t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 April 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2025


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1003

அதிகாரம்:நன்றிஇச் செல்வம்
 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
 தோற்றம் நிலக்கும் பொறை.

பொருள்:
சேர்த்த பொருளை இறுக்கி வைத்துக் கொண்டு, ஈகை புகழில்லாத ஆடவர் பூமிக்கு பாரமாவர்.

பழமொழி :
செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.  

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால்,  என் நேரத்தை மட்டும் கேட்காதே!---நெப்போலியன்  ஹில்

பொது அறிவு : 

1. தண்ணீரில் போட்டால் மிதக்கும் கோள் எது? 

விடை : சனி.       

2. மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது? 

விடை: சகாரா பாலைவனம்

English words & meanings :

 Ointment.      -   களிம்பு மருந்து

Powder.     -       பொடி

வேளாண்மையும் வாழ்வும் : 

 ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்த முடியும். 

ஏப்ரல் 02

கவிக்குயில் சரோஜினி அவர்களின் நினைவுநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
நீதிக்கதை

 நன்றி மறந்த சிங்கம் |



முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.



“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.



அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.



மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி 

நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.



“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று 

நைசாகப் பேசியது சிங்கம்.



சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.



இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.



“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்?  என்றது சிங்கம்.



“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.



அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.அனைத்தையும் 

கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.



“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.



உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்.“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.



“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.



சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.



“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.



“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள்.  முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.



நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

 

நீதி :ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறக்க கூடாது. மறந்தால் தீமை நமக்கே.

இன்றைய செய்திகள்

02.04.2025

* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.

* இதுவரை அரசு 
பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு

* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.

* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Today's Headlines

* A wooden bridge is  opened in the middle of the forest in Mumbai!
The newly built forest corridor in Malabar Hill, Mumbai, opened yesterday.

 * So far 
Admission of 1,17,310 students in government schools - Education Minister Anbil Mahesh is proud.

* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code 

* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan

* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.

* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy.



1 April 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்:நன்றி இச் செல்வம்

குறள் எண்:1002
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருவான்ஆம் மாணாப் பிறப்பு.

பொருள்:
அனைத்தும் பொருளால் ஆகும் என்று பிறர்க்கு கொடுக்காத கருமியில்
மறுமையில் இழி
 பிறப்பு உண்டாகும்.

பழமொழி :
A cracked bell never sounds well 

உடைந்த சங்கு ஒரு நாளும் பரியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.  

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

வாய்மைக்கு மிகவும் நெருங்கிய நண்பன் அச்சமின்மையே!--நேரு

பொது அறிவு : 

1. அணுவின் மைய பாகத்தை உருவாக்குவது எது?

நியூட்ரான் மற்றும் புரோட்டான்

2. இளம் அன்னப் பறவையின் பெயர் என்ன?

சிக்னட் cygnet

English words & meanings :

 Medicine. - மருந்து 
 
Nausea. - குமட்டல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 பல் துலக்கும் போதும், முகச் சவரம் செய்யும் போதும் தண்ணீர்க் குழாயை திறந்து விட்டுச் செல்லாமல் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள்.

ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்



வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
நீதிக்கதை

 உங்க பேரைச் சொல்லி....



கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார்.அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.

"உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.

"இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.

அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும்என்று நினைத்தார் கந்தசாமி.

"அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

"அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

"இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச்செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.

""நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.

"எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை,'' என்றார்.தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.

உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.

பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.பண்ணையாரை வணங்கிய அவர்,"ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது.

""அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது.பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.

பணத்தை அவரிடம் நீட்டினார்.பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.

"உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள். மேலும், மேலும் உனக்கு வெற்றி கிடைக்கும்,'' என்று பாராட்டினார்.

அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.

பண்ணையாரை வணங்கிய அவர்,"உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.

அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.இதை பார்த்த பண்ணையார்,"என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.

"நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.

இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார் கந்தசாமி.

"நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?''என்று கோபத்துடன் கத்தினார் பண்ணையார்.

"சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?

"வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.

அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.

வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளைஅவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்று வருந்தினார் பண்ணையார்.

அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.

நீதி: பேராசை பெரும் நஷ்டம்

இன்றைய செய்திகள்

01.04.2025

* அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

* வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப்ரல் 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்க உள்ளது.

* மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி செர்பிய வீரர் மென்சிக் சாம்பியன்.

* கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி.

Today's Headlines

* To address the increasing electricity demand, the Tamil Nadu Electricity Board plans to implement a 660-megawatt expansion project for the Ennore Thermal Power Plant.

   * A "ChatGPT" training workshop for business owners and entrepreneurs will be held in Chennai on April 3rd.

   * The Armed Forces Special Powers Act has been extended for another six months in Manipur and other northeastern states.
 
   * The death toll from the earthquake in Myanmar has risen to 2,056.More than 3,900 people have been injured.270 people are still missing, according to the Myanmar military junta.

   * Serbian player Mensik defeated Djokovic to win the Miami Open tennis championship.
 
   * The Brazilian legends team defeated the India All-Stars team in a football friendly match.


31 March 2025

School Calendar - APRIL 2025 பள்ளி நாட்காட்டி - ஏப்ரல் 2025









05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள்

*வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்

*அரசு விடுமுறை நாட்கள்

மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்

தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி

*தேர்வுகள் விவரம்

*1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

(முற்பகல் 10.00 - 12.00 வரை)

07-04-2025 (திங்கள்) - தமிழ்
09-04-2025 (புதன்) - ஆங்கிலம்
11-04-2025 (வெள்ளி) - கணிதம்

*4 & 5ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

(பிற்பகல் 2.00 - 4.00 வரை)

07-04-2025 (திங்கள்) - தமிழ்
09-04-2025 (புதன்) - ஆங்கிலம்
11-04-2025 (வெள்ளி) - கணிதம்
15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்
17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல்

18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்

*6-9 வகுப்பு தேர்வு

08-04-2025 -- தமிழ்
09-04-2025 - ஆங்கிலம்
16-04-2025- கணக்கு
21-04-2025 - அறிவியல்
22-04-2025 - உடற்கல்வி
23-04-2025 - சமூக அறிவியல் (6,7)
24-04-2025 -சமூக அறிவியல் (8,9).

30 March 2025

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு - தேர்வு அட்டவணை வெளியீடு

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு

வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது



28 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 28.03.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்:பண்புடைமை

குறள் எண்:1000

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று.

பொருள்:
தீயவன் பெற்ற பெரும் செல்வம். பால் அது வைக்கப்பட்ட பரத்திரத்தின் கெடுதியால் கெடுதல் போலாகும்.

பழமொழி :
Borrowing is sorrowing.

கடன் துன்பத்திற்கு வழி வகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே,உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனேன்றால் பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது. ---விவேகானந்தர்

பொது அறிவு : 

   1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?            

விடை : நாக்கு.    

2.உலகிலேயே மிக நீளமான பழமையான கால்வாய் எது ?


 விடை : கிராண்ட் கால்வாய்( சீனா )
English words & meanings :

 Fever. - காய்ச்சல்,

Headache. - தலைவலி
வேளாண்மையும் வாழ்வும் : 

 பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க் குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

மார்ச் 28

மாக்சிம் கார்க்கி அவர்களின் பிறந்தநாள்


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நீதிக்கதை

 முரசொலி 



ஒரு நரி பசியினால் இரை 

தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று 

அது பயந்தது. 

தன் பசி தீருமுன் தான் 

பிறிதொரு மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. 

நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. 

இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

நீதி: கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே நன்று.

இன்றைய செய்திகள்

28.03.2025

* ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.

* ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது.

* பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை.

* அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

* சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* The high court ordered to provide pension money benefits immediately to the Government Transport Corporation.

* A separate resolution in Tamil Nadu Legislative Assembly regarding the matter on Vagbu

* In the Gulf of Mannar in Ramanathapuram, the Ram Sethu sand dunes which connects Sri Lanka and India connecting have also been found to be the largest reproductive site of the six rare seawater bird species.

* The Parliamentary Standing Committee recommends the immediate release of funds for the states who do not accept the BMSR scheme.

* The world countries have retaliated to the announcement of US President Donald Trump's announcement that the US imported vehicles and its major spare parts will be permanently charged.

* IPL in Chennai Metro trains will be operated till 1:00 pm, as the cricket match is being held today, Chennai Metro Rail Company said.

* The International Table Tennis Tournament started in Chennai yesterday.

Covai women ICT_போதிமரம்


JOIN KALVICHUDAR CHANNEL