t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.06.2026


திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:433

குறள்: 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

பொருள்:

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

பழமொழி :
Distance lends enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டும் அல்ல; நல்ல மனிதராக வாழ கற்றுத்தரும் ஒளிவிளக்கு."" 📚✨

Thought for the Day :

Every lesson learned is a step closer to your dreams.

பொது அறிவு : 

1. செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று கருதப்படுபவர் யார்? 

ஜான் மெக்கார்தி. 

2. சதிஷ் தவான்  விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் எது? 

ஸ்ரீஹரிகோட்டா.

English words :

Determine – Decide, தீர்மானி.

Emphasize – Highlight, வலியுறுத்து

NMMS :

ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில், அம்முக்கோணத்தின் மூன்றாவது பக்க அளவு என்ன?    

 (1) 3 செ.மீ      (2) 1 செ.மீ     

 (3) 11 செ.மீ      (4) 9 செ.மீ            

விடை: (1) 3 செ.மீ

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்திய அரசியலமைப்பு 26 நவம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.
நீதிக்கதை

 மரமும் காற்றும்

 ஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரமும், சில நாணல் புற்களும் இருந்தன. 

ஒரு நாள் பலத்த காற்று வீசியது. பெரிய மரம் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், "நான் எவ்வளவு வலிமையானவன்! என்னால் இந்த காற்றை எதிர்க்க முடியும்" என்று அகம்பாவத்துடன் கூறியது.

ஆனால், சிறிய நாணல் புற்கள் காற்று வீசும் திசைக்கேற்ப வளைந்து கொடுத்தன. காற்று நின்ற பிறகு, பெரிய மரம் புயலால் வேரோடு சாய்ந்து கிடந்தது. ஆனால், நாணல் புற்கள் எந்த சேதமும் இல்லாமல் நிமிர்ந்து நின்றன.

நீதி (Moral): வளைந்து கொடுக்கத் தெரிந்தவர்களே வாழ்வின் சோதனைகளை வெல்ல முடியும்; அகந்தை அழிவைத் தரும்.

இன்றைய செய்திகள்

19.06.2026

*தலைப்புச் செய்திகள்*
🗒️21-ம் தேதி நீட் மறு தேர்வு - வார நாட்கள் அட்டவணையில் ரெயில்கள்  இயக்கப்படும் என இரயில்வே துறை அறிவிப்பு.

🗒️ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🗒️பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையில் உலக அமைதிக்கான வழி உள்ளது’ - மேதகு ஜனாதிபதி திரவுபதி முர்மு 
தெரிவித்துள்ளார்.

🗒️அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*
🏀மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டி; உருகுவேவை வீழ்த்திய இந்தியா.

🏀 டி20 உலகக் கோப்பை... 
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.

Today's Headlines

🗒️ NEET Re-Examination on June 21 – The Railway Department has announced that trains will operate according to the weekday schedule.

🗒️ The Directorate of Public Health has issued a circular to all District Health Officers directing them to carry out integrated mosquito control measures without delay.

🗒️ “There is a path to world peace in the way of life of tribal communities,” stated President Droupadi Murmu.

🗒️ SpaceX surpasses Amazon to become the world's 5th largest company.

Sports News

🏀 Women's National Cup Hockey Tournament: India defeated Uruguay.

🏀 T20 World Cup: India won the series by defeating Afghanistan.


18 June 2026

TAPSGovernment Order (G.O.Ms.No.111, dt 16.06.2026) இன் முக்கியப் பகுதிகள் தமிழாக்கம்


TAPS

Government Order (G.O.Ms.No.111, dt 16.06.2026) இன் முக்கியப் பகுதிகள் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தலைப்பு: ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான வாழ்வாதார ஆதரவு – இடைக்கால ஊதியம் (Interim Payout) வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.  
முக்கிய உத்தரவுகள் மற்றும் நடைமுறைகள் (G.O. சுருக்கம்):

1. நோக்கம் மற்றும் பின்னணி:
01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
இந்தத் திட்டத்திற்கான விரிவான விதிகள் மற்றும் நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஓய்வுபெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக நடவடிக்கையாக இந்த மாதாந்திர இடைக்கால ஊதியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

2. தகுதி வரம்புகள் (யார் யாருக்குப் பொருந்தும்?):
01.04.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு வழக்கமான ஊதிய விகிதத்தில் (Regular scale of pay) பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்த அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.  
01.01.2026 அன்று பணியில் இருந்து, அதற்குப் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலத்தை முடித்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள் (Superannuation) அல்லது பணியின் போது இயற்கை எய்தியவர்களின் (Death-in-harness) குடும்பத்தினருக்கு இது பொருந்தும்.  

