t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.01.2026

திருக்குறள்: 

குறள் 296: 

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.               
 விளக்க உரை: 

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

பழமொழி :
Every sunrise brings a new chance.   

ஒவ்வொரு சூரியோதயமும்  இன்னொரு வாய்ப்பை  தருகின்றது.

இரண்டொழுக்க பண்புகள் :


1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

நேற்று என்பது முடிந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவேயில்லை. நம்மிடம் இருப்பது இன்று மட்டுமே. நற்செயல்களை இப்போதே தொடங்குவோம்.- அன்னை தெரசா

பொது அறிவு : 

"01.நவீன அறிவியலின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?

         கலிலியோ கலிலி 

 Galileo Galilei 

02.தமிழ்நாட்டில் முத்து தொழில் அல்லது முத்துக் குளித்தல் அதிகம் நடைபெறும் இடம் எது?

      தூத்துக்குடி  Thoothukudi 

English words :

Meticulous – showing great attention to detail.ஒவ்வொரு விவரத்திலும் மிகுந்த கவனத்துடன் இருத்தல்


Articulate – Fluent or persuasive in speaking or writing. தெளிவாக உச்சரித்தல் அல்லது எழுதுதல்

தமிழ் இலக்கணம்: 

 இன்று 400 எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம்
1. உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன்
2. உனக்கு *_நாநூறு_* ரூபாய் கொடுத்தேன்
 ‌ இதில் எது சரி?
பிரித்து எழுதி பார்ப்போம் 
நானூறு‌‌ –நான்கு + நூறு 
 
நாநூறு – நான்+ நூறு 

உனக்கு *_நானூறு_* ரூபாய் கொடுத்தேன் என்பதே சரி

அறிவியல் களஞ்சியம் :

மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை ஆனது சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலின் 10 டிரில்லியன் செல்களிலும் அந்த மரபணுவின் முழு நகல் காணப்படுகிறதாம், அந்த டி.என்.ஏ எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 100 மடங்கு அதிகமாக நீளுமாம். 

ஜனவரி 08

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்



ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.
நீதிக்கதை

 தாய் சொல் தட்டாதே





ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.

வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.

அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.



குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது.

"உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள். இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய ஆற்றல் உங்களுக்கு வரும். இப்போது பறக்க முயற்சி செய்து விழுந்து விட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்…….

எனவே , கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் பறக்க முயற்சிக்க வேண்டாம். கிளைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்’ என்றது தாய் காகம்." சரி" என குஞ்சுகள் கேட்டுக்கொண்டன.சில நாட்கள் சென்ற பின்………..

ஒரு நாள் ஒரு ஒரு குஞ்சு மட்டும் கூட்டில் இருந்து வெளியில் வந்து கிளைகளில் அமர்ந்து கொண்டு வெளி உலகைப் பார்த்துக் கொண்டு இருந்தது.

வானில் பறக்கும் பறவைகளை எல்லாம் பார்த்த குஞ்சு காகம் தானும் பறக்க முயற்சித்தது .கிளைகளில் தாவித்….தாவி. பறக்க முயற்சி செய்தது.அதை கவனித்த மற்றொரு குஞ்சும் வெளியில் வந்தது.தானும் தாவித்…தாவி…. பறக்க முயற்சி செய்தது.

இறக்கைகள் சரியாக வளராத நிலையில் இருந்த அந்த குஞ்சு காகம் தடுமாறி கீழே விழுந்தது .மேலே பறக்க முடியாமல் தன் தாயை கா..கா… என அழைத்த வண்ணம் இருந்தது.

தன குஞ்சுவின் குரல் கேட்டு பறந்து வந்த தாய் காகமும் தந்தை காகமும் கரைந்து கொண்டே இருந்தன.பக்கத்தில் வசித்த காகங்கள் எல்லாம் கூட்டமாக வந்து விட்டன .குஞ்சு காகத்தால் பறக்க முடியவில்லை.

இதைக் கவனித்த அந்த வீட்டு அம்மா குஞ்சு காகத்தை தூக்கி கிளையில் வைத்தார்கள். தனது கூட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டது குஞ்சு காகம்.

