t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 February 2026

TNTET - Genuineness பெறுவது சார்ந்து TRB கடிதம்.

🟣 கடிதம் BEO /தலைமையாசிரியர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் .

🟣 எந்த மாவட்டத்தில் தேர்வு எழுதி இருந்தாலும் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கே Genuineness  கடிதம் அனுப்ப வேண்டும்.

🟣  எக்காரணம் கொண்டும் TRBக்கு கடிதம்  அனுப்பக்கூடாது 

🟣  Genuineness கடிதத்தில் இணைக்க வேண்டியவை 

1) BEO / தலைமை ஆசிரியர் முகப்பு கடிதம் -1

2) உண்மைத்தன்மை சான்று கோரும் விவரம் படிவம்-1

3) தகுதி தேர்வு சான்றிதழ்-1

🟣  பணிபுரியும் / தேர்வு எழுதிய மாவட்டங்கள் வெவ்வேறாக இருப்பின் மேற்கண்டவை இரண்டு நகல் அனுப்ப வேண்டும் .

❖ ── ✦ ──『✙ ✙』── ✦ ── ❖ 

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்...

📍TET சான்றிதழின் உண்மைத்தன்மை கோரும் விண்ணப்பம்

📍TET சான்றிதழை பணிப்பதிவேட்டில் பதிவு செய்யும் படிவம்

📍TET சான்றிதழின் உண்மைத்தன்மை கோரும் படிவம்

📍பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவம்

👇👇👇👇👇

TET SR FORM AND GENUINENESS FORM Download Here

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2026

திருக்குறள்: 

குறள் 304: 

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் 
பகையும் உளவோ பிற.      

விளக்க உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

பழமொழி :
Small efforts daily lead to big results.     

தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.

        - ஔவையார்

பொது அறிவு : 

01.ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?

 HMS சேலஞ்சர்- HMS Challenger

02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?

 அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 America -Lunar Orbiter 1

English words :

cascade-waterfall 

studious-hardworking

தமிழ் இலக்கணம்: 

 இரண்டு வட மொழிச் சொற்கள் சேர்ந்து ஒரு சொல் வரும் போது வல்லினம் மிகாது
தேசம் + பிதா = தேசபிதா
ஆனால் முதல் எழுத்து வடமொழி சொல்லாக இருந்து அடுத்த சொல் தமிழ் சொல்லாக இருந்தால் வல்லினம் மிகும்
தேச+தந்தை = தேசத் தந்தை.
தேசம் வடமொழிச் சொல். தந்தை தமிழ் சொல்
அறிவியல் களஞ்சியம் :

1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.

பிப்ரவரி 04

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.



உலகப் புற்றுநோய் நாள்



உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை

 கர்வம் கொண்ட மயில்



குறள் :

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 

வியந்தான் விரைந்து கெடும். 



விளக்கம் :

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். 



கதை :

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். 



ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது. 



இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள். 



நீதி :

தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.

இன்றைய செய்திகள்

04.02.2026

⭐செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்துள்ளது.

⭐இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

⭐ இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Today's Headlines

⭐  The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government  hospital.

⭐The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..

⭐ Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.

 *SPORTS NEWS* 

🏀The 4th Women's Premier League (WPL) 20-over cricket match between 5 teams is underway in Vadodara, Gujarat.
The Smriti Mandhana-led Royal Challengers Bangalore team, which finished first with 12 points (6 wins, 2 losses) at the end of the league round, advanced directly to the final.


3 February 2026

யார் யாருக்கு எவ்வளவு தொழில் வரி என்று தெரியுமா? Professional Tax Slab

TNTET - Genuineness பெறுவது சார்ந்து TRB கடிதம்.

TNTET - Genuineness பெறுவது சார்ந்து  TRB கடிதம்.

🟣 கடிதம் BEO /தலைமையாசிரியர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் .

🟣 எந்த மாவட்டத்தில் தேர்வு எழுதி இருந்தாலும் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கே Genuineness  கடிதம் அனுப்ப வேண்டும்.

