t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 June 2026

2026-27 பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2026

திருக்குறள்: 

"அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:429

குறள்:

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். 


பொருள்:

  நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.  "

பழமொழி :
Discretion is better than valour

விவேகம் வீரத்தினும் சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"கல்வி என்பது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு."

Thought for the Day :

Education is the most powerful tool you can use to shape your future.

பொது அறிவு : 

1. மனித உடலில் தன்னைத் தானே  பழுதுபடுத்திக் கொள்கிற உறுப்பு எது?

கல்லீரல்.    

2. உலகிலேயே  மிகச்சிறிய அரசு எது?

 வத்திக்கான் நகரம் (Vatican City)

English words :

Influence – Affect, தாக்கம் ஏற்படுத்து.

Maintain – Preserve, பராமரி.

NMMS :

ஒரு வட்ட வடிவ புல்வெளியைச் சுற்றி அலங்கரிக்க ஒரு மீட்டருக்கு ₹50/- வீதம் ₹11,000/- செலவாகிறது எனில் அதன் விட்டம்  என்ன??        

1. ரூ. 50 செலவு = 1 மீ

      ரூ 11,000 செலவு = 50/11000 = 220 மீ

2. வட்டத்தின் சுற்றளவு = 2πr = 220 மீ

                                                   πr = 220/2 = 110 

                          ( π=22/7) 22/7  r  = 110

                                                     r = 110 * 7 / 22   

                                                       r = 770/22 = 35 மீ

     வட்டத்தின் ஆரம்.           r = 35 மீ 

எனில்  வட்டத்தின் விட்டம் d = 2 * r 

                                                      = 2 * 35 = 70 மீ



  விடை = 70மீ 

புவியியலும் சுற்றுசூழலும் :

"பூமியின் இயற்கை துணைக்கோள் சந்திரன் ஆகும்.

பூமியில் மட்டுமே நீர் நிலைகள் பெரும் கடல்கள் உள்ளன. இந்த பெருங்கடல்கள் சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தை பிரதிபலிக்கின்றன. எனவே  ""நீலக் கோள்"" (Blue Planet) என்று அழைக்கப்படுகிறது"

ஜூன் 16

சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் நினைவுநாள்



தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.

இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.

அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.


பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் நினைவுநாள்

பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - வங்கமொழியில் - প্রফুল্ল চন্দ্র রায়, ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர்.
நீதிக்கதை

 நீதிக்கதை: "தூய்மையான வகுப்பறை"

ஒரு பள்ளியில் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள்  படிப்பில் நன்றாக இருந்தாலும், வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. பென்சில் சீவல்கள், காகிதத் துண்டுகள் போன்றவற்றை தரையில் போட்டுவிடுவார்கள் ‌

ஒருநாள் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். வகுப்பறை மிகவும் அசுத்தமாக இருந்தது. அதை பார்த்த ஆசிரியர், "இந்த அறை நம் இரண்டாவது வீடு. வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வோமோ, அதுபோல வகுப்பறையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த நாள் ஆசிரியர் இரண்டு செடிகளை கொண்டு வந்தார். ஒரு செடியை சுத்தமான இடத்திலும், மற்றொரு செடியை குப்பைகள் நிறைந்த இடத்திலும் வைத்தார். சில நாட்களில் சுத்தமான இடத்தில் இருந்த செடி பசுமையாக வளர்ந்தது. குப்பைகள் அருகில் இருந்த செடி வாடத் தொடங்கியது.

இதைக் கண்ட  மாணவர்கள் தூய்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர். அதன்பிறகு அனைவரும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டு, தினமும் வகுப்பறையைச் சுத்தமாக வைத்தனர்.

சில மாதங்களில் அவர்களின் வகுப்பறை பள்ளியிலேயே மிகவும் தூய்மையான வகுப்பறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆசிரியர் அனைவரையும் பாராட்டினார்.

நீதி: தூய்மை நம் ஆரோக்கியத்தையும், கற்றல் சூழலையும் மேம்படுத்தும். வகுப்பறையை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். 🌷📚

இன்றைய செய்திகள்

16.06.2026


🗒️தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல்  8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவரகளுக்கு  காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப் படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு.

