t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -19.08.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:476

குறள்:


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

பொருள்:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

பழமொழி :
Many hands make work light.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

கற்றுக் கொள், திறனை வளர்த்துக் கொள்; எதிர்காலத்தை நீயே உருவாக்கிக் கொள்.

Thought for the Day :

Your talent becomes your strength when you train it with practice.

பொது அறிவு : 

1. மாற்றுத்திறனாளிக்களுக்காக அரும்பணியாற்றிய சிறந்த கலெக்டருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

திரு. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி) 

2. தமிழக அரசின் சார்பில் சுதந்திர தினத்தன்று சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு -2026 பெற்ற மாநகராட்சி எது? 

கோவை.

English words :

1. Articulate – Able to speak clearly, தெளிவாக பேசக்கூடிய.


2. Innovative – Introducing new ideas, புதுமையான.

புவியியலும் சுற்றுசூழலும் :

பாரன் தீவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது.அந்தமான் கடலில், போர்ட் பிளேரிலிருந்து சுமார் 135 கி.மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
தீவின் பரப்பளவு சுமார் 8.3 சதுர கிலோமீட்டர்.“Barren” என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக “வளமற்ற / தாவரங்கள் குறைவான” என்ற பொருளைக் கொண்டது.

NMMS :

MAT 

பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள் _______________________ 

 (1) மாறன் - எயினன்

 (2) மாறன் - ஆதித்தன் 

 (3) சாத்தன் - கணபதி 

 (4) மூர்த்தி - எயினன்

 விடை: (2) மாறன் - ஆதித்தன்

ஆகஸ்ட் 19

உலக புகைப்பட நாள்

உலக புகைப்பட நாள் (World photograph day)புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலக மனிதநேய நாள்

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். 
நீதிக்கதை

 பகிர்ந்தால் பெருகும் மகிழ்ச்சி

ஒரு அழகான கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அன்பானவன். ஆனால் தன்னிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது, அவனுடைய தாய் அவனுக்காக ஒரு சுவையான உணவுப் பெட்டியைத் தயாரித்து கொடுத்தாள். அதில் அருணுக்குப் பிடித்த இனிப்பும், பழங்களும் இருந்தன.

மதிய உணவு நேரத்தில் அருண் தனியாக அமர்ந்து உணவைச் சாப்பிடத் தொடங்கினான். அப்போது அருகில் அமர்ந்திருந்த அவனுடைய நண்பன் குமார், தன்னிடம் உணவு இல்லாமல் அமைதியாக இருப்பதை அவன் கவனித்தான். குமார் அன்று காலை அவசரமாகப் பள்ளிக்கு வந்ததால் உணவுப் பெட்டியை வீட்டிலேயே மறந்து விட்டிருந்தான்.

முதலில் அருண் தனது உணவை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட நினைத்தான். ஆனால் குமாரின் முகத்தில் தெரிந்த சோகத்தைப் பார்த்ததும் அவனுடைய மனம் மாறியது.

அவன் தனது உணவை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை குமாரிடம் கொடுத்தான். இருவரும் மகிழ்ச்சியுடன் உணவைப் பகிர்ந்து உண்டனர்.

அந்த நேரத்தில் அருணுக்கு ஒரு புதிய உண்மை புரிந்தது. உணவை தனியாகச் சாப்பிட்டபோது கிடைத்த மகிழ்ச்சியைவிட, அதை நண்பனுடன் பகிர்ந்து கொண்டபோது கிடைத்த மகிழ்ச்சி மிகவும் அதிகமாக இருந்தது.

அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான். அவனுடைய நண்பர்களும் அவனை மிகவும் நேசிக்கத் தொடங்கினர்.

நீதி:

நம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, பொருள் குறைவதில்லை; மாறாக அன்பும் மகிழ்ச்சியும் பெருகுகின்றன.

நினைவில் கொள்வோம்:

🌱 “பகிர்ந்து கொடுக்கும் கைகள், மகிழ்ச்சியை விதைக்கும் கைகள்.”

இன்றைய செய்திகள்

19.08.2026

🗒️15 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெட்ரோ ரெயிலுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் சேவைத் திட்டம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. 

🗒️தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த  ,உத்தரபிரதேசத்தை கலக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி முனிராஜிக்கு ஜனாதிபதி விருதுக்கு  தேர்வாகியுள்ளார் .