தாய் காகம் மறுபடியும் புத்தி சொன்னது,."இன்னும் உங்களுக்கு பறக்கும் அளவிற்கு இறக்கைகள் வளரவில்லை, பறக்க முயற்சிக்காதீர்கள்."என மீண்டும் எச்சரித்தது காகம்.

"சரி" என கேட்டுக்கொண்ட குஞ்சுகள் மறுநாள் தாய் காகம் வெளியில் போன சமயம் பார்த்து கிளையில் வந்து அமர்ந்து கொண்டன.பறவைகள் பறப்பதை பார்த்த குஞ்சு காகம், நான் இன்று நன்றாக பறந்து விடுவேன்’என்றது.

‘வேண்டாம்’ என்றது மற்ற குஞ்சுகள்.’நேற்று நீ பிழைத்ததே இந்த வீட்டுக்கார அம்மா உன்னை எடுத்து இங்கு விட்டதால்தான் ,நம் அம்மா காகம் நம்மை எச்சரித்ததை மறந்து விட்டாயா?

"தாய் சொல் தட்டவேண்டாம் "அவர்கள் நமது நன்மைக்காகத்தான் சொல்வார்கள் .,என்றது மற்றொரு குஞ்சு.

இதை எல்லாம் கேட்காத குஞ்சு காகம் இறக்கையை அடித்து பறந்தது.அடுத்த நிமிடமே தரையில் வந்து விழுந்தது.மேலே மேலே பறக்க முடியாமல் தாவித்தாவிச் சென்று…கழிவு நீரில் விழுந்து விட்டது.

இறக்கைகள் எல்லாம் நனைந்த நிலையில் தாவிச் செல்லவும் முடியாமல் ,பறக்கவும் முடியாமல் தவித்தது.

தாய் காகமும், மற்ற காகங்களும் கா…கா…என கத்தி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்தில் குஞ்சு காகம் கழிவு நீரில் தன் உயிரை விட்டது.



அதைப் பார்த்த மற்ற குஞ்சுகள் கண்ணீர் விட்டன. "தாய் சொல்லைக் கேட்ட" குஞ்சுகள் கூட்டில் பத்திரமாக இருந்தன.

இன்றைய செய்திகள்

08.01.2026


⭐டெல்லியில் காற்று மாசினை தடுக்க தவறியதற்காக காற்றுதர மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

⭐ 150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் இந்தியா, நமது அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.

⭐பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் 12-ந் தேதி விண்ணில் பாய்கிறது.
ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்து மற்றும வேல்ஸில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 4 அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.

Today's Headlines

⭐The Supreme Court has slammed the Air Quality Management Authority for failing to curb air pollution in Delhi.

⭐ India has emerged as the world's largest rice producer, surpassing our neighboring country China, with a rice production of 150.18 million tonnes.

⭐PSLV-C62 rocket to launch on 12th. 17 satellites of research institutes are also planned to be launched by the rocket. 

 *SPORTS NEWS*

🏀The Women's T20 Cricket World Cup is set to be held in England and Wales. 10 teams will participate in this series and will compete in a series of matches, also 6 teams have already qualified. 4 teams are yet to be selected.


7 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01.2026


திருக்குறள்: 

குறள் 294: 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன். 

விளக்க உரை: 

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

பழமொழி :
"Joy multiplies when shared." 

மகிழ்ச்சி பகிர்ந்தால் இரட்டிப்பாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :


1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வெற்றி பெற மூன்று வழிகள்: மற்றவர்களை விட- அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள், அதிகமாக பணியாற்றுங்கள் குறைவாக எதிர்பாருங்கள் - வில்லியம் ஷேக்ஸ்பியர்

பொது அறிவு : 

01.உலகில் இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்
முன்னணியில் நாடு எது?


தாய்லாந்து -Thailand

02.மாலத்தீவின் தலைநகரம் எது?

 மாலே  - Maley
English words :

Consensus- agreement 

Bustle -hurry

தமிழ் இலக்கணம்: 

 300,400, 500 எழுத்தால் எழுதுவது எவ்வாறு என்று  பார்ப்போம்
இன்று 300 எழுதுவதைப் பார்ப்போம்
300 –முன்னூறு
           முந்தூறு
எது சரி?
"நான் முன்னூறு ரூபாய் வாங்கினேன்."