🗒️பெட்ரோல், டீசல் விலை உயர்வு மறு ஆய்வு செய்யப்படும் - மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி.

🗒️அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மற்றும்  அமைதி ஒப்பந்தம் இறுதியானதன்  பொருட்டு , உலக நாடுகள் வரவேற்பு

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀உலகக் கோப்பை வில்வித்தை - இரட்டை தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.

🏀நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி.

Today's Headlines

🗒️ Chief Minister Vijay announced that the Breakfast Scheme will be expanded to cover students studying up to Class 8 from September 17, the birth anniversary of Periyar E. V. Ramasamy.

🗒️ The increase in petrol and diesel prices will be reviewed again, said Union Minister Suresh Gopi.

🗒️ Countries around the world have welcomed the finalization of the ceasefire and peace agreement between United States and Iran.

Sports News

🏀 In the Archery World Cup, Dhiraj Bommadevara created history by winning two gold medals.

🏀 Nations Cup Hockey: The India Women's National Field Hockey Team started their campaign with a victory over the United States Women's National Field Hockey Team.


15 June 2026

Academic Calendar 2026-27 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.06.2026

திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:428

குறள்:

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்:

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்

பழமொழி :
Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

பொறுமை கசப்பானது; அதன் கனி இனிமையானது.

Thought for the Day :

Learning is a treasure; you can take it with you wherever you go.

பொது அறிவு : 

1 . தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடின் தற்போதைய எண்ணிக்கை எவ்வளவு? 

1364. 

2. உலக பூச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? 

ஜுன் 6.

English words :

Generous – Liberal, தாராளமான.

Hesitate – Doubt, தயங்கு.

NMMS :

36 மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பும், 24 மீ உயரமுள்ள ஒரு இணைகரத்தின் பரப்பும் சமம் எனில், இணைகரத்தின் அடிப்பக்க அளவு என்ன?

1. சதுரத்தின் பக்கம் = 36 மீ

சதுரத்தின் பரப்பளவு = a2


                                           = 36 * 36 = 1296 மீ2


2. சதுரத்தின் பரப்பளவு = இணைக்கரத்தின் பரப்பளவு = 1296 மீ2

    இணைக்கரத்தின் பரப்பளவு = அடிப்பக்கம் * உயரம் = 1296

                                                            அடிப்பக்கம் * 24 = 1296 

                                                            அடிப்பக்கம்  =  1296 / 24 = 54 மீ

விடை : 54மீ

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி தனது அச்சில் சுழல்வதால் பகலும் இரவும் ஏற்படுகின்றன.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் உருவாகின்றன.

ஜூன் 15

உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.
நீதிக்கதை

 "நேர்மையான மாணவி "

ஒரு பள்ளியில் கவிநயா என்ற மாணவி படித்து வந்தாள். அவள் எப்போதும் உண்மையே பேசுவாள்.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது, பள்ளி மைதானத்தில் ஒரு அழகான பேனா கிடந்தது. அது மிகவும் விலையுயர்ந்த பேனாவாக இருந்தது. கவிநயாவின் நண்பர்கள் சிலர், "இதைக் கண்டுபிடித்தது நீதானே! நீயே வைத்துக்கொள்" என்றார்கள்.

ஆனால் கவிநயா, "இல்லை. இது யாரோ ஒருவருடைய பொருள். அவரிடம் சேர வேண்டும்" என்றாள். உடனே அந்தப் பேனாவை ஆசிரியரிடம் கொடுத்தாள்.

மறுநாள் ஒரு மாணவன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் வந்தான். "என் அப்பா வாங்கிக் கொடுத்த பேனா தொலைந்து விட்டது" என்றான். ஆசிரியர் கவிநயா கொடுத்த பேனாவை அவனிடம் கொடுத்தார்.

அந்த மாணவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஆசிரியரும் கவிநயாவைப் பாராட்டி, "நேர்மை என்பது மனிதனின் மிகப் பெரிய செல்வம்" என்றார்.