🗒️இந்தியாவின் தேர்தல் நடைமுறையை மேற்கோள் காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவிலும் கட்டாய வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது நாள் ஆட்டங்களில் 
திரிஷா - காயத்ரி இணை சாதனை படைத்துள்ளது.

Today's Headlines

🗒️ After waiting for 15 years, it has been confirmed that the Chennai MRTS (Flying Train) service will be connected with the Metro Rail network.

🗒️ IPS officer Muniraj, who is from Papparapatti in Dharmapuri district and is serving in Uttar Pradesh, has been selected for the President’s Award.

🗒️ Referring to India’s election system, US President Donald Trump has called for introducing a mandatory voter ID card system in the United States.

🏀 Sports News

🏀 On the second day of the 2026 World Badminton Championships being held in India, the Indian pair of Trisha and Gayatri has achieved a remarkable record.


18 August 2026

'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' கண்டிப்பாக செயல்படுத்தப்படும் - நிதி அமைச்சர்.

திமுக அரசின் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' கண்டிப்பாக செயல்படுத்தப்படும் - அமைச்சர்.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -18.08.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:475

குறள்:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.  


பொருள்:

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
  
பழமொழி :
Many a slip between the cup and the lip.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

இன்றைய இளைஞரின் திறமைதான் நாளைய நாட்டின் வலிமை.

Thought for the Day :

Youth with skills, nation with strength.

பொது அறிவு : 

1. அரசியின் மணிமுடி என்று  அழைக்கப் படுவது எது?

தாஜ்மஹால்

2. திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை யார்?


திரு. கால்டுவெல்

English words :

1. Meticulous – Very careful and precise, மிகுந்த கவனமான.

2. Compassionate – Caring and kind, இரக்கமுள்ள.

புவியியலும் சுற்றுசூழலும் :

இங்கு அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் காணப்படுகின்றன.
பல்வேறு அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
செல்லுலார் சிறை (Cellular Jail) போர்ட் பிளேரில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதற்கு முக்கியத்துவம் உண்டு.

NMMS :

SAT - SOCIAL

பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது?

 (1) காயல்பட்டினம்

 (2) கொற்கை

 (3) காவிரிப்பூம்ட்டினம்

 (4) உறையூர் 

 விடை: (1) காயல்பட்டினம்

ஆகஸ்ட் 18

நேதாஜி அவர்களின் நினைவுநாள்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். 

விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை

 பங்கிட்டுத் தின்றால் பசியாறும்

ஒரு சிறிய கிராமத்தில் உதய் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது, அவனுடைய நண்பன் நியாஸ் மிகவும் சோர்வாக இருப்பதைப் பார்த்தான்.

“என்ன நியாஸ்? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்?” என்று உதய் கேட்டான்.

“இன்று காலை வீட்டில் இருந்து அவசரமாக வந்துவிட்டேன். உணவு சாப்பிடவில்லை . இப்போது மிகவும் பசிக்கிறது,” என்றான் நியாஸ்.

உதயிடம் அம்மா கொடுத்திருந்த இரண்டு இட்லிகளும் ஒரு வாழைப்பழமும் இருந்தன. முதலில் அவனுக்கும் பசி இருந்தது. இருந்தாலும், நண்பனின்நிலையை ப் பார்த்ததும் தனது உணவை இருவரும் சமமாகப் பகிர்ந்துக் கொண்டான்.

இருவரும் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து சாப்பிட்டனர். “உதய், உனக்கும் பசி இருந்திருக்கும் அல்லவா? உன் உணவை என்னுடன் ஏன் பகிர்ந்து கொண்டாய்?” என்று நியாஸ் கேட்டான்.

உதய் சிரித்துக்கொண்டே , “நாம் மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறையும். ஆனால், இருவரும் பகிர்ந்து சாப்பிட்டால் மனமும் நிறையும்!” என்றான்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ஆசிரியர் அவர்களின் செயலைக் கவனித்தார்.

“குழந்தைகளே , உணவைப் பகிர்ந்து கொள்வது சிறிய செயல் போலத் தோன்றலாம். ஆனால் அது அன்பையும் நட்பையும் வளர்க்கும் பெரிய பண்பு,” என்று பாராட்டினார்.

அன்றிலிருந்து உதயும் நியாஸும் மட்டுமல்லாமல், அவர்களுடைய வகுப்பு மாணவர்களும் தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

நீதி:

நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால், உணவு மட்டுமல்ல—அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். “பங்கிட்டுத் தின்றால் பசியாறும்; பகிர்ந்து வாழ்ந்தால் மனம் நிறையும்.”