முன்னூறு பிரித்தால் 
முன் + நூறு 

"நான் முன் + நூறு ரூபாய் வாங்கினேன்."
இதன் பொருள் நான் முன்பு நூறு ரூபாய் வாங்கினேன் என்பதாகும்.

அடுத்த சொல்
முந்நூறு இதைப் பிரித்தால் மூன்று + நூறு  

"நான் மூன்று + நூறு ரூபாய் வாங்கினேன்." என்பது இதன் பொருளாகும்.
எனவே 300 ஐ முந்நூறு என்று தான் எழுத வேண்டும்

அறிவியல் களஞ்சியம் :

 வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும் பொபோது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. . கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். 

நீதிக்கதை

 அடிமையானக் குதிரை

ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான். 

தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது. 

குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான். 

அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று. 

நீதி :

பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.

இன்றைய செய்திகள்

07.01.2026

⭐மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக உயர்கல்வி பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. 

⭐2026-27 ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.சோலார் அமைப்புகள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்.

⭐அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி நிலை நீடிக்கும் எனவும், இதனால் குளிர் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

🏀ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3 -1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐ Intending to improve the academic and digital skills of students, the Tamil Nadu government has implemented a scheme to provide free laptops to 10 lakh students pursuing higher education in the first phase.

⭐The central government has set a target of installing solar panels in one crore homes across the country by 2026-27. Homes equipped with solar systems will get up to 300 units of free electricity every month.

⭐ The Indian Meteorological Department has also said that this will increase the cold. And the  dense fog in the mornings over northwest, central, east and northeast India for the next five days

 SPORTS NEWS 

🏀The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. Nepal has launched its jersey for the T20 World Cup.

🏀The 5th and final match of the Ashes series is being played in Sydney. It is noteworthy that Australia has already won this 5-match Test series by a score of 3-1.


6 January 2026

ஆசிரியர் பணியில் தொடர / பதவி உயர்வு பெற "ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்" எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை துல்லியமாக தர பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!!

ஆசிரியர் பணியில் தொடர / பதவி உயர்வு பெற "ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்" எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை துல்லியமாக தர பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!!

நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)

நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief):

₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.


வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-26):
₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).

₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).

₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).

₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.

₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.

 *விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன?* 

வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.


 *முக்கிய விதிகள்:* 

நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்
.
அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.


 *வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):* 

₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).

₹12,01,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹1,000 மட்டுமே (₹59,150 நிவாரணம்).

₹12,10,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹10,000 மட்டுமே (₹51,500 நிவாரணம்).

₹12,50,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹50,000 மட்டுமே (₹17,500 நிவாரணம்).

₹12,70,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,000 மட்டுமே (₹500 நிவாரணம்).

₹12,70,500 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,500 மட்டுமே (₹75 நிவாரணம்).

₹12,70,580 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,580 மட்டுமே (₹7 நிவாரணம்).


 *சுருக்கம்* :

₹12,00,000-க்கு மேல் வருமானம் செல்லும் போது, கூடுதல் வருமானத்திற்கு மட்டுமே வரியாகச் செலுத்த இந்த விளிம்புநிலை நிவாரணம் வழிவகை செய்கிறது.

உதாரணமாக, வருமானம் ₹100 அதிகரித்தால் (₹12,00,100), வரி ₹100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2026


திருக்குறள்: 

குறள் 211: 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் 
டென்னாற்றுங் கொல்லோ உலகு. 

விளக்க உரை: 

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

பழமொழி :
"Learning is a ladder that never ends". 

கற்றல் ஒரு முடிவில்லாத ஏணி.

இரண்டொழுக்க பண்புகள் :


1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

ஏமாற்றுவதை விட தோற்றுப் போவது சிறந்தது -ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

01.காந்திஜியை முதன்முதலில்  "தேசத்தந்தை" (Father of the Nation) என்று அழைத்தவர் யார்?


திரு.சுபாஷ் சந்திர போஸ் 
Subhas Chandra Bose

02.இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை முதன்முதலில் வரைவு செய்தவர்  யார்?

