : 

1. 10 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 கோனார் சூரிய கோயில் (ஓடிஸா) 

2. மனித உடலில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது? 

60 சதவீதம் 

English words :

1. Coherent – Clear and logical, தெளிவான மற்றும் தர்க்கரீதியான.


2. Discreet – Careful and private, ரகசியம் காப்பவர் / நிதானமானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தொட்டபெட்டா பகுதி புல்வெளிகள், சோலைக்காடுகள் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள தொட்டபெட்டா சிகரக் காட்சி முனையம் (Doddabetta Peak Viewpoint) சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.இது தமிழ்நாடு சுற்றுலாவின் முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

NMMS :

MAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ___________ முட்டைகள் இடும்.

 (1) 600. 

 (2) 500.

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

செப்டம்பர் 09

மா சே துங்  அவர்களின் நினைவுநாள்

மா சே துங் (About this soundMao Zedong (உதவி·தகவல்), Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 
கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்
நீதிக்கதை

 நண்பர்களின் அன்பு 

ஒரு அடர்ந்த காட்டில் யானை , மான், குரங்கு, முயல், கிளி ஆகியவை நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் காலை , வழக்கம்போல் எல்லோரும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் மான் மட்டும் வரவில்லை .

“மான் எங்கே போய்விட்டது?” என்று முயல் கவலையுடன் கே ட்டது.

“நேற்று மாலை மானுக்கு உடல்நிலை சரியில்லை என்று கிளி சொன்னது!” என்றது குரங்கு.

உடனே யானை , “அப்படியா? நண்பன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது நாம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கலாமா? வாருங்கள், மானைப் பார்த்து நலம் விசாரிப்போம்!” என்றது.

அனைவரும் மானின் குடிலுக்குச் சென்றனர்.

“மான் நண்பா! எப்படி இருக்கிறாய்?” என்று யானை அன்புடன் கேட்டது.

“உங்களைப் பார்த்ததும் எனக்கு பாதி உடல்நலம் வந்துவிட்டது!” என்று மான் சிரித்தது.

முயல், “உனக்காக இனிப்பான பழங்கள் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

குரங்கு உடனே , “நான் உனக்காக மரத்திலிருந்து பறித்த தேனும் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றது.

அதைப் பார்த்த மான் மிகவும் மகிழ்ந்தது. “நண்பர்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதுதான் உண்மையான அன்பு!” என்றது.

அன்றிலிருந்து காட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை யென்றாலும், ஏதேனும் துன்பம் ஏற்பட்டாலும், எல்லா விலங்குகளும் ஒன்றாகச் சென்று அவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கத் தொடங்கின.

நீதி:

🌷 நாம் அறிந்தவர்களை அன்புடன் சந்தித்து நலம் விசாரிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும்

இன்றைய செய்திகள்

09.09.2026

🗒️மத்திய அரசு வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் காற்று தூய்மையாக உள்ள நகரங்களின் தேசிய தரவரிசை பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சென்னை 35 வது இடத்தில் உள்ளது.

🗒️நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது.

🗒️தமிழ்நாட்டுக்கு காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️இந்தோனேசியா எரிமலை வெடிப்பால் கடும் பாதிப்பு: மீண்டும் இயங்கத் தொடங்கிய விமான நிலையங்கள்.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: ஷீத்தல் தேவி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

🏀அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சரிதா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை எதிர்கொள்கிறார்.

Today's Headlines

🗒️ The Central Government has released the 2026 national ranking of cities with clean air. Chennai is ranked 35th.

🗒️ A postgraduate course in Theatre Arts will be started in Chennai by the Tamil Nadu Government.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing 6,000 cusecs of water to Tamil Nadu.

🗒️ Indonesia was badly affected by a volcanic eruption. Airports have now started operating again.

🏹 Sports News

🏀 Para World Archery: Indian archer Sheetal Devi has reached the final.

🏀 Indian archer Sarita, who lost in the semi-final, will face China’s Wang Shuiding in the bronze medal match.


8 September 2026

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இன்னோசன்ட் திவ்யா IAS நியமனம்!

தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (08.09.2026) வெளியிடப்பட்ட G.O.(Rt.) No.3213 மூலம் பல்வேறு முக்கியத் துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக ஜெ. இன்னசென்ட் திவ்யா, IAS நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான CO-OPTEX-ன் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்தார். பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் பி. சந்திர மோகன், IAS, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 


தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமனம்.
ஆர். லில்லி, IAS – கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர் துறை செயலாளராக மாற்றம்.
டாக்டர் பி. சந்திர மோகன், IAS – வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம்.
இ. சரவணவேல்ராஜ், IAS – எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையராக நியமனம்.
அஜய் யாதவ், IAS – குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக நியமனம்.
எஸ். சிவராசு, IAS – பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமனம்; ஆவின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார்.
எஸ். சிவானந்தம், IAS – நிதித்துறை துணைச் செயலாளராக நியமனம். 

இதுதவிர, என். முருகானந்தம், IAS, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (TANSI) கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகவும்; டி.என். வெங்கடேஷ், IAS, TUFIDCO-வின் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குநராகவும் பணியமர்த்தப்பட உள்ளனர். கே.எஸ். கந்தசாமி, IAS, தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், கவிதா ராமு, IAS, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது, துறையின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:489

குறள்:

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.

பழமொழி :
No smoke with out fire

நெருப்பில்லாமல் புகையாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளமையில் கற்ற திறமை, வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.”

Thought for the Day :

“A skilled generation is the foundation of a strong nation.”

பொது அறிவு : 

1. 50 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

ஹம்பி (கர்நாடகா) 

2. 20 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 எல்லோரா குகை (மகாராஷ்டிரம்)  

English words :

1. Audacious – Bold and brave, துணிச்சலானவர்.


2. Astounding – Very surprising, மிகவும் ஆச்சரியமான.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – தொட்டபெட்டா
உயரம்: சுமார் 2,637 மீட்டர்
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊட்டி நகருக்கு அருகில் அமைந்துள்ளது.“தொட்டபெட்டா” என்ற பெயர் பொதுவாக “பெரிய மலை” என்ற பொருளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

NMMS :

MAT 

ஹைட்ரோஃபோபியா என்பது : 

 (1) நீரைக் கண்டு பயப்படுவது

 (2) ஒலியைக் கண்டு பயப்படுவது 

 (3) பசியின்மை

 (4) தோல் தடிப்பு 

 விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது 

செப்டம்பர் 08

அனைத்துலக எழுத்தறிவு நாள் 

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
நீதிக்கதை

“ஆசிரியரின் அறிவுரை ”

ஒரு பள்ளியில் நிவேதா என்ற மாணவி படித்து வந்தாள். ஒருநாள் ஆசிரியர் வகுப்பில் அனைவருக்கும் ஒரு சிறிய பணியை வழங்கினார். நிவேதா அதைச் சரியாகச் செய்யவில்லை .

ஆசிரியர் அன்பாக, “நிவேதா, இன்னும் கொஞ்சம் கவனமாகச் செய்தால் நன்றாக இருக்கும்,” என்று அறிவுரை கூறினார்.

அதைக் கேட்ட நிவேதா கோபமடைந்து, ஆசிரியரிடம் எதிர்த்து பேசினாள். வகுப்பு முடிந்ததும் அவளுடை ய தோழி அவளிடம், “ஆசிரியர் உன்னைத் தாழ்த்துவதற்காக சொல்லவில்லை, உன் தவறைச் சுட்டிக்காட்டி முன்னேற உதவுவதற்காகத்தான் சொன்னார்,” என்றாள்.

நிவேதா தனது தவறை உணர்ந்தாள். மறுநாள் ஆசிரியரிடம் சென்று, “ஆசிரியரே , நேற்று நான் கோபத்தில் உங்களிடம் எதிர்த்துப் பேசியது தவறு. என்னை மன்னியுங்கள். இனிமேல் உங்கள் அறிவுரையை மதிப்பேன்,” என்றாள்.

ஆசிரியர் மகிழ்ச்சியுடன் நிவேதாவைப் பாராட்டினார்.

🌱 நீதி:

ஆசிரியர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும். அவர்களின் அறிவுரையைப் பொறுமையாக கேட்டு, தவறு இருந்தால் பணிவுடன் திருத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.09.2026

🗒️டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

🗒️அரசு   கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு  இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்... 

🗒️சர்வதேச விமான கண்காட்சிக்காக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்தது.

விளையாட்டுச் செய்திகள்

 🏀 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் காலிறுதியில்  நேருக்கு நேர் மோதும்  நாவேரா மற்றும் ஜெசிகா பெகுலாவே ஆகிய இரு அமெரிக்க வீராங்கனைகள்.

