t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:488

குறள்:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பொருள்:

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

பழமொழி :
No Pains ; No Gains.

உழைப்பின்றி ஊதியம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கனவு காணும் இளைஞன் ஒரு படி முன்னேறுகிறான்; திறனை வளர்க்கும் இளைஞன் இலக்கை அடைகிறான்.”

Thought for the Day :

“Skills turn ideas into action and dreams into reality.”

பொது அறிவு : 

1. 200 ரூபாய் நோட்டிற்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்) .

2. 100 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ராணி கி வாவ் (குஜராத்)  

English words :

1. Resourceful – Finds clever ways to solve problems, சமயோசித புத்தி உடையவர்.

2. Punctilious – Great attention to detail and correct behavior, நேர்த்தியான ஒழுக்கமுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.
முக்கிய மலைத்தொடர்கள்:
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
நீலகிரி மலை
சேர்வராயன் மலை
கல்வராயன் மலை
கொல்லிமலை
ஜவ்வாது மலை
ஏலகிரி மலை ஆகும்

NMMS :

MAT 

விதைத் தாவரங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு. வகுப்பு------>துணை வகுப்பு---------> வரிசை. 

 (1) தலாமிஃபுளோரே-------> பாலிபெட்டலே-------> டைகாட்டிலிடனே

 (2) டைகாட்டிலிடனே-------> பாலிபெட்டலே-----------> தலாமிஃபுளோரே

 (3) பாலிபெட்டலே---------> டைகாட்டிலிடனே---------> தலாமிஃபுளோரே 

 (4) பாலிபெட்டலே --------> தலாமிஃபுளோரே-------------> டைகாட்டிலிடனே 

 விடை: (2) டைகாட்டிலிடனே-------------> பாலிபெட்டலே-------------> தலாமிஃபுளோரே

நீதிக்கதை

 “பெரிய இலக்கு”

ஒரு கிராமத்தில் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய சாதனை செய்ய வே ண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த இலக்கை நினைத்தாலே , “இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது?” என்று கவலைப்பட்டான்.

ஒருநாள் அவன் ஆசிரியரிடம் தனது கவலையைச் சொன்னான்.

ஆசிரியர் ஒரு சிறிய விதையை க் காட்டி,

“இந்த விதை இன்று ஒரு பெரிய மரமாகிவிடுமா?” என்று கே ட்டார்.

“இல்லை ஆசிரியரே ,” என்றான் சூர்யா.

“அப்படித்தான் பெரிய இலக்கும். ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்காமல், தினமும் சிறிது சிறிதாக உழைத்தால் பெரிய இலக்கையும் அடையலாம்.” என்றார் ஆசிரியர்.

அன்றிலிருந்து சூர்யா தனது இலக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்கினான். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் முயன்றான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் கனவு நனவானது.

அப்போது சூர்யாவுக்கு ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:

“பெரிய இலக்கை நினைத்து பயப்படாதே ; அதை அடைய ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வை .”

🌸 நீதி: பெரிய இலக்கை அடைய  பொறுமையுடனும் திட்டமிட்ட முறையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் கனவும் நனவாகும்.

இன்றைய செய்திகள்

07.09.2026

🗒️புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🗒️விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. 10 நாட்களில் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்த்தாக மத்திய அரசு தகவல். 

🗒️நவம்பர் 27' சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
 
*விளையாட்டுச் செய்திகள்*

🏀சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Today's Headlines

🗒️ Due to the BRICS Summit in New Delhi, the 57th GST Council meeting, which was planned for September 12, has been postponed.

🗒️ Steps to control price rise: The Central Government said that 4,000 tonnes of onions were sold in 10 days.

🗒️ The United Nations has declared November 27 as the International Day for the Elimination of Child Marriage.

🏀 Sports News

🏀 India’s Satwik Sairaj Rankireddy and Chirag Shetty won the championship title in the China Masters Super 750 International Badminton Tournament.


5 September 2026

TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 8.3 DIRECT LINK ATTACHED

TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 8.3

App performance and SDK version update added
Click 👇 

3 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:487

குறள்:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்:

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்

பழமொழி :
No man can serve two masters

ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“இளையோரின் தனித்திறமைதான் நாட்டின் மறைந்திருக்கும் பெரும் செல்வம்.”

Thought for the Day :

“The best investment a young person can make is in learning useful skills.”

பொது அறிவு : 

1.புதிய 2000 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 மங்கள்யான். 

