தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி இன்று (30-01-2026) அனைத்து வகை பள்ளிகளிலும் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
30 January 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.2026
திருக்குறள்:
குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
விளக்க உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
பழமொழி :
Self control is the strongest power.
தன்னடக்கம் தான் மிகப் பெரிய சக்தி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...
-------மார்க் ட்வைன்
பொது அறிவு :
1.பணத்திற்கு ரூப்யா' (Rupya) என்று பெயர் சூட்டியவர் யார்?
ஷெர்ஷா சூரி- Sher Shah Suri
02. இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்?
திரு.ச. பொ. ராதாகிருஷ்ணன்
Thiru.C. P. Radhakrishnan
English words :
overwrought-very worried
inception-beginning of something
தமிழ் இலக்கணம்:
ஒருமை பன்மை குறித்து இன்று பார்ப்போம்
பேருந்து இதை பன்மையாக மாற்றும் போது பேருந்துகள் என்றும் புறா இதை பன்மையாக மாற்றும் போது புறாக்கள் என்றும் எழுதுகிறோம். ஏன் புறா புறாக்களாக வல்லினம் மிகுந்து வருகிறது? ஒரு எழுத்து நெடிலில் முடியும் போது அதை பன்மைக்கு மாற்றும் போது கள் விகுதி முன்னால் வல்லினம் மிகுந்து வரும்.
எ.கா –விழா –விழாக்கள்
பூ –பூக்கள்
கனா –கனாக்கள்
ஆ –ஆக்கள்
ஜனவரி 30
மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்களின் நினைவுநாள்
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார் . சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
நீதிக்கதை
வெட்டுக்கிளியும் ஆந்தையும்
ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது.
ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.
நீதி :
பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது.
இன்றைய செய்திகள்
30.01.2026
⭐சென்னையில் ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்-முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
⭐SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.
⭐மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்.
Today's Headlines
⭐Chief Minister laid the foundation stone of the new integrated bus stand at Broadway-Chennai for Rs. 822.70 crore.
⭐ The Supreme Court has granted 10 more days to add names to the SIR voter list.
⭐Tensions continue to rise in the Middle East as the US and Iran prepare for conflict.
SPORTS NEWS
🏀The Australian Open tennis tournament, one of the Grand Slam tournaments, is being held in Melbourne.
🏀 Australian Open tennis: Rybakina advances to the final after defeating Pegula.
29 January 2026
SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் துறை வல்லுநர் (Specialist Cadre Officers - UI/UX) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவிகள்: துணைத் தலைவர் (UX), துணை மேலாளர் (UI & UX) மற்றும் பிற.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2026
முழு விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க:
👉 https://sbi.bank.in/web/careers/current-openings
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2026
திருக்குறள்:
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
விளக்க உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
பழமொழி :
Learning never goes waste.
கற்றது ஒரு போதும் வீணாகாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.
2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.
--------டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம்
பொது அறிவு :
01.நீரின் கொள்ளளவு அடிப்படையில்உலகின் மிகப்பெரிய நீர் தேக்கம் எது?
கரிபா ஏரி-Lake Kariba,
ஜாம்பேசி நதி Zambezi- ரிவேர் ஆப்பிரிக்கா - Africa
02.ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் முக்கிய நீர்வழிப்பாதை எது?