திரு.ஜவஹர்லால் நேரு
 Jawaharlal Nehru
English words :

Arid-extremely dry


Hiatus -break

தமிழ் இலக்கணம்: 

 பிறமொழி சொற்களை கண்டு பிடிப்பது எப்படி பாகம் 2
மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 
மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
2. கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன்
 கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தேன்
3. அந்த நிர்வாகி மிகவும் நேர்மையானவர்
அந்த அலுவலர் மிகவும் நேர்மையானவர்

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது

ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்



கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 

கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்







கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

நீதிக்கதை

 சொந்த இடம்

அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 

ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 

அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 

அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 

ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.

இன்றைய செய்திகள்

06.01.2026

⭐சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயில் தடம்புரண்டு விபத்து. பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

⭐ சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கையால் கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சைபர் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடி மீட்கப்பட்டுள்ளது.

⭐ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து ஈரானின் 22 மாகாணங்களின் 100-க்கும் அதிகமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

Today's Headlines

⭐Passenger express train derails in Sethupattu. There was no damage, as no passengers on the passenger express train.

⭐ Due to the prompt action of the Chennai Metropolitan Police Cyber ​​Crime Division police stations, Rs. 25.97 crore lost by the public to cyber fraud in the last year alone has been recovered.

⭐Thousands of people have taken to the streets in more than 100 locations across 22 provinces of Iran to protest the economic crisis in the country. 

 SPORTS NEWS 

🏀The 5th and final match of the 5-match Ashes series between Australia and England is being played in Sydney. Starc has dismissed Ben Stokes 5 times in this Ashes series. Also, He holds the record for being the bowler to dismiss Ben Stokes the most times.


5 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

திருக்குறள்: 

குறள் 73: அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. 
                    
விளக்க உரை: 

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

பழமொழி :
Hardwork is the root of success.      

 கடின உழைப்பே வெற்றியின் வேர்.

இரண்டொழுக்க பண்புகள் :


1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

புத்தாண்டில் ஒரு நாள் என்பது 365 பக்க புத்தகத்தில் எழுதப்படாத ஒரு பக்கமாகும். அதில் நல்லவற்றை நன்றாக எழுதுங்கள்.- பிராட் பைஸ்லி

பொது அறிவு : 

01.இந்தியாவில் முதன்மையான முதலை பூங்கா எங்குள்ளது?

    தமிழ்நாடு -சென்னை 

    Tamilnadu - Chennai

02.இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

திரு.தாதாபாய் நௌரோஜி

Dadabhai Naoroji

English words :

New horizons - new beginnings புதிய தொடக்கம் 

confetti - small pieces of colour papers விழாக்களில் தூவப்படும் சிறிய வண்ணத் தாள்கள்

தமிழ் இலக்கணம்: 

 பிற மொழி சொற்களைக் கண்டு பிடிப்பது எப்படி?
1. தனிக் குறில் எழுத்தை அடுத்து "ர்" வரும் சொற்கள் எல்லாமே பிறமொழிச் சொற்களே.

எ. கா –1. *_தர்மம்_* செய்ய முயலுங்கள்

 தூய தமிழில் - *_அறம்_* செய்ய முயலுங்கள்

2. *_கர்ம_* வீரர் காமராசர்
  
 தூய தமிழில்    *_செயல்_* வீரர் காமராசர்

3. இதற்கு என்ன *_அர்த்தம்_* தெரியுமா?
     

 தூய தமிழில் - இதற்கு என்ன *_பொருள்_* தெரியுமா?

      தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

 நாசா வல்லுநர்களின் கூற்றுப்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும்.  2015 ஆம் ஆண்டில் வெளியிப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.

