t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 August 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.08.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:479

குறள்:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருள்:

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

பழமொழி :
Misfortunes never come single.

பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. 1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

நல்ல வார்த்தைகள் ஒரு விதை போன்றவை; அவை ஒருநாள் நிச்சயம் நல்ல கனியைத் தரும்.” 🌱

Thought for the Day :

Do good with pure intentions it will come back to you in an unexpected way

பொது அறிவு : 

1.சட்டமன்ற உறுப்பினராக வயது வரம்பு எது?

 25 வயது. 

 2. இந்தியாவில் யாரை கைது செய்ய முடியாது?

குடியரசு தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள்.

English words :

1.Sincere – Genuine and honest in feelings or actions, நேர்மையான.

2.Punctual – Always on time, சரியான நேரத்தில் வருபவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இலட்சத்தீவுகள்
அரபிக்கடலில் அமைந்துள்ளன.
இந்தியாவின் மேற்குப் பகுதியில், கேரளக் கடற்கரைக்கு அருகில் உள்ளன.
கவரத்தி இதன் தலைநகரமாகும்.
இதுவும் ஒரு ஒன்றியப் பிரதேசம்.

NMMS :

MAT 

×' என்பதை '-' எனவும், '+' என்பதை '÷' எனவும், '-' என்பதை '+' எனவும், '÷' என்பதை '×' எனவும் குறிப்பிட்டால் 15×16+8-2÷4 ன் மதிப்பைக் காண்க.

 (1) 25.

 (2) 21. 

 (3) 5. 

 (4) 20.

 விடை: (2) 21

நீதிக்கதை

வாய்ப்பு கொடுத்தால் திறமை மலரும்:

ஒரு பெரிய நகரத்தில் புகழ்பெற்ற கல்லூரி ஒன்று இருந்தது. அங்கு பல்வேறு திறமைகளைக் கொண்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

அதே கல்லூரியில் ஆதவன் என்ற மாற்றுத்திறனாளி மாணவனும் படித்து வந்தான். அவன் நடப்பதற்கு சக்கர நாற்காலியை ப் பயன்படுத்தினான். அதனால் சில மாணவர்கள் அவனால் மற்றவர்களைப்போல எல்லா கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாது என்று நினைத்தனர்.

ஒருநாள் கல்லூரியில் “திறமைத் திருவிழா” நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆதவன், “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு கணினி வடிவமைப்பில் நல்ல ஆர்வமும் திறமையும் இருக்கிறது,” என்றான்.

ஆனால் சில மாணவர்கள், “நீ எப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்வாய்?” என்று சந்தேகத்துடன் கேட்டனர்.

அப்போது கல்லூரி ஆசிரியர் ஒருவர், “ஒருவருடைய உடல் நிலையை ப் பார்த்து அவருடைய திறமையை முடிவு செய்யக்கூடாது. வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்,” என்றார்.

ஆதவனுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவன் தனது கணினி வடிவமைப்புத் திறமையைப் பயன்படுத்தி, கல்லூரியின் சிறப்புகளை விளக்கும் அழகான டிஜிட்டல் வடிவமைப்பை உருவாக்கினான்.

அதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அந்த வடிவமைப்பு நிகழ்ச்சியின் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆதவன் மகிழ்ச்சியுடன், “எனக்கு மற்றவர்களிடம் இருப்பதைப் போலவே திறமைகள் இருக்கின்றன. எனக்கு தேவைப்பட்டது ஒரு வாய்ப்பு மட்டுமே ,” என்றான்.

அப்போது மாணவர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதன்பிறகு கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பரிதாபத்துடன் பார்க்காமல், அவர்களின் திறமைகளையும் விருப்பங்களையும் மதித்து, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கத் தொடங்கினர்.

நீதி:

மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்திறமைகள் உண்டு. அவர்களை குறையாகப் பார்க்காமல், சமமாக மதித்து வாய்ப்பளித்தால், அவர்களின் திறமைகள் உலகிற்கு வெளிப்படும். 