2.புதிய 500 ரூபாய் நோட்டில் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ரெட் ஃபோர்ட் ( டில்லி) . 

English words :

1. Candid – Truthful and straightforward, வெளிப்படையானவர்.

2. Magnanimous – Very generous and forgiving, பெருந்தன்மையானவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

"விவசாயத்திற்கு முக்கியத்துவம்
இந்திய கிராமங்களின் முதன்மையான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்."

NMMS :

SAT 

பின்வரும் நிகழ்வுகளைக் காலக் கிரமப்படி வரிசைப்படுத்துக. 

 (i) ஆம்பூர் போர்

 (ii) பிளாசிப் போர் 

 (iii) வந்தவாசிப் போர்

 (iv) பெரும் புரட்சி

 (1) (i), (ii), (iii), (iv) 

 (2) (i), (iv), (iii) , (ii) 

 (3) (iii), (ii), (i), (iv) 

 (4) (iii), (iv), (i), (ii) 

 விடை: (1) (i), (ii), (iii), (iv)

செப்டம்பர் 03

சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீதிக்கதை

 “சிறிது ஓய்வு… நிறைய வெற்றி!”

ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவன். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தினமும் இடை விடாமல் படித்துக்கொண்டே இருந்தான்.

“இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்… ஓய்வு எடுத்தால் நேரம் வீணாகிவிடும்!” என்று நினைத்து, விளையாடுவதையும் நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்தான்.

சில நாட்களில் அவனுக்கு படித்தது எதுவும் சரியாக நினைவில் நிற்கவில்லை .

சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்பட்டது. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து,

“விக்னேஷ், மனதுக்கும் உடலைப் போலவே ஓய்வு தே வை . தொடர்ந்து படிப்பது மட்டும் வெற்றியைத் தராது. சிறிது நேரம் ஓய்வெ டுத்து, இயற்கை யை ரசித்து, பிடித்த விஷயங்களைச் செய்வதும் அவசியம்,” என்றார்.

அன்று மாலை விக்னேஷ் புத்தகங்களை மூடிவிட்டு சிறிது நேரம் வெளியே சென்று நடந்தான். நண்பர்களுடன் விளை யாடினான். வீட்டிற்கு வந்துஅமை தியாக இரவு உணவு சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்கினான்.

மறுநாள் காலை அவன் மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. படித்த பாடங்கள் எளிதாக நினைவுக்கு வந்தன. அப்போது அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது:

“ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கான தயாரிப்பு.” அதன்பிறகு விக்னேஷ் படிப்புக்கும் ஓய்வுக்கும் சரியான நேரத்தை ஒதுக்கி, மகிழ்ச்சியாகப் படிக்கத் தொடங்கினான்.

🌸 நீதி:

அதிகமாக கவலைப்படாமல், தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்தால் மனம் புத்துணர்ச்சி பெறும். மன அமைதியுடன் செயல்படும்போது வெற்றியும் எளிதாக கிடை க்கும்.

இன்றைய செய்திகள்

03.09.2026

🗒️சென்னை மெட்ரோவில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம் காரணமாக  28 புதிய ரெயில்கள் வாங்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

🗒️ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் செய்தனர்.

🗒️ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின்  ஒலிம்பிக் சாம்பியன் ஜெங் கின்வென்
 உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
 
*விளையாட்டுச் செய்திகள்* 

🏀21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி லூதியானாவில் நடைபெற்று வருகிறது.

🏀100 மீட்டரில் புதிய வரலாறு... ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை தகர்த்த தமிழக வீரர் நீல் சாம்ராஜ்

Today's Headlines

🗒️ Due to the increasing number of passengers on the Chennai Metro, the railway administration plans to buy 28 new trains.

🗒️ ISRO scientists performed a special puja and prayer with a model of the GSLV-F17 rocket.

🗒️ ₹1.25 crore donation: Chinese Olympic champion Zheng Qinwen has extended a helping hand to people affected by the floods.

Sports News

🏀 The 21st National Youth Athletics Championship 2026 is being held in Ludhiana.

🏀 New record in the 100 metres: Tamil Nadu athlete Neel Samraj broke the national record twice in the same day, creating history.


2 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2026




    


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:486

குறள்:

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.  

பொருள்:

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

பழமொழி :
An old man's sayings are seldom untrue.

மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“திறமையைத் தேடு, பயிற்சி செய், பகிர்ந்து கொள்; உலகம் உன் திறனை அறியும்.”