Today's Headlines

🗒️ TNPSC Group 2 and 2A Exam: Candidates can apply online through www.tnpsc.gov.in until September 9.

🗒️ Government Colleges of Education: Applications for the second phase of student admissions can be submitted from today until September 15.

🗒️ Indian Air Force: The Sarang Helicopter Aerobatic Team has reached Egypt to take part in an international air show.

Sports News 🏀

🗒️ US Open: After 10 years, two American players, Navarro and Jessica Pegula, will face each other in the quarter-finals.


7 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:488

குறள்:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பொருள்:

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

பழமொழி :
No Pains ; No Gains.

உழைப்பின்றி ஊதியம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கனவு காணும் இளைஞன் ஒரு படி முன்னேறுகிறான்; திறனை வளர்க்கும் இளைஞன் இலக்கை அடைகிறான்.”

Thought for the Day :

“Skills turn ideas into action and dreams into reality.”

பொது அறிவு : 

1. 200 ரூபாய் நோட்டிற்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்) .

2. 100 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ராணி கி வாவ் (குஜராத்)  

English words :

1. Resourceful – Finds clever ways to solve problems, சமயோசித புத்தி உடையவர்.

2. Punctilious – Great attention to detail and correct behavior, நேர்த்தியான ஒழுக்கமுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.
முக்கிய மலைத்தொடர்கள்:
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
நீலகிரி மலை
சேர்வராயன் மலை
கல்வராயன் மலை
கொல்லிமலை
ஜவ்வாது மலை
ஏலகிரி மலை ஆகும்

NMMS :

MAT 

விதைத் தாவரங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு. வகுப்பு------>துணை வகுப்பு---------> வரிசை. 

 (1) தலாமிஃபுளோரே-------> பாலிபெட்டலே-------> டைகாட்டிலிடனே

 (2) டைகாட்டிலிடனே-------> பாலிபெட்டலே-----------> தலாமிஃபுளோரே

 (3) பாலிபெட்டலே---------> டைகாட்டிலிடனே---------> தலாமிஃபுளோரே 

 (4) பாலிபெட்டலே --------> தலாமிஃபுளோரே-------------> டைகாட்டிலிடனே 

 விடை: (2) டைகாட்டிலிடனே-------------> பாலிபெட்டலே-------------> தலாமிஃபுளோரே

நீதிக்கதை

 “பெரிய இலக்கு”

ஒரு கிராமத்தில் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய சாதனை செய்ய வே ண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த இலக்கை நினைத்தாலே , “இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது?” என்று கவலைப்பட்டான்.

ஒருநாள் அவன் ஆசிரியரிடம் தனது கவலையைச் சொன்னான்.

ஆசிரியர் ஒரு சிறிய விதையை க் காட்டி,

“இந்த விதை இன்று ஒரு பெரிய மரமாகிவிடுமா?” என்று கே ட்டார்.

“இல்லை ஆசிரியரே ,” என்றான் சூர்யா.

“அப்படித்தான் பெரிய இலக்கும். ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்காமல், தினமும் சிறிது சிறிதாக உழைத்தால் பெரிய இலக்கையும் அடையலாம்.” என்றார் ஆசிரியர்.

அன்றிலிருந்து சூர்யா தனது இலக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்கினான். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் முயன்றான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் கனவு நனவானது.

அப்போது சூர்யாவுக்கு ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:

“பெரிய இலக்கை நினைத்து பயப்படாதே ; அதை அடைய ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வை .”

🌸 நீதி: பெரிய இலக்கை அடைய  பொறுமையுடனும் திட்டமிட்ட முறையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் கனவும் நனவாகும்.

இன்றைய செய்திகள்

07.09.2026

🗒️புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🗒️விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. 10 நாட்களில் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்த்தாக மத்திய அரசு தகவல். 

🗒️நவம்பர் 27' சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
 
*விளையாட்டுச் செய்திகள்*

🏀சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Today's Headlines

🗒️ Due to the BRICS Summit in New Delhi, the 57th GST Council meeting, which was planned for September 12, has been postponed.

🗒️ Steps to control price rise: The Central Government said that 4,000 tonnes of onions were sold in 10 days.

🗒️ The United Nations has declared November 27 as the International Day for the Elimination of Child Marriage.

🏀 Sports News

🏀 India’s Satwik Sairaj Rankireddy and Chirag Shetty won the championship title in the China Masters Super 750 International Badminton Tournament.


JOIN KALVICHUDAR CHANNEL