இன்றைய செய்திகள்

24.08.2026

🗒️வீட்டு உபயோக சிலிண்டர் பெற
 E KYC சமர்ப்பித்தலுக்கான காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது
  
🗒️இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை குறித்து 25வது சிறப்பு பிரதிநிதிகள் மாநாடு 25ம் தேதி நடைபெற உள்ளது.அதில் பங்கேற்க  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங் செல்ல உள்ளார்.

🗒️இந்திய கடற்படையின் INS சுதர்ஷினி கப்பல் போர்ச்சுகல் நாடு சென்றடைந்தது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀9.39 விநாடிகளில் 100 மீட்டரை கடந்து உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ
உயரம் தாண்டுதலிலும் ரோபோ ஒன்று புதிய சாதனையை படைத்துள்ளது.

Today's Headlines
 
🗒️ The deadline for submitting e-KYC to get domestic cooking gas cylinders has been extended.

🗒️ The 25th Special Representatives meeting on the India-China border issue will be held on the 25th. National Security Adviser Ajit Doval will travel to Beijing to attend the meeting.

🗒️ The Indian Navy ship INS Sudarshini has reached Portugal.

🏀 Sports News

🏀 A robot ran 100 metres in 9.39 seconds and broke Usain Bolt’s record.

🏀 Another robot has also set a new record in the high jump.


21 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -21.08.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:478

குறள்:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

பொருள்:

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

பழமொழி :
Might is right.

வல்லான் வகுத்ததே சட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

“உன் கையில் ஒரு திறமை இருந்தால், உன் எதிர்காலத்தில் ஒரு வாய்ப்பு இருக்கும்.”

Thought for the Day :

“Education gives you knowledge; skills turn that knowledge into achievement.”

பொது அறிவு : 

1.மனித மூக்கினால் எத்தனை விதமான வாசனைகளை உணர முடியும்? 

50,000 

2.மனித உடலில் தன்னை தானே சரி செய்து கொள்ள முடியாத உறுப்பு எது? 

பற்கள்

English words :

1. Adaptable – Able to adjust easily, சூழ்நிலைகேற்ப மாறக்கூடிய. 

2.Optimistic – Having a positive outlook, நம்பிக்கையான.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராமங்கள் தங்களை நிர்வகிக்கப் பஞ்சாயத்து ராஜ் முறை அவசியமெனக் காந்தியடிகள் கருதினார்.சுத்தமும் சுகாதாரமும்: கிராமங்களில் தூய்மை மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவது சமூகத்தின் அடிப்படைப் பலமாகும் என்பதை அறிவுறுத்தினார்.

NMMS :

SAT - SOCIAL

ஷாகு என்றால் ____________________ என்று பொருள். 

(1) போர் முறை 

(2) நேர்மையானவர் 

(3) வரி முறை 

(4) அஷ்டபிரதான் 

விடை: (2) நேர்மையானவர்

ஆகஸ்ட் 21

உசைன் போல்ட் அவர்களின் பிறந்தநாள்

* உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) ஜமைக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 

* 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.

* 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.
நீதிக்கதை

 திறமையை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்


ஒரு சிறிய கிராமத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை இருந்தது. அவன் வரையும் ஓவியங்கள் அனைவரையும் கவரும்.


ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் தன் திறமையைப் பயன்படுத்தி அழகான ஓவியம் வரைந்தான். ஆனால், நண்பன் ஒருவனை கேலி செய்யும் வகையில் ஒரு ஓவியத்தையும் வரைந்து, அதை மற்ற மாணவர்களிடம் காட்டி சிரிக்க வைத்தான்.


அதைப் பார்த்த ஆசிரியர் விக்னேஷிடம், “உனக்கு கிடைத்த திறமை மற்றவர்களை மகிழ்விக்கவும், நல்ல விஷயங்களைச் சொல்லவும் பயன்பட வேண்டும். ஒருவரை காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தக் கூடாது,” என்றார்.


ஆசிரியரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்த விக்னேஷ், தன் தவறை உணர்ந்தான். பின்னர் தனது ஓவியத் திறமையைப் பயன்படுத்தி பள்ளியின் சுவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒற்றுமை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற நல்ல கருத்துகளை வரைந்தான்.