அன்று முதல் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் கவிநயாவைப் போல நேர்மையாக இருக்க முயன்றனர்.

நீதி:

**"நேர்மையே சிறந்த செல்வம். 

இன்றைய செய்திகள்

15.06.2026

🗒️பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 
 பள்ளிகளில் மாணவர்கள் சாதி கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவுறித்தியுள்ளார்.

🗒️கேரளத்தை அச்சுறுத்தும் நிபா வைரஸ், கோழிக்கோடு மாவட்டத்தில் 'நிபா' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக குழு விரைந்ததுள்ளது.

🗒️இந்தியாவில் மலிவு விலையில் மருத்துவ வசதிகள். பிரதமர் மோடி பெருமிதம் .

 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பேட்மிண்டன் அணி அறிவிப்பு. இந்திய பெண்கள் அணியில் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து. இடம் பெறுகிறார்.

Today's Headlines

🗒️ School Education Minister Rajmohan has firmly announced that students will not be allowed to wear caste-identifying threads in schools.

🗒️ The Nipah virus is posing a threat to Kerala. A Nipah virus infection has been detected in Kozhikode district, and a team from the Indian Council of Medical Research (ICMR) has rushed to Kerala.

🗒️ Prime Minister Modi expressed pride in India's affordable healthcare facilities.

Sports News

🏀 Asian Games: The Indian badminton team has been announced. Star shuttler P. V. Sindhu has been included in the Indian women's team.


12 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2026




குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்

திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:427

குறள்:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 

பொருள்:

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.  

பழமொழி :
Coming events cast their shadow before

ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே


இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

தோல்வி வெற்றியின் தாய்.

Thought for the Day :

Today's responsibility creates opportunities tomorrow.

பொது அறிவு : 

1. 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 எங்கு நடைபெற உள்ளது? 

கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து. 

2. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

ஏப்ரல் 24.

English words :

Essential – Necessary, அத்தியாவசியமான.


Frequent – Regular, அடிக்கடி நிகழும்

NMMS :

XYW, UVT, RSQ, OPN, _______ 

(1) KLM. (2) LMK. (3) LKM. (4) KML. 

Pattern : 2nd, 3rd, 1st

1) correct order is WXY, according to the pattern XYW

2) correct order is TUV, according to the pattern UVT

3) correct order is QRS, according to the pattern RSQ

4) correct order is NOP, according to the pattern OPN

5) correct order is KLM, according to the pattern LMK

விடை: (2) LMK

புவியியலும் சுற்றுசூழலும் :

குடிமையியல்

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.

ஜூன் 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
நீதிக்கதை

 திருட்டு முட்டையும் திருந்திய ஓணானும்

ஒரு விவசாயியின் கோழிகள் இடும் முட்டைகளை ஒரு ஓணான் தினமும் திருடி தின்று வந்தது. 

அதன் மனைவியும் பிள்ளைகளும்,

"திருட்டு தவறு, ஒருநாள் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும்"

என்று எச்சரித்தும் அது கேட்கவில்லை.

ஒருநாள் விவசாயி ஒரு அவித்த முட்டையை கோழி அருகில் வைத்து விட்டார். வழக்கம்போல் வந்த ஓணான் அதை விழுங்கியது.

அவித்த முட்டை வயிற்றில் சிக்கியதால் வேகமாக நகர முடியவில்லை.

விவசாயி துரத்த, ஓணான் தன் பொந்திற்குள் ஓடியது. தலை மட்டும் உள்ளே சென்றது, ஆனால் உடல் வெளியே சிக்கிக் கொண்டது. விவசாயியிடம் அடியும் வாங்கியது.

அப்போது தான் தன் தவறை உணர்ந்த ஓணான், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு இனி திருட மாட்டேன் என்று மனந்திரும்பியது.

சிறிது நேரத்தில் முட்டை ஜீரணமாகி, அது பாதுகாப்பாக பொந்திற்குள் சென்றது. அதன்பின் திருட்டை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்ந்ததாம்.

💎 நீதி :

🔹 திருட்டின் சுகம் சில நாள்; அதன் துன்பம் பல நாள்.