நீதிக்கதை

 மூன்று தோசைகள் 



ஒரு ஊரில் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய உணவு விடுதி இருந்தது. அங்குள்ள மக்கள் தங்கள் அவசரத்திற்கு அங்கு சென்று உணவு வாங்குவதோ சாப்பிட்டுக் கொள்வதோ பழக்கம். இந்த உணவு விடுதியாளர் தனது உணவு விடுதியை மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்.  எனவே அந்த வழியாக பெரு நகரத்திற்கு செல்லுபவர்கள்  அங்கு வந்து உணவு உண்டு விட்டு செல்வது பழக்கம். அங்கு ஒரு அருமையான தோசை மாஸ்டர் இருந்தார் அவர் மிகவும் ருசியான தோசை சுடுவதில் மிகவும் வல்லவர். மிகவும் பிரசித்தி பெற்றவர். அவர் எண்ணும் விதமாய்  தோசைகள் விதம் விதமாக செய்வார். அவர் அப்படியாக  செய்வதற்கு ஏற்றார் போல் தோசைகள் தங்களை விட்டுக் கொடுக்கும். ஒரு நாள் தோசைகளை அவர் ஊற்றும் பொழுது இரு தோசைகளுக்கு ஒரு எண்ணம் வந்தது. இவர் சொல்படியே நாம் கேட்க வேண்டுமா? நாம் இஷ்டப்படி சொல்லி அவரை சுடச் சொல்லுவோம் என்று சொல்ல ஆரம்பித்தது.   ஒரு தோசை மட்டும் இல்லை நாம் அப்படி செய்யக்கூடாது மாஸ்டருக்கு தான் தெரியும் நம்மை எப்படி உருவாக்க வேண்டும் என்று எனவே நாம் இப்படியாக செய்யக்கூடாது. அவர் செய்வதற்கு நாம் விட்டுக் கொடுத்து காத்திருக்க வேண்டும் என்று சொல்லியது. ஆனால் மற்ற தோசை மாவுகள் அப்படியாக செய்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மாஸ்டர் முதல்  தோசையை ஊற்றினார். முதல் தோசை அவர் திருப்பி போடும் முன்னாலே அவரைப் பார்த்து கத்த ஆரம்பித்தது. போதும் என்னை சுட்டது எடுத்துக் கொண்டு அங்கு காத்திருப்பவருக்கு கொடுங்கள் என்று சொல்லியது. இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ஆனால் தோசை கேட்க வழியில்லை எனவே அந்த தோசையை எடுத்துக்கொண்டு அங்கு சென்ற பொழுது அவர் அதைப் பார்த்துவிட்டு என்ன வேகாத தோசை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறி கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு குப்பை கூடையில் போட்டு விட்டார். அதற்குள்ளாக அவர் இரண்டாவது தோசையை ஊற்றி இருந்தார். அதை திருப்பி போடுவதற்கு முன்பாக அதிலே சில காய்கறிகளை சில பொருட்களை போடுவதற்கு அவர் யோசித்தார். அப்பொழுது அந்த இரண்டாவது தோசை “என் மீது எதுவும் போட வேண்டாம் இப்படியே என்னைக் கொண்டு கொடுங்கள் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு செய்யாதீர்கள் என்று சொன்னது”   அவர் இதனிடமும் சொல்லிப் பார்த்தார் “உன்னை நன்கு உருவாக்குவேன்” என்று ஆனால் அது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே அந்த சாதா தோசையை கொண்டு போய் சாப்பிட வந்தவரிடம்  கொடுத்தார் அவர் அதற்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டுவிட்டு பரவாயில்லை என்றார். மூன்றாவது தோசையை  இவர் மெதுவாக ஊற்றி அதை சுற்றி நெய் ஊற்றி குடமிளகாய் வெங்காயம் கேரட் போன்ற சத்துள்ள பொருட்களை அதன் மீது துருவி போட்டு அதன் பின்பு நன்கு இரண்டு பக்கமும் வெந்த பிறகு அதை கொண்டு போய் சாப்பிடுவரிடம் கொடுத்தார் அவர் முகம் மலர்ந்து இதுதான் மிகச் சிறந்த தோசை என்று சொல்லி அவர் கொடுக்க வேண்டிய அளவிற்கு மேலாகவே பணம் கொடுத்து அந்த தோசையை சாப்பிட்டு விட்டு சென்றார் .மாணவர்களே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது

1. நம் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் 

2. இரண்டாவது நாம் நம்முடைய மதிப்பை கூட்ட வேண்டும் என்றால் வாழ்வில் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.01.2026

⭐தெற்கு ரயில்வே காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. (2025) கடந்த மார்ச் முதல் நவம்பர் வரையில் 2.424 கோடி அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.17.87 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது. 