இன்றைய செய்திகள்

18.08.2026


🗒️அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் தமிழக காவல் அதிகாரிகள் 13 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

🗒️தேசிய தேர்வு முகமை சீர்திருத்தம் குறித்து என்.டி.ஏ தலைமை இயக்குநர், உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்டோருடன் பிரகலாத் ஜோஷி ஆலோசனை மேற்கொண்டார்.

🗒️ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தொடக்ககால பிரபஞ்சத்தின் படங்களில் பல சிறிய சிவப்பு புள்ளிகள் காணப்பட்டுள்ளது என்பதைக்  காட்சிப் படுத்துகிறது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏏 *கிரிக்கெட்* 
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Today's Headlines

🗒️ Tamil Nadu police officers won 13 medals at the All India Police Games.

🗒️ Union Minister Pralhad Joshi held discussions with the Director General of the National Testing Agency (NTA), the Higher Education Secretary, and other officials regarding reforms in the NTA.

🗒️ Images of the early universe captured by the James Web Space Telescope show several small red dots.
Sports News

🏏 Cricket
First Test against India: Sri Lanka were all out for 284 runs. India won the toss and elected to bat first.


17 August 2026

களஞ்சியம் App இல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் Update - வழிமுறைகள் மற்றும் LATEST VERSION UPDATE LINK ATTACHED

களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது...

*NHIS - Family
*member  update
*Enhancement

தற்போது களஞ்சியம் ஆப்பில் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் 

2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும் 
 
3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் சொல்லவும் 

4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும் 

5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும் 

6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது 

7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 

8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம் 

9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும் தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம் 

இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Kalanjiyam App Latest Version CLICK HERE TO DOWNLOAD

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -17.08.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:474


குறள்:

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பொருள்:

பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

பழமொழி :
Man proposes ; God disposes.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

“இளமை என்பது விதை; திறமை என்பது அதன் வேர்கள்; வெற்றி அதன் கனிகள்.”

Thought for the Day :

Learn a skill today, build a better tomorrow.

பொது அறிவு : 

1. "ஜன கண மன " பாடல் முதன்முதலில் எப்போது பாடப்பட்டது? 

1911. 

2. "ஜன கண மன"பாடலை எழுதியவர் யார்? 

ரபீந்திரநாத் தாகூர்.

English words :

1. Prudent – Wise and careful, விவேகமான. 

2. Versatile – Able to do many things, பல்திறமைசாலி.

புவியியலும் சுற்றுசூழலும் :

அந்தமான்–நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளன.
போர்ட் பிளேர் இதன் தலைநகரமாகும்.
நிர்வாக ரீதியாக இது ஒன்றியப் பிரதேசம் (Union Territory).
அந்தமான் மற்றும் நிக்கோபார் என இரண்டு முக்கிய தீவுக் குழுக்களைக் கொண்டது.

NMMS :

SAT - Tamil

இவற்றில் எது முதன்மைச் சான்று அல்ல? 

(1) பொறிப்புகள் 

(2) நினைவுச் சின்னங்கள்

 (3) நாணயங்கள் 

(4) இலக்கியங்கள் 

விடை: (4) இலக்கியங்கள்

நீதிக்கதை

 சமம் என்றால் எல்லோருக்கும் வாய்ப்பு


ஒரு சிறிய கிராமத்தில் கவின் என்ற சிறுவனும், அவனுடைய தங்கை காவியாவும் வாழ்ந்து வந்தனர். கவினுக்கு படிப்பதற்கும் விளையாடுவதற்கும் அதிக நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் காவியாவிடம், “நீ பெண் குழந்தை; வீட்டுப் பணிகளைப் பார்த்துக்கொள்” என்று அடிக்கடி கூறப்பட்டது.


காவியாவுக்கும் அறிவியலில் மிகவும் ஆர்வம் இருந்தது. ஒருநாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. காவியா ஒரு அழகான சூரிய சக்தி மாதிரியை உருவாக்க விரும்பினாள்.


ஆனால் வீட்டில் அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. இதைக் கவனித்த கவின், “அக்காவுக்கும் படிக்கவும், தன் திறமையை வெளிப்படுத்தவும் சமமான வாய்ப்பு வேண்டும். வீட்டு வேலைகளையும் நாமிருவரும் சேர்ந்து செய்வோம்” என்றான்.