Thought for the Day :

“Learn, practise, improve, and let your skills speak for you.”

பொது அறிவு : 

1. தென்னிந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படுவது எது? 

 ஆலப்புழா. 

2.தென்னிந்தியாவின் நயகரா என்றழைக்கப்படுவது எது? 

 ஒகேனக்கல். 

English words :

1. Diplomatic – Handles sensitive matters tactfully, சாதுரியமாக கையாள்பவர்.


2. Adaptable – Adjusts easily to new conditions, சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்பவர்k

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் பரப்பளவு சுமார் 1,30,058 சதுர கி.மீ ஆகும்.
பரப்பளவில் இந்தியாவில் தமிழ்நாடு 10-வது இடத்தில் உள்ளது.மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள்

NMMS :

MAT 

கல்வி நிலையங்களை பராமரிப்பவர்களுக்காக. வழங்கப்பட் நிலங்கள் ____________________ ஆகும்.

 (1) சாலபோகம் 

 (2) தேவதானம்

 (3) பிரம்மதேயம்

 (4)பள்ளிச் சந்தம் 

 விடை: (1) சாலபோகம்

செப்டம்பர் 02

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது
நீதிக்கதை

 “நட்பைத் தேர்ந்தெடுத்த நிவின்”

ஒரு சிறிய ஊரில் நிவின் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினான். அவனுக்கு சில நண்பர்கள் இருந்தனர்.

அவர்களில் விஷால் என்ற நண்பன் எப்போதும் பள்ளி வேலைகளைத் தவிர்ப்பதும், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் குறும்புகள் செய்வதும் வழக்கமாக இருந்தது.

“நிவின், இன்று வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். வா, வெளியே விளையாடலாம்!” என்று விஷால் அடிக்கடி அழைப்பான்.

முதலில் நிவின் மறுத்தான். ஆனால் தினமும் நண்பனின் பேச்சைக் கேட்டதால், அவனும் படிப்பில் கவனம் செலுத்தாமல் போனான். தேர்வில் அவன் மதிப்பெண்களும் குறைந்தன.

இதைக் கவனித்த ஆசிரியர் நிவினை அழைத்து, “நிவின், நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்களின் பழக்கங்கள் நம்மை யும் பாதிக்கலாம். நல்ல நண்பன் நம்மை முன்னேற்றுவான்; தவறான நண்பன் நம்மை பின்னுக்கு இழுப்பான்,” என்று அறிவுரை கூறினார்.

நிவினுக்கு தனது தவறு புரிந்தது. அவன் விஷாலிடம் சென்று,

“நாம் இருவரும் நல்ல விஷயங்களைச் செய்து முன்னேறுவோம். தவறான பழக்கங்களை விட்டுவிடுவோம்,” என்றான்.

விஷாலும் தனது தவறை உணர்ந்து, நிவினுடன் சேர்ந்து படிப்பிலும் நல்ல செயல்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினான்.

இன்றைய செய்திகள்

02.09.2026

⭐ தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

⭐ உக்ரைன்-ரஷ்யா போரில், ஏராளமான ஏவுகணைகளை நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்து விட்டதால் தற்போது நேட்டோ நாடுகளிடம் குறைவான அளவில்தான் ஏவுகணைகள் இருக்கின்றன.

⭐திபெத் - நேபாளம் எல்லை பகுதியில் உள்ள சுமார் 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியிருந்த இயற்கை தடுப்பு ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

🏀 லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய புகழ்பெற்ற 20 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வருகிறது.

Today's Headlines

*Head lines:*         

 ⭐ The Tamil Nadu government has announced that a large Digital Finance Centre will be built in Coimbatore at a cost of ₹400 crore to take Tamil Nadu’s industrial growth to the next level.

⭐ In the Russia-Ukraine war, NATO countries have given many missiles to Ukraine. So, NATO countries now have fewer missiles available.

⭐ A natural reservoir near the Tibet-Nepal border, which held about 2.5 million cubic metres of water, has broken. Water is flowing out, creating a new flood danger in the area.

*Sports news*

🏀Lionel Messi has announced his retirement from international football. This brings an end to his legendary 20-year international football journey with the Argentina national team.


1 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:485

குறள்:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள்:

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

பழமொழி :


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“நேரத்தை வீணாக்காத இளைஞன், திறமையை வீணாக்காத எதிர்காலத்தை உருவாக்குகிறான்.”