⭐தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கியூஆர் குறியீடு (QR) அடங்கிய ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐ இந்தியாவை அனைத்து பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கும் யுக்தியில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளில் சீனா தனது இராணுவத் தளங்களை நிறுவ திட்டமிட்டு அனு ஆயுதங்களை குவித்து வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: எங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள்- ஐசிசிக்கு வங்கதேசம் வேண்டுகோள்
வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

Today's Headlines

⭐ Southern Railway is actively involved in wind power generation projects. (2025) From March to November last year, 2.424 crore units of electricity have been generated. This has saved Rs. 17.87 crore.

⭐The Tamilnadu government has ordered that stickers containing QR codes must be pasted in all drug stores in Tamil Nadu.

⭐ China is planning to establish military bases in Sri Lanka, Pakistan, Bangladesh, and Myanmar, and is amassing nuclear weapons, in a strategy to surround India from all sides.

 *SPORTS NEWS* 

🏀T20 World Cup: Bangladesh appeals to ICC to hold  matches outside India There is growing opposition to Bangladesh players not playing in India.

Covai women ICT_போதிமரம்


4 January 2026

TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா!?✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா!?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

பதிவை முழுமையாகப் படிக்கும் முன் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுகிறேன். . . .

1. நமது கோரிக்கையை ஏற்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அச்சடித்து வெளியிட்ட வாக்குறுதி, 'பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்' என்பதே.

2. ஓய்வூதியம் என்பது பிச்சையோ, ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்கும் எச்சமோ அல்ல; ஓய்வூதியம் என்பது கொடுபடா ஊதியம்.

3. பணிக்கொடைக்கும் (Gratuity) ஓய்வூதியத்திற்கும் தொடர்பில்லை. இரண்டும் வெவ்வேறு தனித்த சட்டங்கள். இந்தியாவில் GPF / EPF / NPS / UPS என ஓய்வூதியத் திட்டங்கள் மாறுபட்டாலும் - மாற்றப்பட்டாலும் அதில் உள்ள பணியாளருக்கு Gratuity உண்டு. தமிழ்நாட்டில் CPSல் உள்ளோருக்கு மட்டும் ஓய்வூதியத்துடன் Gratuityயும் நிறுத்தப்பட்டுவிட்டது.

4. The Payment of Gratuity Act, 1972ன்படி குறைந்தது 10 நபர்கள் பணிபுரியும் நிறுவனம் என்றால், குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்  ஊழியருக்கு ஆண்டிற்கு 15 நாள் ஊதியத்தை பணிக்கொடையாக வழங்க வேண்டும்.


---- இப்ப TAPSக்கு வருவோம் ----

Tamil Nadu Assured Pension Scheme எனும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் செய்திக்குறிப்பு வெளிவந்து சங்கத்தலைமைகள் அநேகரால் வாழ்த்து மழைகளும், அடிப்படை உறுப்பினர்கள் பெரும்பான்மையினரால் கேள்விகளும் குவிந்து வருகின்றன. தற்போது வெளிவந்துள்ளது அரசாணை அல்ல என்பதால் செய்திக்குறிப்பை மட்டும் முன்வைத்து சில புரிதல்களை நமக்கு நாமே தெளிவுபடுத்திக்கொள்ளவே இப்பதிவு.

செய்திக்குறிப்பில், ஓய்வூதியம் பெறத் தகுதி வாய்ந்த ஆண்டுகள் பணியாற்றிய ஊழியரது 10% பங்களிப்பை வைத்துத்தான் அவருக்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு நிதி போதவில்லையெனில் மீதத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். அப்பணிக்காலத்திற்குக் குறைவானவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ரூ.25,00,000/- வரை பணிக்கொடை வழங்கப்படும். CPSல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதாக உள்ளன.


*புரிதல் :*

1. பிடித்தம் செய்யப்படும் 10% CPS தொகை மொத்தமாகத் திரும்பக்கிடைக்காது.

2. 50% ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் குறைந்தது 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

3. 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணிக்காலம் உள்ளோருக்கு, 50% ஓய்வூதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஓய்வூதியம் என்ற ஒன்று வழங்கப்படும்.