3. யாருக்குப் பொருந்தாது?
வயது முதிர்வு ஓய்வு அல்லது பணியின் போது மரணம் தவிர்ந்த இதர வழிகளில் பணியிலிருந்து விலகியவர்கள்.  
தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(பி)-இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்கள்.  
01.01.2026-க்கு முன்னதாகவே அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.  

4. இடைக்கால ஊதியம் கணக்கிடும் முறை:
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு:
கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) 30% அல்லது ₹10,000 (எது அதிகமோ அது) மற்றும் அதனுடன் 60% அகவிலை நிவாரணம் (Dearness Relief) சேர்த்து மாதாந்திர இடைக்கால ஊதியமாக வழங்கப்படும்.  
பணியின் போது மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு:
மேற்கண்ட கணக்கீட்டின்படி (அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ₹10,000, எது அதிகமோ அது + 60% அகவிலை நிவாரணம்) மாதாந்திர இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  
ஓய்வூதியதாரர் இறந்தால்:
இடைக்கால ஊதியம் பெற்று வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்தால், அவரது தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கு அவர் பெற்று வந்த இடைக்கால ஊதியத்தில் 60% தொகையானது இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  

5. வெளியேறும் விருப்பத்தேர்வுகள் (Exit Options):
அரசு ஊழியர்கள் TAPS திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால் இரண்டு கட்ட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன:
முதல் கட்டம் (உடனடி விலகல் - Stage-I): Comprehensive TAPS விதிகளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக திட்டத்திலிருந்து விலக விரும்பினால், படிவம்-III / IV (Form-III/IV) மூலம் CPS இறுதித் தீர்வுப் பிரகடனத்தை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களின் CPS கணக்கில் உள்ள தொகை (ஊழியர் + அரசின் பங்களிப்பு மற்றும் வட்டி) தற்போதைய CPS வழிகாட்டுதலின்படி முழுமையாகத் தீர்வு செய்யப்படும். இந்த முடிவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது; இதன் பிறகு TAPS திட்டத்தின் எந்தப் பலன்களையும் கோர முடியாது.  
இரண்டாம் கட்டம் (விதிகள் அறிவிக்கப்பட்ட பின் விலகல் - Stage-II): தற்போது இடைக்கால ஊதியப் பலன்களைப் பெறத் தொடங்குபவர்கள், எதிர்காலத்தில் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இத்திட்டத்திலேயே நிரந்தரமாக நீடிக்கலாமா அல்லது இதுவரை பெற்ற இடைக்கால ஊதியத் தொகையை (வட்டியுடன் சேர்த்து) கழித்துக் கொண்டு மீதமுள்ள முழு CPS தொகையையும் பெற்றுக்கொண்டு வெளியேறலாமா என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.  

6. காலக்கெடு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
ஏற்கனவே (01.01.2026 முதல் இந்த அரசாணை வெளியான தேதிக்குள்) ஓய்வு பெற்றவர்கள் அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர், இந்த அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் (Form-I / II) தங்கள் விருப்பப் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  
இனிமேல் ஓய்வு பெறுபவர்கள் அல்லது மரணமடைபவர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற/மரணமடைந்த தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  
இந்த இடைக்கால ஊதியம் தற்காலிகமானது மற்றும் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இறுதிப் பலன்கள் கணக்கிடப்பட்டு, இந்த இடைக்காலத் தொகையோடு சரிசெய்யப்படும் (Arrears or Recovery).

ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள்!!

ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (ப.தொ) செயல்முறைகள்!!

TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவு - இடைக்கால பணப்பட்டுவாடா -ஆணைகள் வெளியீடு

ஓய்வூதியம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவு - இடைக்கால பணப்பட்டுவாடா -ஆணைகள் வெளியீடு

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.06.2026




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:431

குறள்: 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 

பொருள்:

  செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும் . பொருட்பால்

பழமொழி :

Diamond cuts diamond
முள்ளை முள்ளால் எடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"புத்தகங்கள் அறிவின் பொக்கிஷப் பெட்டகங்கள்."

Thought for the Day :

Knowledge is a treasure that no one can take away from you.

பொது அறிவு : 

1. உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? .

மார்ச் 20.  

2. 133 அடியில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஆண்டு எது? 

2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

English words :

Maintain – Preserve, பராமரி.

Conclude – Finish, முடிவுக்கு வா.

NMMS :

ஒரு வட்டத்தின் ஆரம் இருமடங்கானால் அதன் பரப்பு எத்தனை மடங்காகும்??                

விடை : நான்கு மடங்காகும்                          

புவியியலும் சுற்றுசூழலும் :

அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாகும். ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும், அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்ன, மக்களின் உரிமைகள் என்ன என்பவற்றை நிர்ணயிக்கும் அடிப்படை சட்டமே அரசியலமைப்பு ஆகும். 

ஜூன் 18

மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


கக்கன் அவர்களின் பிறந்தநாள்


திரு. கக்கன்


பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். 
நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு நரி வாழ்ந்து வந்தது. அது எப்போதும் எந்த வேலையையும் தாமதமாகச் செய்தது. உணவு தேடுவதற்குக் கூட நேரம் கழித்து கிளம்பும்.

அதே காட்டில் ஒரு அணில் இருந்தது. அது தினமும் அதிகாலையில் எழுந்து உணவைச் சேகரித்து வைத்துக்கொள்ளும்.

ஒருநாள் காட்டில் பலத்த மழை பெய்தது. எல்லா விலங்குகளும் தங்கள் இருப்பிடங்களில் இருந்தன. அணில் முன்பே சேகரித்த உணவை வைத்து நிம்மதியாக இருந்தது. ஆனால் நரி உணவு இல்லாமல் பசியால் தவித்தது.

அப்போது அணில், “நேரத்தை மதித்து வேலை செய்தால் எந்த கஷ்டமும் வராது” என்று கூறி, தன்னிடம் இருந்த உணவை நரியுடன் பகிர்ந்து கொண்டது.

அன்றிலிருந்து நரி தாமதத்தை விட்டுவிட்டு, நேரத்திற்கு வேலை செய்யத் தொடங்கியது.

நீதி: நேரத்தை மதிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.⏰🏆 🌟⭐⭐

இன்றைய செய்திகள்

18.06.2026

🗒️AI .ஆல் நேர்மை, ஒழுக்கத்தை கற்றுத் தர முடியாது - சென்னை ஐகோர்ட்டு கருத்து.

🗒️இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடி - புதிய சாதனை. பாதுகாப்புத் துறை பெருமிதம் .

🗒️கச்சா எண்ணெய் விலை குறையும்: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.

 *விளையாட்டு்ச் செய்திகள்* 

🏀உலகக் கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியர் 27 வயது சர்பிரீத் சிங் .

🏀 பெர்லின் ஓபன் டென்னிஸ்: கம்பேக் போட்டியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி.

Today's Headlines


🗒️ AI cannot teach honesty and morality, observes the Madras High Court.

🗒️ India’s defence production reached ₹1.78 lakh crore in the last financial year, setting a new record, says the Defence Ministry.

🗒️ Crude oil prices will come down, said U.S. President Donald Trump during his meeting with Indian Prime Minister Narendra Modi.

Sports News

🏀 FIFA World Cup Football: 27-year-old Indian-origin player Sarpreet Singh represented the New Zealand national team.

🏀 Berlin Open Tennis: Serena Williams suffered a shock defeat in her comeback match.


17 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.06.2026

திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:430

குறள்:

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.   

பொருள்:

    ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.  

பழமொழி :
"LDelay of justice is injustice.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம்."