Thought for the Day :

“A talented youth becomes powerful when talent is guided by practice.”

பொது அறிவு : 

1. தென்னிந்தியாவின் தாஜ்மஹால் என்றழைக்கப்படுவது எது? 

 திருமலை நாயக்கர் மஹால். 

2. தென்னிந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது? 

 காவிரி. 

English words :

1. Tenacious – Holds firmly to a purpose, தளராத உறுதியுடையவர்.


2. Empathetic – Understands others' feelings, பிறர் உணர்வுகளை புரிந்துகொள்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

தெற்கில் மன்னார் வளைகுடா மற்றும் பால்க் நீரிணை உள்ளன.
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியாவின் தீவிர தென்முனையான கன்னியாகுமரி அமைந்துள்ளது.

NMMS :

SAT 

தவறான இணையைத் தேர்ந்தெடு.

 (1) ஜலகண்டேஸ்வரர் கோவில் - வேலூர்

 (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

 (3) வரதராஜ பெருமாள் கோவில் - காஞ்சிபுரம் 

 (4)இராமநாதசுவாமி கோவில் - இராமேஸ்வரம் 

 விடை: (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

செப்டம்பர் 01

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) அனுசரிக்கப்படுகிறது. 
மறைந்துவரும் கலை: இணையம் மற்றும் செல்பேசி காலத்தில், கைகளால் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் குறைந்து வருகிறது. அதைக் காக்க இந்த நாள் உதவுகிறது.
உணர்வுபூர்வமான தொடர்பு: கடிதங்கள் மூலம் வெளிப்படும் பாசமும் நினைவுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வரலாற்றுப் பகிர்வு: நம் முன்னோர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கடிதத் தொடர்புகளை நினைவுகூரும் நாளாக இது அமைகிறது. 
நீதிக்கதை

“ஆசையின் விலை ”

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் ஆசை . நண்பர்கள் வைத்திருக்கும் பொருட்களை ப் பார்த்தாலே , அதைப் போலவே தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிப்பான்.

ஒருநாள் அவனுடை ய நண்பன் புதிய வண்ணமயமான பள்ளிப் பையை கொண்டுவந்தான்.

“அம்மா, எனக்கும் இதே மாதிரி பை வேண்டும். இப்போதே வாங்கித் தர வேண்டும்!” என்று அருண் அடம்பிடித்தான்.

அம்மா, “அருண், உன்னுடைய பை இன்னும் நன்றாகத்தானே இருக்கிறது. இப்போது வாங்க முடியாது,” என்று அன்பாகக் கூறினார்.

ஆனால் அருண் கேட்காமல் தொடர்ந்து தொந்தரவு செ ய்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் வருத்தமடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அருணின் அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மிகவும் கவலையாக இருந்தார். அப்பாவிடம் காரணம் கேட்டபோது, வேலை குறைந்ததால் இந்த மாதம் குடும்பச் செலவுகளை சமாளிப்பது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.அப்போது அருணுக்கு தான் செய்தது புரிந்தது.

“அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நம்முடைய குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் நான் தேவையில்லாத பொருட்களுக்காக உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன். இனிமேல் தேவையான பொருட்களை மட்டுமே கேட்பேன்,” என்றான்.

அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மதிக்கத் தொடங்கினான்.பெற்றோரிடம் அடம்பிடிப்பதையும் விட்டுவிட்டான். அவனுடைய மாற்றத்தைக் கண்டு பெற்றோரும் மகிழ்ந்தனர்.

🌸 நீதி:

நமக்குத் தேவையானவற்றை மட்டும் பெற்றோரிடம் கேட்கவேண்டும்.

தேவையில்லாத பொருட்களுக்காக அடம்பிடித்து அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. இருப்பதைக்கொண்டு மகிழ்ந்து, பெற்றோரின் உழைப்பையும் மதிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.09.2026

🗒️கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்” முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

🗒️தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு  2027-ன் முதற்கட்ட பணிகள் நிறைவு
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும்.

🗒️பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை விண்ணில் ஏவியது நாசா. 

 *விளையாட்டுச் செய்திகள்*

 🏀இந்தியா, பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

Today's Headlines

🗒️ Tamil Nadu Chief Minister Joseph Vijay has announced a “Coimbatore Digital Finance Centre” in Coimbatore. It will be developed by the Tamil Nadu Industrial Development Corporation at a cost of ₹400 crore.