4. 30 ஆண்டுகள் பணியாற்றி 50% ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% அதாவது ரூ10,000/- Pension வாங்கியிருப்பின், ரூ.6,000/- Family Pensionஆகக் கிடைக்கும்.

5. Retirement / Death Gratuity (பணிக்கொடை) பணிக்காலத்தைப் பொறுத்து வழங்கப்படும்

6. 30 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரின் Basic Pay + DA ரூ.1,44,445 என்றால் அவருக்கு, உட்சபட்ச பணிக்கொடை ரூ.25,00,000/- கிடைக்கும். மற்றவர்களுக்கு (Working Years × Basic&DA × 15) ÷ 26 என்ற கணக்கீட்டின்படி கிடைக்கும்.

7. TAPS தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு இது நடைமுறைப்படுத்தும் நாள்வரை ஓய்வு பெற உள்ளோருக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

8. 50% ஓய்வூதியம் பெறுவோருக்கு மட்டுமே ஆண்டிற்கு 2 முறை DA கூடும். மற்றபடி 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணியாற்றுவோருக்கும் DAவிற்கும் தொடர்பில்லை.


*கேள்விகள் :*

1. அரசு இனி தனது பங்களிப்பை மாதம்தோறும் ஒதுக்குமா? /  ஆண்டிற்கொருமுறை நேரடியாக ஓய்வூதிய நிதியத்தில் செலுத்துமா?

2. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோருக்கு எத்தனை ஆண்டுகள் அடிப்படையில் எவ்வாறு குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும்?

3. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோர் இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா?

4. TAPS நடைமுறைக்கு வரும்முன் ஓய்வு பெற்றோருக்கு கருணை ஓய்வூதியம் உண்டு எனில், 01.04.2003ற்குப் பின் பணியேற்று தற்போது வரை ஓய்வுபெற்றுவிட்டோர் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்துமா?

5. கருணை ஓய்வூதியம் என்பது எவ்வளவு ரூபாய்?

6. UPS திட்டத்திலும் இதே போன்று ஊழியரின் பங்களிப்பைக் கொண்டே 50% ஓய்வூதியம், 60% குடும்ப ஓய்வூதியம் & குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதிசெய்யப்பட்டுள்ளதே. அப்படியானால், UPSன் மறுவடிவம் தான் TAPSஆ?

7. UPSல் அரசின் பங்களிப்பு 14%. TAPSல் அரசின் பங்களிப்பு என்ன?

8. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை அரசின் பங்களிப்பு கூடிக்கொண்டே போனால் அரசிற்கு கடும் நிதிச்சுமை நிதியாண்டு தோறும் ஏற்படாதா?

9. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை 100% ஊழியர்களுக்கும் அரசின் பங்களிப்பினை அளிக்காமல் ஓய்வு பெருவோருக்கு மட்டும் பங்களிப்பு செய்யும் பழைய ஓய்வூதியத் திட்டம் தானே அரசிற்கும் நல்லது?

10. நடப்பு நிதி ஆண்டில் ரூ.11,000 கோடி அரசுப் பங்களிப்போடே கூடுதலாக ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய இயலுமா?

11. ஜனவரி 20ல் தொடங்கும் இந்த ஆட்சியின் இறுதிக் கூட்டத்தொடரில் ரூ.13,000 கோடியை TAPSற்கென கூடுதலாக ஒதுக்கீடு செய்து திருந்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது சாத்தியமா?


---- சரி TAPS டாப்பா? ஆப்பா? ----

மேற்படி புரிதல் சரியெனில், அதனைத் தொடரும் கேள்விகள் நியாயம்தானெனில் அதற்குண்டான விடைகள் அரசாணையில் கிடைக்கும் என நம்புவோம்.

மேலும், TAPS அறிவிப்பின் வழியே 23 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட பணிக்கொடை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

TAPS உங்களுக்கு டாப்பா? ஆப்பா? என்பதை உங்களது ஒட்டுமொத்த பணிக்காலம், பிடித்தம் செய்யப்பட்ட & செய்யப்படவுள்ள CPS தொகை ஆகியவற்றை வைத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், இதன் பலன்கள் ஒவ்வொரு தனித்த நபரின்  சூழல் சார்ந்தவையே.