அவனுடைய ஓவியங்கள் பள்ளி முழுவதும் பாராட்டப்பட்டன. விக்னேஷும் தனது திறமைக்கு ஒரு நல்ல நோக்கம் கிடைத்ததை உணர்ந்து மகிழ்ந்தான்.


நீதி:

ஒவ்வொருவரிடமும் இருக்கும் திறமையை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தினால், அது நமக்கும் பிறருக்கும் பயனையும் மகிழ்ச்சியையும் தரும்.

இன்றைய செய்திகள்

21.08.2026

🗒️ எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

🗒️தில்லியில் ராஜ்நாத் சிங் உடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு நிகழ்வு நடந்தது.

🗒️வங்கதேசத்தின் புதிய அதிபராக 
பி என் பி மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு 
செய்யப் பட்டுள்ளார்

 விளையாட்டுச் செய்திகள் 
🏀இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 
2 இலங்கை வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்.

Today's Headlines

🗒️  Temporary changes are being made to Chennai suburban train services due to the redevelopment work at Egmore Railway Station – Chennai Corporation announced.

🗒️ Japan’s Defence Minister met Defence Minister Rajnath Singh in Delhi.

🗒️ BNP senior leader Mirza Fakhrul Alamgir has been elected as the new President of Bangladesh.

🏀 Sports News

🗒️ 2nd Test against India: Two Sri Lankan players have withdrawn from the match.


20 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -20.08.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:477

குறள்:

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.  

பொருள்:

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்

பழமொழி :
Many strokes fell mighty oaks.

சிறு உளி மலையைப் பிளக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

“திறமை பிறப்பால் கிடைப்பதில்லை; பயிற்சியால் செதுக்கப்படுகிறது.”

Thought for the Day :

“Dream big, learn skills, work hard, and create your own opportunities.”

பொது அறிவு : 

1.தமிழக அரசின் 2026 -ஆம் ஆண்டிற்கான " தகைசால் தமிழர் விருது" யாருக்கு வழங்கப்பட்டது? 

திரு. எம். கிருஷ்ணசாமி. 

2. "தகைசால் தமிழர் விருது "யாருக்கு வழங்கப்படும் ?

தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும்,தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு தொண்டாட்றியவர்க்கு வழங்கப்படும்.

English words :

1. Tenacious – Never giving up easily, விடாமுயற்சியுள்ள.


2. Genuine – Truly sincere and real, உண்மையான.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம சுயராஜ்யம் என்பது காந்தியடிகளின் முக்கியக் கருத்து ஆகும்: ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையான உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைத் தானே தயாரித்துத் தற்சார்புடனும் சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும்.கைத்தொழில்கள்: பெரிய இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு மாற்றாக ராட்டை நூற்பது மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும்.

NMMS :

SAT -SOCIAL

சரியான இணையைத் தேர்வு செய்க. 

(1) மன்சப்தாரி முறை - அக்பர் 

(2) ஜப்தி முறை - ஔரங்கசீப் 

(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை 

(4) இரண்டாம் பானிபட் போர் - 1526. 

விடை: (1) மன்சப்தாரி முறை

ஆகஸ்ட் 20

இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள்

இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
நீதிக்கதை

 முயற்சி திருவினையாக்கும் – ஒரு நீதிக்கதை


ஒரு சிறிய ஊரில் பாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறிய மரச்சாமான் தொழில் செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருடைய பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தனர். வருமானமும் குறைவாக இருந்ததால் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது.


ஒருநாள் பாலன், “இந்தத் தொழிலால் நமக்கு என்ன பயன்? இதை விட்டுவிடலாம்” என்று நினைத்தார். அப்போது அவரது மனைவி, “நாம் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால் எப்படி முன்னேற முடியும்? புதிய முறையில் முயற்சி செய்து பாருங்கள்” என்று ஊக்கப்படுத்தினார்.