🟣  எக்காரணம் கொண்டும் TRBக்கு கடிதம்  அனுப்பக்கூடாது 

🟣  Genuineness கடிதத்தில் இணைக்க வேண்டியவை 

1) BEO / தலைமை ஆசிரியர் முகப்பு கடிதம் -1

2) உண்மைத்தன்மை சான்று கோரும் விவரம் படிவம்-1

3) தகுதி தேர்வு சான்றிதழ்-1

🟣  பணிபுரியும் / தேர்வு எழுதிய மாவட்டங்கள் வெவ்வேறாக இருப்பின் மேற்கண்டவை இரண்டு நகல் அனுப்ப வேண்டும் .

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன பொதுத் தேர்வு தேதிகள் அனைத்தும் ஒரே பக்கத்தில்

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி - பணிப்பதிவேடு பதிவு செய்வது எப்படி?

பணிப்பதிவேடு பதிவு மாதிரி


ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி: 

 ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025- ன்படி, 16.11.2025 (அ) 15.11.2025 அன்று நடைபெற்ற  பட்டதாரி ஆசிரியர்களுக்கான (அ) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 (அ) 1 ல்,  இவ்வாசிரியர் தேர்ச்சி பெற்றுள்ளார். உரிய சான்றுகளின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

தேர்ச்சி விவரம்:
தேர்வெண் : 
சான்றிதழ் எண்: 
பாடம்:                    
(தாள் 2 க்கு மட்டும்)
மதிப்பெண் :

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2026


திருக்குறள்: 

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய 
பிறத்தல் அதனான் வரும். 
      
விளக்க உரை: 

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :
There is no substitute for hardwork.   

கடின உழைப்பிற்கு மாற்று எதுவும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :


1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் ...



----------இறையன்பு ஐஏஎஸ்

பொது அறிவு : 

01.கரீபியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவு எது?

          கியூபா -Cuba

02.இந்தியாவின் முதல் இரத்த வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

 கொல்கத்தா-மேற்கு வங்காளம்

Kolkatta- west  Bengal

English words :

Adverse - unfavorable. பாதகமான. எதிரான.

Anticipate -to expect something to happen, hope for something 

ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருத்தல்

தமிழ் இலக்கணம்: 

 என்ன? யாவை? என்ற வினாச் சொற்களை எங்கு உபயோகிக்க  வேண்டும்?
வினா கேட்கும் போது செயல் ஒருமையாக இருந்தால் என்ன என்பதை பயன்படுத்த வேண்டும்? செயல் பன்மையாக இருந்தால் யாவை என்பதை பயன்படுத்த வேண்டும்.
எ. கா 
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* என்ன? இது தவறு
காரணங்கள் என்று பன்மையில் வருவதால் 
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* யாவை ? என்று வர வேண்டும் 
காற்று மாசுபாட்டிற்கு *காரணம்* யாவை? என்று வரக்கூடாது.
காரணம் என்பது ஒருமைச் செயல் எனவே 
காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்ன என்று வர வேண்டும்?

அறிவியல் களஞ்சியம் :

குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகத்துடனான தொடர்பை துண்டிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, ஷார்ட்வேவ் மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் இங்கு அடைவதில்லை.

பிப்ரவரி 03

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 
நீதிக்கதை

எதிர்காலம்

ஒரு நாள் முல்லா தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை, அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். 

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும், மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார். முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன், அடித்து மிரட்டிப் பார்த்தேன், ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு. 

குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும், மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். 

அம்மா, முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு, முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். 

இன்றைய செய்திகள்

03.02.2026

⭐பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை - சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு.
கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

⭐ இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு & உளவு அமைப்பான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அமைப்பிற்கு ரூ.6,782.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

⭐ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம்- டிரம்ப் 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

Today's Headlines

⭐ Chief Minister quote *travel is a classroom without books* at  the center of Tourism Summit. Also Tamilnadu government has allocated Rs. 612 crore for the department of tourism  in the last 5 years.

⭐ The central government has allocated Rs. 6,782.43 crore for the 'Intelligence Bureau' that is India's internal security & spy agency. 

⭐US president Trump said 
they will launch a military attack on Iran if there is no agreement .

 *SPORTS NEWS* 

🏀The T- 20 World Cup will be held in India and Sri Lanka from February 7 to March 8.


JOIN KALVICHUDAR CHANNEL