முடிவு செய்யும் முன், 

LICன் ஜீவன் உட்சவ்வில், 30 - 46 வயதுவரை 16 ஆண்டுகள் மட்டும் மாதம் ரூ.10,375/- செலுத்தினால், 48வது வயது முதல் 100 வயது வரை ஆண்டிற்கு ரூ.2,00,000/- கிடைக்கும்.

LICன் ஜீவன் ஆனந்த்தில், 30 - 60 வயதுவரை மாதம் ரூ.4,800/- வீதம் ரூ.16,90,749/- மட்டும் செலுத்தினால், 60வது வயதில், ரூ.52,60,000/- கிடைக்கும். இதை 8.05% வட்டி வீதத்தில் Fixed Depositல் முதலீடு செய்தால் மாதம் ரூ.36,365/- வீதம் ஆண்டிற்கு ரூ.4,36,385/- வட்டியாகக் கிடைக்கும். இது போக, 100 வயது வரை ரூ.15,00,000/- இலட்சத்திற்கான Long Life Coverageம் கிடைக்கும்.

இதே, தொகையை ஓய்வூதியமாகப் பெற வேண்டுமெனில், 30 ஆண்டுகள் பணிக்காலத்தோடு, இறுதி மாதத்தில் ரூ.72,730/- அடிப்படை ஊதியமாகப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஊதியத்திற்கு நீங்கள் ஜீவன் ஆனந்த்தைவிட மாதம் ரூ.3,000/- கூடுதலாக TAPSற்கு செலுத்தியிருப்பீர்கள்.

மேலும், CPSலேயே இருந்து Settlement வாங்கி அதை Fixed Depositல் முதலீடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இது ஒரு மாதிரிக் கணக்கீடே. இன்னும் இது போன்ற பல திட்டங்கள் பல்வேறு நிறுவனங்களில் இருக்கலாம். விசாரித்துப் பாருங்கள்.

அதையெல்லாம் விசாரித்துவிட்டு, உங்களது நிதிநிலையை முன்வைத்து உங்களுக்கு TAPS டாப்பா? ஆப்பா?  என்ற முடிவிற்கு வாருங்கள்.

இதுவரைக்கும் இந்த ஒப்பீடெல்லாம் செய்தீர்களா? என்றால், நாம் கேட்டதும், நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியாகக் கொடுத்ததும், தற்போது அறிவித்துள்ள TAPSற்கு முற்றிலும் நேர்மாறான 100% முழுமையான ஓய்வூதியப் பலன்களை உள்ளடக்கிய பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான். அதற்கு இந்த ஒப்பீடெல்லாம் தேவையேயில்லை.

ஆனால், அதுவும் இல்லை, நம்மிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்புத்தொகையும் இல்லை, 30 ஆண்டுகளுக்குக் குறைவானால் 50% ஓய்வூதியமே இல்லை எனும் போது TAPS முதலீட்டை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய கட்டாயம் எழத்தானே செய்கிறது.

அதெல்லாம் இல்ல. . . . 'உனது புரிதலே தவறு; கேள்விகள் தேவையற்றவை; ஒப்பீடு அறமற்றது; எதுவுமே இல்லாததற்கு TAPS தேவலாம்!' என்பதே உங்களது பொருளாதாரப் புரிதல் என்றால், உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

இறுதியாக,

பசியில் அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு உணவளிப்பதாகக் கூட்டி வந்த தந்தை, அவனிடமிருந்து தான் எடுத்துக்கொண்ட 10 ரூபாயில், 1 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தாராம். So kind dadல!

அட. . .,

* அந்தக்காசே அவனோடதுதான. . .!?

* அவனோட மீதி 9 ரூபா எங்க. . . .!?

* இதுக்கு அந்தக்காச எடுக்காம இருந்தா, அவன் வயித்துக்கு ஏதோ அவனே வாங்கி சாப்ட்டிருப்பானே. . .!?

* பசியாற உணவுதானே வேணும், அதத்தான தருவேனு சொன்னாரு!?

என்றெல்லாம் உங்களுக்கும் தோன்றினால் நீயும் என் தோழனே!

JOIN KALVICHUDAR CHANNEL