அதன்படி இருவரும் வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்தனர். காவியா தனது மாதிரியை உருவாக்கி அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டாள். அவளுடைய மாதிரி முதல் பரிசைப் பெற்றது.


இதைக் கண்ட பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். அப்பா, “பெண் என்பதற்காக ஒரு வாய்ப்பை மறுப்பதும், ஆண் என்பதற்காக கூடுதல் வாய்ப்பு கொடுப்பதும் சரியல்ல. திறமைக்கு பாலினம் கிடையாது” என்றார்.


அன்று முதல் அந்தக் குடும்பத்தில் வேலைகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன.


நீதி:

ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான மரியாதையும் வாய்ப்பும் வழங்க வேண்டும். சமத்துவமே சிறந்த சமுதாயத்தின் அடித்தளம்.


இன்றைய செய்திகள்

17.08.2026

🗒️தமிழக சட்டமன்றத்தில்  மானிய கோரிக்கை மீதான விவாதங்கள்  இன்று தொடங்குகிறது.

🗒️அதிநவீன போர் விமான தயாரிப்பு பணியில்  ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன்  ரிலையன்ஸ் இணைந்துள்ளது.

 🗒️மெக்சிகோ: கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகள் படர்ந்துள்ளதால்  சுற்றுலாத்துறை பாதிக்கப் பட்டுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கிரிக்கெட் - இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் இந்தியா 460/9 என்ற நிலையில் உள்ளது.

Today's Headlines

🗒️ The discussions on the demands for grants in the Tamil Nadu Assembly will begin today.

🗒️ Reliance has joined hands with Rolls-Royce to manufacture advanced fighter aircraft.

🗒️ Mexico: Tourism has been affected as 1.05 lakh tonnes of seaweed has accumulated along the Caribbean coast.

Sports News

🏏 Cricket - First Test against Sri Lanka: At the end of Day 2, India is at 460/9.


15 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -15.08.2026







திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:473

குறள்:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   

பொருள்:

தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

பழமொழி :
Make hay while the sun shines.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழையை மதிப்போம்; நீரைச் சேமிப்போம்; எதிர்காலத்தை காப்போம். 🌧️💧

Thought for the Day :

Respect the rain, protect the water, preserve the future. 🌧️💙

பொது அறிவு : 

1.இந்தியா சுதந்திரம் அடைந்த போது என்ன கிழமை? 

வெள்ளிக்கிழமை. 

2. zஇந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்? 

பிங்காளிவெங்கய்யா.

ஆகஸ்ட் 15

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.
இன்றைய செய்திகள்

15.08.2026

🗒️சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டு, 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவும்  கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

🗒️இரயில் டிக்கெட்டுகளில் அழியும் மை பிரச்சினைக்கு தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம் இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

🗒️மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்டம் கலெக்டராக (டெபுடி கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். 

 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியாவின் 80-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல்  இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயணம் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டுகிறது. 

🏀இலங்கைக்கு எதிராக காலே மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, இந்திய ஆண்கள் அணியின் 600-வது டெஸ்ட் போட்டியாக அமைகிறது.

Today's Headlines

🗒️ This year, the 150th anniversary of the song “Vande Mataram” will also be celebrated grandly during the Independence Day celebrations.

🗒️ To find a solution to the problem of fading ink on railway tickets, the Southern Railway has sent an urgent letter to the Railway Board.

🗒️ A young IAS officer from Tamil Nadu, Angeline Renita, has created a record by taking charge as the Deputy Commissioner (Collector) of Kakching district in Manipur.

🏀 Sports News

🏀 On August 15, India’s 80th Independence Day, the Indian cricket team’s Test journey will reach a new historic milestone.

🏀 The first Test match against Sri Lanka, being played at the Galle International Stadium, will be the 600th Test match for the Indian men’s cricket team.


14 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -14.08.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:472

குறள்:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

பொருள்:

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

பழமொழி :
Love your neighbour as yourself.

தன்னைப் போல் பிறரை நேசி.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழை வந்தால் வளம் வரும்; வளம் வந்தால் வாழ்வு வளரும்.

Thought for the Day :

Rain is the bridge between the sky and the Earth.

பொது அறிவு : 

1. கர்பத்தில் உள்ள குழந்தைக்கு எத்தனை மாதங்களில் கைரேகை உருவாகும்? 

6 மாதங்களில். 

