t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2025



திருக்குறள்:

குறள் 121:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
விளக்கம் :

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

பழமொழி :
Small efforts every day add up to big results.

தினசரி சிறு முயற்சிகள் பெரிய வெற்றிகளை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. பிறருடைய முதுகில் ஏறி பயணம் செய்ய நினைக்காதே -நியேட்சே.

பொது அறிவு :

01.நெப்டியூன் கிரகம் சூரியனை சுற்றிவர எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது?

165 புவி ஆண்டுகள்

(165 Earth years)

02.தேசிய சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

25 ஜனவரி (25 January)

English words :

avian – related to a bird.பறவை சம்பந்தப் பட்ட. aspire – to have a strong desire to do something. அழுத்தமான விருப்பம்

Grammar Tips:

The bridge rule
When u hear /j/ sound at the end of the words use
-dge after short vowels otherwise -ge only

Ex short vowel

Ju*dge*, bri*dge*
Pa*ge*, ca*ge*

அறிவியல் களஞ்சியம் :

பாக்ஸ்பி2 மரபணுவின் வெளிப்பாட்டினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். பெண்குழந்தைகளும் தமது வயதினை ஒத்த ஆண்குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதும் இதனால்தான்! சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.

ஜூலை 22

பை-தோராய-நாள்
பை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். பை (π) என்பது 3.14 என்ற தசம மதிப்பைக் கொண்டுள்ளது. 1706 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கணிதவியலாளர் வில்லியம் ஜோன்ஸ் இந்த விகிதத்தைக் குறிக்க π குறியீட்டை உருவாக்கினார், பின்னர் இது சுவிஸ் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலரால் பிரபலப்படுத்தப்பட்டது.

பை தோராய நாள் ஜூலை 22 அன்று கொண்டாடப்படுகிறது மற்றும் பை நாள் மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை

எல்லா உயிர்களுக்கும் உதவி செய்

ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு தூண்களாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.

அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.

அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.

அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின. அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது.

அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான். போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள். போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான். குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான்  என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான். இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவன்  இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான்  அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான். எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.  ‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’  மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது. அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை தமிழாக்கம்: ஆல்பர்ட் ” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.

இன்றைய செய்திகள்

22.07.2025


⭐சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

⭐இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ரூ.14.46 லட்சம் கோடியில் சீனா பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது.

⭐இந்தோனேசியாவில் சொகுசு கப்பல் தீ விபத்து: 5 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் செஸ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஹம்பி

🏀வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

🏀2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

Today's Headlines


 ⭐New Chief Justice of Chennai  High Court  takes Oath .

⭐China has started building a huge dam worth Rs. 14.46 lakh crore on the Brahmaputra River, which flows in Tibet near the Indian border.

⭐5 died  in luxury cruise ship fire in Indonesia 

 *SPORTS NEWS* 

🏀Indian player Humpy advances to semifinals of Women's Chess World Cup

🏀Australia wins first T20 against West Indies 

🏀2025 Chess World Cup to be held in India, announced.


21 July 2025

மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் மாறுதல் ஆணைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2025



திருக்குறள்: 

குறள் 115: 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி. 

விளக்கம் : 

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி :
Stay curious,stay learning. 

ஆர்வம் இருந்தால் தான் கற்றல் தொடங்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை . - காமராஜர்

பொது அறிவு : 

01.இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?


ஜெய்சல்மார் - ராஜஸ்தான்
Jaisalmar - Rajasthan

02. பூகம்ப அதிர்வை அளக்க பயன்படும் கருவி எது?

சீஸ்மோகிராப்
Seismograph
English words :

Parchment – a material made from the skin of animals for writing purposes in the past.

Grammar Tips: 

The catch rule

After short vowels, use 'tch'
Ex. Catch

After consonants and long vowels, use ch
Ex. Peach, bench 

அறிவியல் களஞ்சியம் :

 ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது

ஜூலை 21

21 July 2007 – Pratibha Patil became the first woman President of India.

21 ஜூலை 2007 - திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் ஆனார்.
நீதிக்கதை

 அறிவு உயிரைக் காப்பாற்றும்



வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 

அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிர்க்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான். 

அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். 

“ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைக்கிறேன். மற்றொரு பங்கை கடனாகத் தருகிறேன். நான்காவது பங்கை வீசி எறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராகப் பேசினான்.

இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.

“நீ சொன்ன பதிலில் வரியாகத் தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன். 

அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனுக்கு அடைக்கிறேன் என்றேன்.

இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றப் போகிறவன் அவன். அதனால், அதை கடனாகத் தருகிறேன் என்றேன். 

நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 

அந்த உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவுக் கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான். 

அரசவைக்கு வந்த அரசன், தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 

அரசனுக்கு இந்த புதிரைக் கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றார்.. 
“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 

கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டான்.

அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.

அரசவைக்கு இழுத்து வரப்பட்ட உழவனை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல்? நான் இல்லாமல் யாரிடமும் அந்த புதிருக்கான விளக்கத்தை சொல்லக்கூடாது. சொன்னால் உன் உயிர் போய்விடும் என்று உனக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். என் கட்டளையை மீறி சொல்லி இருக்கிறாய், உன் உயிரை இப்பொழுது யார் காப்பாற்றப் போகிறார் என்று பார்ப்போம்” என்று கோபத்துடன் கேட்டான் அரசன். 

அதற்கு அந்த உழவன் அரசனைப் பார்த்து, “அரசே, நான் சொல்வதைக் கேளுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று பணிவாக கூறினான்,” உழவன். 

அதற்கு அரசன், “நான் இல்லாமல் யாரிடமும் இந்த புதிருக்கான பதில் சொல்லக்கூடாது என்றேன் அல்லவா?” என்று கத்தினான். 

உடனே அமைச்சர் எடுத்து கொடுத்த பொற்காசுகளை அரசனிடம் காட்டிய உழவன், “இந்த பொற்காசுகளில் ஒரு பக்கத்தில் தங்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் அமைச்சரிடம் பதில் கூறினேன். 

எனவே தங்களை வைத்துக் கொண்டுதான் நான் விளக்கம் கூறினேன். தங்கள் கட்டளையை நான் எந்த வகையிலும் மீறவில்லை” என்று கூறினான். 

உழவனின் அறிவுக் கூர்மையை அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவுக் கூர்மையே ஆகும்.

இன்றைய செய்திகள்

21.07.2025

⭐இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை:
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

⭐ இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 கோடி பேர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.5 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் அதாவது நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

⭐இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC அமைப்பை (Russia-India-China Mechanism) உருவாக்க ரஷ்யா முயற்சி எடுத்து உள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி

🏀Freestyle செஸ் தொடர்: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி


Today's Headlines

⭐Warning to coastal residents near Mettur dam regarding the dam being filled for the 3rd time this year.

⭐ In India, about 770 million people over the age of 18 are suffering from type 2 diabetes. 25 million people are at risk of developing pre-diabetes.

⭐Russia is trying to create an RIC (Russia-India-China Mechanism) system that will bring together India, China, and Russia.

 SPORTS NEWS 

🏀Indian player Humpy won in the World Cup Women's Chess quarterfinal 

🏀 Freestyle Chess Series: Praggnanandhaa won again, defeating world No. 1 Carlsen.



20 July 2025

TNSED Schools App - New Version - DOWNLOAD LINK ATTACHED


TNSED Schools App - New Version - Jul 18, 2025 - Update Now CLICK HERE


18 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2025



திருக்குறள்:

குறள் 113: 

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே யொழிய விடல். 

விளக்கம்: 

16 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2025



திருக்குறள்:

திருக்குறள்: 96

அதிகாரம் - இல்லறவியல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.       
         
பொருள்: பிறருக்கு நன்மை தரும் இனிய சொற்களைப் பேசினால், தீயவை அகன்று, அறநெறி தழைத்து வளரும்.


பழமொழி :
Dont fear mistakes - they're stepping stones. 

தவறுகளுக்காக பயப்படாதே-அவை முன்னேற்றத்தின் படிகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய ஒரு நல்ல ஆசிரியர், தன்னைப் பயிற்றுவிப்பதற்கும் ,மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கும் தயார் படுத்துகிறார்- அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.இந்தியாவில் விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


டிசம்பர் 23 ( December 23)

02. இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர். A. P. J.அப்துல் கலாம்
Dr. A. P. J. Abdul kalam

English words :

Fair - an exhibition or a type of entertainment,களியாட்ட நிகழ்ச்சி, Fair - treating each person equally,நியாயமான,நியாயமாக. Fair is a homograph. Same spelling but different meaning

Grammar Tips: 

 G:

Often silent before 'n' (e.g., sign, foreign) or m (e.g., phlegm, diaphragm). 