🔹 தவறை உணர்ந்து திருந்துகிறவர்களுக்கு எப்போதும் ஒரு புதிய வாய்ப்பு உண்டு.

🔹 அறிவுரையை கேட்காதவன் அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்வான்.

இன்றைய செய்திகள்

12.06.2026

🗒️ நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்.

🗒️நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்”  என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி  பேச்சு .

🗒️ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀 நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து FIFA போட்டித் தொடரில் புதிய விதிமுறைகள் அறிமுகம்.

Today's Headlines

🗒️ Chief Minister Vijay emphasized at the NITI Aayog meeting that Tamil Nadu should be exempted from the NEET examination.

🗒️ Prime Minister Narendra Modi said at the NITI Aayog meeting, “Let us all work together for the development of the nation.”

🗒️ The Iranian military announced that the Strait of Hormuz will be completely closed.

Sports News

🏀 New rules were introduced in the FIFA World Cup football tournament that began yesterday. ⚽


அனைத்து பள்ளிகளிலும் இன்று (12-06-2026) எடுக்க வேண்டிய குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி!

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி!(12.06.2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு)

11 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2026

     

திருக்குறள்: 


அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:426

குறள்:

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

பொருள்:

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

பழமொழி :
Fortune favors the brave.

துணிவுடையோர்க்கே வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது.

Thought for the Day :

Responsibility is the bridge between goals and achievements.

பொது அறிவு : 

1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்? 

N .S.ராஜா சுப்பிரமணி. 

2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்? 

உயர் திரு. ஆர். குமார் அவர்கள்.

English words :

Benefit – Advantage, நன்மை.

Conceal – Hide, மறை.

NMMS :

1, 7, 3, 63, 5, 215, 7, ______ 

(1)342. (2) 511. (3)517. (4) 343. 

1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன. 

2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு 

             (முந்தைய எண் + 1)3  -  1

        I) இரண்டாமிட எண் (1 + 1)3  -  1 =  (2)3  -  1 = 8 - 1 = 7

        II) நான்காமிட எண் (3 + 1)3  -  1 =  (4)3  -  1 = 64 - 1 = 63


          III) ஆறாமிட எண் (5 + 1)3  -  1 =  (6)3  -  1 = 216 - 1 = 215

        IV) எட்டாமிட எண் (7 + 1)3  -  1 =  (8)3  -  1 = 512 - 1 = 511

விடை: (2) 511

புவியியலும் சுற்றுசூழலும் :


"இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம்.

குடிமையியல் என்றால் என்ன?

குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும்.

ஜூன் 11

உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.
நீதிக்கதை

  "வீட்டுப் பாடத்தின் மதிப்பு"

ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான்.

ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான்.

மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.

மணி  மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அன்று மாலை மணி கோபியிடம், “நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?” என்று கேட்டான்.

கோபி சிரித்துக்கொண்டு, “வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது,” என்றான்.

அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான்.

நீதி: வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன. 📚✏️

இன்றைய செய்திகள்

11.06.2026

🗒️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு   அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்.

🗒️இந்தியாவின் நீண்ட கால பிரதமர் எனும்  சாதனை படைத்தார் நரேந்திர மோடி. 

🗒️இங்கிலாந்து நாட்டில்  சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி துருவ்ராவத்-மனீஷா  வெற்றி பெற்றுள்ளனர்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில்  பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

Today's Headlines

🗒️ Minister Rajmohan awarded incentive scholarships to students who scored high marks in the Class 10 and Class 12 public examinations.

🗒️ Narendra Modi has set a record as India's longest-serving Prime Minister. 

🗒️ In England, restrictions have been imposed on children using social media platforms. England.

Sports News

🏀 In the Australian Open Badminton Tournament, the Indian pair Dhruv Rawat and Manisha emerged victorious. Australian Open Badminton Tournament.

🏀 In the women's singles category of the Australian Open Badminton Tournament, P. V. Sindhu secured a victory. P. V. Sindhu.


JOIN KALVICHUDAR CHANNEL