t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2025







திருக்குறள்:

அதிகாரம்-நீத்தார் பெருமை.

குறள்:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செயகலா தார். 

பொருள் :முடியாத செயல்களையும் முடித்து காட்டுபவர் பெரியோர் .முடியாது என்று முயற்சி செய்யாமல் ஒதுங்குவோர் சிறியோர் என கூறப்படுவர் 

பழமொழி :
United we stand,divided we fall. 

ஒன்று சேர்ந்தால் நிலைப்போம், பிரிந்தால் வீழ்வோம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

வாழ்வின் பாடத்தை கற்றுக் கொள்ள பெற்றோர்கள் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும்.



---கண்ணதாசன்

பொது அறிவு : 

01.பூண்டி நீர் தேக்கத்தை வடிவமைத்தவர் யார்?


திரு.S.சத்தியமூர்த்தி
Thiru. S. Sathyamoorthi

02. வாயுக்களின் அழுத்தத்தை அளவிட உதவும் கருவி எது?

அழுத்தமானி Manometer
English words :

put up with – tolerate, பொறுத்துக் கொள்ளுதல்



Grammar Tips: 

 Where to use 'tial' and 'cial' both have the same sound. 
If the word ends with t, use tial

Ex: Part - partial
Substant- substantial 
Initiate - initial ( last e removed)

When the word ends with c or ce, use 'cial' 

Ex: commerce - commercial 
Face - facial 
Office - official

அறிவியல் களஞ்சியம் :

 மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

செப்டம்பர் 03

சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீதிக்கதை

 வழிபோக்கனும் வைரகல்லும்



ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா? என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே! என்று திட்டினான். அதற்கு அவன், அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள் என்றான்.


இன்றைய செய்திகள்

03.09.2025

⭐வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

⭐பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

⭐டெல்லியில் கனமழை: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

⭐ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1400 ஆக அதிகரிப்பு


🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்-க்கு முதலமைச்சர் வாழ்த்து

🏀பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு

🏀 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
 இந்த போட்டியில் சீனா 26 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இந்தியா 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.


Today's Headlines

⭐Postgraduate NEET exam scheduled for June 15 is postponed 

⭐ Tamil Nadu government approved the Poontamalli-Paranthur Metro Rail project 

⭐ Heavy rains in Delhi. Flooding in the Yamuna River. The public is warned.

⭐Afghanistan earthquake: Death toll rises to 1400.

 SPORTS NEWS 

🏀Chief Minister congratulates Tamil Nadu player Kukesh for defeating the world champion 

🏀 Women's T20 World Cup schedule announced, with 8 teams including Pakistan participating.

🏀 The Asian Athletics Championships began on the 27th of last month and concluded yesterday. China topped the medal tally with 26 medals, and India came in second with 24.


SPECIAL TET நடத்தப்பட வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது பல்வேறு ஆசிரியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் இறுதியாக அளித்துள்ளது என்று கருதப்படுகிறது. எனவே இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது என்று கருதப்படுகிறது 

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனும் பட்சத்தில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக மட்டும் தனியாக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது 

அவ்வாறு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இரண்டு ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 4 தகுதித் தேர்வு நடத்தி தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களின் நலனை காக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 40 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை

தகுதி தேர்வு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேட்டி (வீடியோ)

 


தகுதி தேர்வு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம் கண்டிப்பாக தற்போதைய அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று கூறியுள்ளார். 

மேலும் இது சார்ந்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்றும் கூறியுள்ளார்.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.09.2025





திருக்குறள்:

குறள் 688: 

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 

     விளக்க உரை: 

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

பழமொழி :
A clear mind makes a bright future.    

தெளிவான மனம் பிரகாசமான எதிர்காலத்தை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

1 September 2025

TET உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழாக்கம்


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்.. வருமாறு..




பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்..
வருமாறு..

 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்..

 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..

 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..

ஒரு ஆசிரியர் தனது பணியை தொடரவே இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 பதிவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பணி நிறைவுக்கு 5 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு விலக்கு. மற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்.


29/7/2011 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள்
தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்...

*29/7/2011 முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்...

Kalanjiyam App New Update-1.22.4




App Update செய்ய Direct link

Whats New:- Education Advance update.
Marriage Advance update. 
CPS Balance report download is now available. 
SGSP Bank info and report's are updated.



    

JOIN KALVICHUDAR CHANNEL