H:

Often silent at the beginning of a word before a vowel (e.g., hour, honest) or in combinations like 'gh' (e.g., ghost, though).

அறிவியல் களஞ்சியம் :

 சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

ஜூலை 17

சர்வதேச நீதிக்கான உலக தினம் (World Day for International Justice)

1998 ஆம் ஆண்டு ரோம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 80 நாடுகள் 1998 முதல் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. 1998 முதல் சுமார் 139 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

உலக எமோஜி தினம் (World Emoji Day)

அவற்றின் பரவலான பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எமோஜிகளைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளைக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஜூலை 17 ஆம் தேதி உலக எமோஜி தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது - நமது உரையாடல்களை உயிர்ப்பிக்கும் படச்சித்திரங்களை நினைவுகூரும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம்.
நீதிக்கதை

 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

இன்றைய செய்திகள்

17.07.2025

⭐சட்டவிரோத மணல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

⭐ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

⭐ 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀லார்ட்ஸ் டெஸ்டில் சதம்: ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் இந்திய வீரர் ஜோ ரூட்.

🏀ஒலிம்பிக்கில் 2028, ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. 2028 ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

Today's Headlines

⭐Madurai Branch of the High Court takes strict action against illegal sand quarries
 
⭐Minister M. Subramanian announced that Medical counseling will begin on July 30.

⭐The Tamil Nadu government plans to set up new small ports at eight locations.

 SPORTS NEWS 

🏀Hundred in Lord's Test: Indian player Joe Root regains top spot in ICC batsman rankings.

🏀Cricket matches at the Olympics are set to begin on July 12, 2028. The matches for medals will be held on July 20 and 29, 2028


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2025







திருக்குறள்:

குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 

விளக்கம் : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

பழமொழி :
Knowledge grows when shared. 

அறிவு பகிர்ந்தால் தான் பெரிதாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிடுதல் மிக அவசியம். 

2. எனவே எந்த செயலையும் செய்யும் முன் திட்டமிடுவேன், செயல்படுவன்.

பொன்மொழி :

கட்டளை இட விரும்புபவர் முதலில் பதிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

01.வந்தே மாதரம் என்ற சொல் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது?


ஆனந்த மடம் - எழுதியவர்-
பக்கிம் சந்தர் சட்டர்ஜி
Ananthmath- Author-
Bankim chandra chattopadhyay

02. மிசோரம் மாநிலத்தின் தலைநகரம் எது?

ஐஷோல்( Aizawl)
English words :

isle - an island, தீவு.‌ 

Aisle - a passageway between rows of seats, இருக்கை நீள்வரிசைகளுக்கு இடையில் உள்ள வழி.

Grammar Tips: 

 How to identify silent letters ?

 C

Often silent in the combination 'sc' (e.g., scissors, muscle) or before 'k' or 'q' (e.g., acquire, acquiesce).

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

ஜூலை 16

தன்ராஜ் பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார். 
நீதிக்கதை

 பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது

இன்றைய செய்திகள்

16.07.2025

⭐ பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

⭐மணிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள்கள், ஆயுதங்கள் பறிமுதல்.

⭐விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா.

⭐துருக்கியுடன் 40 ஆண்டுகளாக தனி நாடு கோரி போரிட்டு வந்த ஈராக்கிய குர்திஷ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, அமைதிக்கான முயற்சி எடுத்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

🏀 இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.


Today's Headlines

☘ The Tamil Nadu government has taken steps to resolve the public petitions within 45 days.

 ☘ Confiscation of ammunition and weapons in Manipur.

☘ Subhanshu Shukla has successfully returned to Earth from the Space Station. 

☘The Iraqi Kurdish organizations, who have been fighting for a separate country for 40 years, have abandoned their weapons and trying to make peace. 

🏀 Sports News 🏀 The Indian men are touring the UK and playing in a five -match Test series.

 🏀 The Indian women's team is also touring the UK and playing the match.


JOIN KALVICHUDAR CHANNEL