2. 20 வகை கேன்சர் செல்களை கட்டுப்படுத்தும் காய்கறி எது? 

வெள்ளைப்பூண்டு.

English words :

Reliable – Can be trusted, நம்பகமானவர். 

Empathetic – Understands others’ feelings, பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது" என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்றும் அவர் உறுதியாக நம்பினார்.இந்தியாவின் வலிமை அதன் கிராமங்களில் உள்ளது; கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.

NMMS :

MAT 

கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் எத்தனை '6' கள் ஒற்றை எண்ணைத் தொடர்ந்தும் இரட்டை எண்ணைத் தொடராமலும் உள்ளன? 

2 5 7 3 6 4 3 4 5 6 8 6 3 4 6 5 3 6 5. 

(1) 3. 

(2) 2. 

(3) 4. 

(4) 1. 

விடை: (4) 1

ஆகஸ்ட் 14

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம்
நீதிக்கதை

 பொருளை பாதுகாப்போம் – பொறுப்புடன் வாழ்வோம்


ஒரு சிறிய ஊரில் ஹரிஹரன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தனது பொருட்களை எங்கு வைத்தான் என்பதே அடிக்கடி மறந்துவிடும். புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு பேனாவைத் தேடுவான்; காலணியை ஒரு இடத்தில் கழற்றிவிட்டு வேறு இடத்தில் தேடுவான்.


ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது அவனுடைய கணிதப் புத்தகம் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், முந்தைய நாள் விளையாடிவிட்டு வந்தபோது புத்தகத்தை வாசல் அருகே வைத்துவிட்டு மறந்தது நினைவுக்கு வந்தது.


அவன் அவசரமாக அங்கே சென்று பார்த்தபோது, புத்தகம் மழையில் நனைந்து சேதமடைந்திருந்தது. ஹரிஹரன் மிகவும் வருந்தினான். அப்போது அவனுடைய தாத்தா, “பொருள் சிறியதாக இருந்தாலும், அது நமக்குத் தேவையானது. ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்தியவுடன் அதற்குரிய இடத்தில் பத்திரமாக வைத்தால், அதைத் தேடி அலைய வேண்டியதில்லை; பொருளும் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்” என்று அறிவுரை கூறினார்.


அன்று முதல் ஹரிஹரன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். புத்தகங்களை அலமாரியில், பேனாக்களை பெட்டியில், காலணிகளை அதற்குரிய இடத்தில் வைத்து பாதுகாக்கத் தொடங்கினான். சில நாட்களுக்குப் பிறகு, அவனுடைய நண்பன் தனது பேனாவைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தான். ஹரிஹரன், “நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிரந்தர இடம் வைத்துக்கொள். அப்போது பொருட்கள் தொலைந்து போகாது” என்று கூறினான். நண்பனும் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினான்.


நீதி:

நமக்குச் சொந்தமான பொருட்களை அலட்சியமாக வைக்காமல், அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து, பயன்படுத்திய பிறகு அதற்குரிய இடத்தில் வைப்பது நல்ல பழக்கம்.

இன்றைய செய்திகள்

14.08.2026

🗒️பெரும்பாலான மக்களை பாதிக்கும் வரிகளை உயர்த்தாமல், வருவாயை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு, பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

🗒️காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.

🗒️நடப்பாண்டின் முழு சூரிய கிரகணம்: வானியல் நிகழ்வின் அற்புத காட்சியை கண்டுகளித்த மக்கள்
இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு சூரிய கிரகணம் நடைபெற்றதால், இந்தியாவில் இதனை காண முடியவில்லை.

 விளையாட்டுச் செய்திகள்
🏀செஸ் -சின்க்பீல்டு கோப்பை : சிந்தாரோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா முதல் சுற்றில் டிரா செய்தார்.

Today's Headlines

🗒️ The Tamil Nadu government has asked a committee led by economist Montek Singh Ahluwalia to suggest ways to increase revenue without raising taxes that would affect most people.

🗒️ The Tamil Nadu government has approached the Supreme Court against the order issued by the Cauvery Water Management Authority.

🗒️ People around the world watched the amazing sight of the total solar eclipse this year. Since the eclipse occurred at 11:16 p.m. Indian time, it could not be seen from India.

🏀 Sports News

🏀 Chess – Sinquefield Cup: R. Praggnanandhaa recorded his first win by defeating Sindarov. He had drawn his first-round game.


JOIN KALVICHUDAR CHANNEL