அதன்பிறகு பாலன் தினமும் புதிய வடிவமைப்புகளைக் கற்றுக்கொண்டார். தரமான மரங்களைத் தேர்ந்தெடுத்து, அழகான மேசைகள், நாற்காலிகள், சிறிய அலமாரிகள் போன்றவற்றை உருவாக்கினார். ஆரம்பத்தில் பலமுறை தவறுகள் ஏற்பட்டன. சில பொருட்கள் விற்காமல் போயின. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை.


சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பொருட்களின் தரம் மற்றும் அழகு பற்றி ஊர் முழுவதும் பேசத் தொடங்கினர். வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். சிறிய தொழில், பெரிய கடையாக வளர்ந்தது.


பாலன் தனது குடும்பத்தினரிடம், “நாம் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல; தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்த முயற்சிதான்” என்றார்.


நீதி:

👉 முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால், சாதாரண முயற்சியும் பெரிய வெற்றியாக மாறும். அதுவே “முயற்சி திருவினையாக்கும்.”

இன்றைய செய்திகள்

20.08.2026

🗒️பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

🗒️கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை புதிய ரயில்வே வழித்தடங்களுக்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 🗒️ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி  சீனாவின்  தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀கிராண்ட் செஸ் போட்டிகள் , இறுதிப்போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.

🏀 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

Today's Headlines

🗒️ Following the announcement of an increase in the milk procurement price, the Milk Agents and Workers Welfare Association thanked the Tamil Nadu Chief Minister.

🗒️ The Union Cabinet has approved new railway lines from Gummidipoondi to Gudur.

🗒️ A private Chinese company has achieved a major feat by landing a rocket booster vertically.

🏀 Sports News

🏀 Grand Chess Tournament: Praggnanandhaa has qualified for the final.

🏀 World Badminton Championship: Indian player Unnati Hooda won her match.


19 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -19.08.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:476

குறள்:


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

பொருள்:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

பழமொழி :
Many hands make work light.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

கற்றுக் கொள், திறனை வளர்த்துக் கொள்; எதிர்காலத்தை நீயே உருவாக்கிக் கொள்.

Thought for the Day :

Your talent becomes your strength when you train it with practice.

பொது அறிவு : 

1. மாற்றுத்திறனாளிக்களுக்காக அரும்பணியாற்றிய சிறந்த கலெக்டருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

திரு. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி) 

2. தமிழக அரசின் சார்பில் சுதந்திர தினத்தன்று சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு -2026 பெற்ற மாநகராட்சி எது? 

கோவை.

English words :

1. Articulate – Able to speak clearly, தெளிவாக பேசக்கூடிய.


2. Innovative – Introducing new ideas, புதுமையான.

புவியியலும் சுற்றுசூழலும் :

பாரன் தீவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது.அந்தமான் கடலில், போர்ட் பிளேரிலிருந்து சுமார் 135 கி.மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
தீவின் பரப்பளவு சுமார் 8.3 சதுர கிலோமீட்டர்.“Barren” என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக “வளமற்ற / தாவரங்கள் குறைவான” என்ற பொருளைக் கொண்டது.

NMMS :

MAT 

பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள் _______________________ 

 (1) மாறன் - எயினன்

 (2) மாறன் - ஆதித்தன் 

 (3) சாத்தன் - கணபதி 

 (4) மூர்த்தி - எயினன்

 விடை: (2) மாறன் - ஆதித்தன்

ஆகஸ்ட் 19

உலக புகைப்பட நாள்

உலக புகைப்பட நாள் (World photograph day)புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலக மனிதநேய நாள்

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். 
நீதிக்கதை

 பகிர்ந்தால் பெருகும் மகிழ்ச்சி

ஒரு அழகான கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அன்பானவன். ஆனால் தன்னிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது, அவனுடைய தாய் அவனுக்காக ஒரு சுவையான உணவுப் பெட்டியைத் தயாரித்து கொடுத்தாள். அதில் அருணுக்குப் பிடித்த இனிப்பும், பழங்களும் இருந்தன.

மதிய உணவு நேரத்தில் அருண் தனியாக அமர்ந்து உணவைச் சாப்பிடத் தொடங்கினான். அப்போது அருகில் அமர்ந்திருந்த அவனுடைய நண்பன் குமார், தன்னிடம் உணவு இல்லாமல் அமைதியாக இருப்பதை அவன் கவனித்தான். குமார் அன்று காலை அவசரமாகப் பள்ளிக்கு வந்ததால் உணவுப் பெட்டியை வீட்டிலேயே மறந்து விட்டிருந்தான்.