Thought for the Day :

"Education is not just about earning a living, but about learning how to live."

பொது அறிவு : 

1. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது?  

ஞானபீட விருது.  

2. 2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

கவிஞர் ஆர்.  வைரமுத்து.

English words :

Acquire – Obtain, பெறு.

Expand – Enlarge, விரிவாக்கு.

NMMS :

பின்வருவனவற்றுள் எது சரி??         

 (1) 0.01=1%                   

  (2) 0.1=1%              

 (3) 0.01 >1%                        

 (4) 0.01 <1%             

Percent means "per hundred."

1
%
=
1
100
=
0.01
1%=1001​=0.01

So:

0.01 = 1% ✅
0.1 = 1% ❌ (0.1 = 10%)
0.01 > 1% ❌ (they are equal)
0.01 < 1% ❌ (they are equal)

Answer: (1) 0.01 = 1% ✅

      

விடை: 0.01=1%

புவியியலும் சுற்றுசூழலும் :

"நீர் இருந்தால் உயிர் இருக்கும்.""எனவே நீர் வளம் பெருக ""மரம் நடுவோம்; பூமியைக் காப்போம்."

ஜூன் 17

லியாண்டர் பயஸ் அவர்களின் பிறந்தநாள்

லியாண்டர் பயஸ் (Bengali: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.
நீதிக்கதை

 நேர்மையான சிறுவன் 

ஒரு கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் உண்மையே பேசுவான்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு பணப்பையை கண்டான். அதில் நிறைய பணமும் சில முக்கிய ஆவணங்களும் இருந்தன.

அருண் அந்தப் பணப்பையை எடுத்துக்கொண்டு, அதில் இருந்த முகவரியைப் பார்த்து அதன் உரிமையாளரின் வீட்டிற்குச் சென்றான்.

பணப்பையை இழந்தவர் மிகவும் கவலையில் இருந்தார். அருண் பணப்பையை ஒப்படைத்தவுடன் அவர் மகிழ்ச்சியடைந்து,

"மகனே! இதில் இருந்த பணத்தில் சிறிது உனக்குப் பரிசாக எடுத்துக்கொள்," என்றார்.

அதற்கு அருண், "இல்லை ஐயா. இது உங்கள் பொருள். நான் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே செய்தேன்," என்றான்.

அருணின் நேர்மையைப் பார்த்து அந்த மனிதர் மிகவும் பாராட்டினார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. அனைவரும் அருணை மதிக்கத் தொடங்கினர்.

நீதி:

நேர்மை என்பது பணத்தால் வாங்க முடியாத உயர்ந்த பண்பு. உண்மை பேசுபவரும் நேர்மையாக நடப்பவரும் அனைவரின் மதிப்பையும் பெறுவார்கள். 

பொன்மொழி: "நேர்மை சிறந்த செல்வம்."

இன்றைய செய்திகள்

17.06.2026

🗒️தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை  -தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

🗒️ மருத்துவரின்  பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து வாங்க முடியாது,என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது .

🗒️மேற்காசியப் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம், ஜூன்.19ம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 *விளையாட்டுச் செய்திகள்*

🏀 நேஷன்ஸ் கோப்பை ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி.

🏀குயின்ஸ் கிளப் டென்னிஸ்: 
லண்டனில் நடக்கும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர்  போட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி.

Today's Headlines

🗒️ Tamil Nadu Financial Status Report – On behalf of the Tamil Nadu Government, Finance Minister Mari Wilson released a White Paper on the financial status of Tamil Nadu at the State Secretariat.

🗒️ No More Cough Medicine Without Prescription – The Central Government has announced that cough medicines can no longer be purchased without a doctor's prescription.

🗒️ The country's Home Ministry has announced that the peace agreement between the United States and Iran, aimed at ending the conflict in West Asia, is set to be signed in Switzerland on June 19.

Sports News

🏀 Nations Cup Hockey – The Indian Women's Hockey Team advanced to the semifinals after defeating Japan.

🎾 Queen's Club Tennis – At the Queen's Club Tennis Championships in London, the pair led by Yuki Bhambri secured a victory.


JOIN KALVICHUDAR CHANNEL