🗒️ The first phase of the 2027 Census in Tamil Nadu has been completed. The second phase of the Census will be conducted across India in January and February 2027.

🗒️ NASA has launched a powerful telescope into space to help scientists discover the secrets of the universe.

🏀 Sports News

🗒️ A friendly football match between India and Brazil will be held on October 3.


31 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:484

குறள்:

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்:

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், உலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

பழமொழி :
Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“கைகளில் கைத்திறன், மனதில் நம்பிக்கை, செயல்களில் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.”

Thought for the Day :

“Don’t wait for opportunities; build skills that create opportunities.”

பொது அறிவு : 

1.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படுவது எது? 

மதுரை.

 2. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படுவது எது? 

பாளையங்கோட்டை. 

English words :

1)Benevolent – Well-meaning and kind, நற்குணமுள்ளவர் / தாராள மனப்பான்மை உடையவர்.


2)Astute – Sharp and shrewd, கூர்மையான அறிவுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் புவியியல் தமிழ்நாடு இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது.
வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கர்நாடகம், மேற்கில் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கிழக்கிலும் தென்கிழக்கிலும் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

NMMS :

MAT 

எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது ________________________ ஆகும். 

 (1) அசௌர்யா

 (2) சத்யா

 (3) அகிம்சை

 (4) அரிக்கிரகா 

 விடை: (3) அகிம்சை

ஆகஸ்ட் 31

மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

 🍚 நீதிக்கதை : “அலை பே சி இல்லாமல் உணவு”

ஒரு சிறிய நகரத்தில் நிகில் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சாப்பிடும் நேரத்தில் அலைபேசியில் கார்ட்டூன் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் அவன் அம்மா உணவு பரிமாறியபோது, “அம்மா, போனை கொடுத்தால்தான் நான் சாப்பிடுவேன்!” என்றான்.

அம்மாவும் அவன் சாப்பிட வேண்டும் என்பதற்காக அலைபேசியைக் கொடுத்தார்.

நிகில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டே உணவை சாப்பிட்டான். நாள்கள் செல்லச் செல்ல, அலை பேசி இல்லாமல் சாப்பிடவே முடியாது என்ற பழக்கம் நிகிலுக்கு ஏற்பட்டது. உணவின் சுவையையும், அம்மா அன்புடன் பேசுவதை யும் அவன் கவனிக்காமல் போனான்.

ஒருநாள் அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் போனது. நிகில் சாப்பிட மறுத்துவிட்டான். அப்போது அவனுடை ய தாத்தா அவனை அருகில் அழைத்து,

“நிகில், உணவு உன் உடலுக்கு சக்தி தருகிறது. அலைபேசி உன் உணவுக்கு துணையாக இருக்க வேண்டியதில்லை . சாப்பிடும்போது உணவை ரசித்தும், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டும் சாப்பிடக் கற்றுக்கொள்,” என்றார்.

நிகிலுக்கு தன் பழக்கம் புரிந்தது. அன்று முதல் சாப்பிடும் நேரத்தில் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உணவு சாப்பிடத் தொடங்கினான்.

🌱 நீதி:

குழந்தைகள் உணவு சாப்பிடுவதற்காக அலைபேசியை க்கொடுப்பதை விட,

உணவின் முக்கியத்துவத்தையும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தையும் கற்றுக்கொடுப்பது சிறந்தது.

இன்றைய செய்திகள்

31.08.2026

🗒️சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைப்பு.இந்த ரெயில்களை தமிழகத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🗒️உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

🗒️உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

🏀சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர்
 வேலவன் செந்தில்குமார்.

Today's Headlines

🗒️ Two Amrit Bharat trains made at Chennai ICF have been handed over to Southern Railway. Passengers have requested that these trains be operated in Tamil Nadu.

🗒️ Prime Minister Narendra Modi has appealed to people to buy products made in India.

🗒️ At a Yoga event in Tashkent, the capital of Uzbekistan, Indian Prime Minister Narendra Modi was presented with Uzbekistan’s highest award, the Order of Friendship.

🏀 Sports News

🏀 Tamil Nadu player Velavan Senthilkumar won the championship title at the International Squash Open tournament.


30 August 2026

1.7.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவம் மேற்கொள்ள மருத்துவமனை பட்டியல் வெளியீடு

1.7.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவம் மேற்கொள்ள மருத்துவமனை பட்டியல் CLICK HERE TO DOWNLOAD

JOIN KALVICHUDAR CHANNEL