முதலில் அருண் தனது உணவை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட நினைத்தான். ஆனால் குமாரின் முகத்தில் தெரிந்த சோகத்தைப் பார்த்ததும் அவனுடைய மனம் மாறியது.

அவன் தனது உணவை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை குமாரிடம் கொடுத்தான். இருவரும் மகிழ்ச்சியுடன் உணவைப் பகிர்ந்து உண்டனர்.

அந்த நேரத்தில் அருணுக்கு ஒரு புதிய உண்மை புரிந்தது. உணவை தனியாகச் சாப்பிட்டபோது கிடைத்த மகிழ்ச்சியைவிட, அதை நண்பனுடன் பகிர்ந்து கொண்டபோது கிடைத்த மகிழ்ச்சி மிகவும் அதிகமாக இருந்தது.

அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான். அவனுடைய நண்பர்களும் அவனை மிகவும் நேசிக்கத் தொடங்கினர்.

நீதி:

நம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, பொருள் குறைவதில்லை; மாறாக அன்பும் மகிழ்ச்சியும் பெருகுகின்றன.

நினைவில் கொள்வோம்:

🌱 “பகிர்ந்து கொடுக்கும் கைகள், மகிழ்ச்சியை விதைக்கும் கைகள்.”

இன்றைய செய்திகள்

19.08.2026

🗒️15 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெட்ரோ ரெயிலுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் சேவைத் திட்டம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. 

🗒️தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த  ,உத்தரபிரதேசத்தை கலக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி முனிராஜிக்கு ஜனாதிபதி விருதுக்கு  தேர்வாகியுள்ளார் .

🗒️இந்தியாவின் தேர்தல் நடைமுறையை மேற்கோள் காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவிலும் கட்டாய வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது நாள் ஆட்டங்களில் 
திரிஷா - காயத்ரி இணை சாதனை படைத்துள்ளது.

Today's Headlines

🗒️ After waiting for 15 years, it has been confirmed that the Chennai MRTS (Flying Train) service will be connected with the Metro Rail network.

🗒️ IPS officer Muniraj, who is from Papparapatti in Dharmapuri district and is serving in Uttar Pradesh, has been selected for the President’s Award.

🗒️ Referring to India’s election system, US President Donald Trump has called for introducing a mandatory voter ID card system in the United States.

🏀 Sports News

🏀 On the second day of the 2026 World Badminton Championships being held in India, the Indian pair of Trisha and Gayatri has achieved a remarkable record.


18 August 2026

'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' கண்டிப்பாக செயல்படுத்தப்படும் - நிதி அமைச்சர்.

திமுக அரசின் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' கண்டிப்பாக செயல்படுத்தப்படும் - அமைச்சர்.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -18.08.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:475

குறள்:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.  


பொருள்:

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
  
பழமொழி :
Many a slip between the cup and the lip.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி : 

இன்றைய இளைஞரின் திறமைதான் நாளைய நாட்டின் வலிமை.

Thought for the Day :

Youth with skills, nation with strength.

பொது அறிவு : 

1. அரசியின் மணிமுடி என்று  அழைக்கப் படுவது எது?

தாஜ்மஹால்

2. திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை யார்?


திரு. கால்டுவெல்

English words :

1. Meticulous – Very careful and precise, மிகுந்த கவனமான.

2. Compassionate – Caring and kind, இரக்கமுள்ள.

புவியியலும் சுற்றுசூழலும் :

இங்கு அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் காணப்படுகின்றன.
பல்வேறு அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
செல்லுலார் சிறை (Cellular Jail) போர்ட் பிளேரில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதற்கு முக்கியத்துவம் உண்டு.

NMMS :

SAT - SOCIAL

பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது?

 (1) காயல்பட்டினம்

 (2) கொற்கை

 (3) காவிரிப்பூம்ட்டினம்

 (4) உறையூர் 

 விடை: (1) காயல்பட்டினம்

ஆகஸ்ட் 18

நேதாஜி அவர்களின் நினைவுநாள்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். 

விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை

 பங்கிட்டுத் தின்றால் பசியாறும்

ஒரு சிறிய கிராமத்தில் உதய் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது, அவனுடைய நண்பன் நியாஸ் மிகவும் சோர்வாக இருப்பதைப் பார்த்தான்.

“என்ன நியாஸ்? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்?” என்று உதய் கேட்டான்.

“இன்று காலை வீட்டில் இருந்து அவசரமாக வந்துவிட்டேன். உணவு சாப்பிடவில்லை . இப்போது மிகவும் பசிக்கிறது,” என்றான் நியாஸ்.

உதயிடம் அம்மா கொடுத்திருந்த இரண்டு இட்லிகளும் ஒரு வாழைப்பழமும் இருந்தன. முதலில் அவனுக்கும் பசி இருந்தது. இருந்தாலும், நண்பனின்நிலையை ப் பார்த்ததும் தனது உணவை இருவரும் சமமாகப் பகிர்ந்துக் கொண்டான்.

இருவரும் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து சாப்பிட்டனர். “உதய், உனக்கும் பசி இருந்திருக்கும் அல்லவா? உன் உணவை என்னுடன் ஏன் பகிர்ந்து கொண்டாய்?” என்று நியாஸ் கேட்டான்.

உதய் சிரித்துக்கொண்டே , “நாம் மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறையும். ஆனால், இருவரும் பகிர்ந்து சாப்பிட்டால் மனமும் நிறையும்!” என்றான்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ஆசிரியர் அவர்களின் செயலைக் கவனித்தார்.

“குழந்தைகளே , உணவைப் பகிர்ந்து கொள்வது சிறிய செயல் போலத் தோன்றலாம். ஆனால் அது அன்பையும் நட்பையும் வளர்க்கும் பெரிய பண்பு,” என்று பாராட்டினார்.

அன்றிலிருந்து உதயும் நியாஸும் மட்டுமல்லாமல், அவர்களுடைய வகுப்பு மாணவர்களும் தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

நீதி:

நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால், உணவு மட்டுமல்ல—அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். “பங்கிட்டுத் தின்றால் பசியாறும்; பகிர்ந்து வாழ்ந்தால் மனம் நிறையும்.”

இன்றைய செய்திகள்

18.08.2026


🗒️அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் தமிழக காவல் அதிகாரிகள் 13 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

🗒️தேசிய தேர்வு முகமை சீர்திருத்தம் குறித்து என்.டி.ஏ தலைமை இயக்குநர், உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்டோருடன் பிரகலாத் ஜோஷி ஆலோசனை மேற்கொண்டார்.

🗒️ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தொடக்ககால பிரபஞ்சத்தின் படங்களில் பல சிறிய சிவப்பு புள்ளிகள் காணப்பட்டுள்ளது என்பதைக்  காட்சிப் படுத்துகிறது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏏 *கிரிக்கெட்* 
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Today's Headlines

🗒️ Tamil Nadu police officers won 13 medals at the All India Police Games.

🗒️ Union Minister Pralhad Joshi held discussions with the Director General of the National Testing Agency (NTA), the Higher Education Secretary, and other officials regarding reforms in the NTA.

🗒️ Images of the early universe captured by the James Web Space Telescope show several small red dots.
Sports News

🏏 Cricket
First Test against India: Sri Lanka were all out for 284 runs. India won the toss and elected to bat first.


17 August 2026

களஞ்சியம் App இல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் Update - வழிமுறைகள் மற்றும் LATEST VERSION UPDATE LINK ATTACHED

களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது...

*NHIS - Family
*member  update
*Enhancement

தற்போது களஞ்சியம் ஆப்பில் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் 

2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும் 
 
3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் சொல்லவும் 

4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும் 

5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும் 

6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது 

7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 

8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம் 

9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும் தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம் 

இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Kalanjiyam App Latest Version CLICK HERE TO DOWNLOAD

JOIN KALVICHUDAR CHANNEL