சூயஸ் கால்வாய் -The Suez Canal
English words :
invincible-unbeatable
generosity-willing to give freely
தமிழ் இலக்கணம்:
கட்டடம் மற்றும் கட்டிடம் வேறுபாடு இரண்டுமே கட்டுமானப் பொருளைக் குறித்துப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், சிறிய நுணுக்கமான வேறுபாடு உள்ளது. கட்டடம் (Building) என்பது ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்கு அடுக்கான அமைப்பைக் (Structure) குறிக்கிறது. கட்டிடம் (Site/Plot) என்பது கட்டப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், மனை அல்லது நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
நீதிக்கதை
பலமும் பயமும்
சிங்கம் ஒன்று காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தது. அதற்குச் சேவல் கூவும் ஒலியைக் கேட்டால் போதும் மிகவும் பயந்துவிடும். நான் காட்டரசனாக மிகுந்த பலத்துடன் இருந்து என்ன பயன்? ஒரு சேவல் கூவுவதைக் கண்டு பயந்து வாழ்வது ஒரு வாழ்வா? என்று தனக்குத்தானே மிகவும் நொந்து கொண்டே இருந்தது. அப்போது எதிரே ஒரு யானை மிகவும் சோர்வுடன் தனது காதுகளை இருபக்கமும் வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தது. அதனைக் கண்ட சிங்கம், யானையாரே, மிகப் பெரிய உருவம் கொண்ட உமக்கு என்ன கவலை? ஏன் வாட்டமாக வருகிறீர்? என்று கேட்டது.
சிங்க நண்பரே, அதையேன் கேட்கிறீர்? எனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. இதோ எனது காதுகளின் பக்கத்தில் குளவி ஒன்று பறந்துகொண்டே இருக்கிறது. அது காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் அந்த வலியைத் தாங்க முடியாது. அந்தக் குளவி காதிற்குள் நுழைந்து விடக் கூடாதே என்ற கவலையுடன் காதுகளை ஆட்டிக் கொண்டே வருகிறேன் என்று கூறியது யானை. எத்தகைய வல்லமை உள்ள உயிருக்கும் கூட அதுக்குன்னு ஒரு கவலை நிச்சயம் உண்டு. அதுபோலத்தான் நமக்கும் என்று உலக வழக்கத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து எதற்கும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் சிங்கம் வாழ ஆரம்பித்தது.
நீதி :
பயம், பலவீனம் இரண்டும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது.
இன்றைய செய்திகள்
29.01.2026
⭐ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களை
பொருளாதார ரீதியாக முன்னேற்றும் நோக்கில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (TABCEEDCO) ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு
முன்வந்துள்ளது.
⭐ இந்தியாவிலேயே பெண்களை அதிகம் பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
⭐ தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
⭐சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க சிறு ரூபாய் நோட்டுகளுக்கான ATM - மத்திய அரசு திட்டம். ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது.
🏀பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி முடிவு செய்தது.
Today's Headlines
⭐ Tamilnadu government has come forward to provide loan assistance of up to Rs. 25 lakhs to the Backward Classes Economic Development Corporation (TABCEEDCO), which aims to economically advance the backward classes, the most backward classes and the scheduled castes.
⭐ The Chief Minister of Tamil Nadu has launched a free vaccination program for girls under the age of 14 in Tamil Nadu to prevent oral cancer.
⭐A government order has been issued in Tamil Nadu reducing the passing marks for the Teacher Eligibility Test by 5%.
⭐Central Government Scheme for ATMs for Small Currency Notes to Address Retail Shortage. * The Central Government is considering setting up hybrid ATMs. Also
The government will prioritise installing these ATMs in places where people congregate.
SPORTS NEWS
🏀 Bangladesh team out of World Cup series. * The Scotland team will play in the T20 World Cup due to the Bangladesh team's withdrawal.
🏀All teams are preparing for the T20 World Cup series starting on February 7. In that regard, the Australian team has decided to play a 3-match T20 series with Pakistan.
28 January 2026
TNTET - தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு: விரைவில் அரசாணை வெளியாகிறது.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 55 சதவீதமும் எடுக்க வேண்டும்.
கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட டெட் தேர்வில் மட்டும் எஸ்சி வகுப்பினருக்குதேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாவில்லை. இதற்கிடையே, அண்மையில் அமைச்சர் அன்பில் மகேஸிடம், இதர மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரின.
ஆந்திரா, தெலங்கானாவில் டெட் தேர்ச்சி மதிப்பெண் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் ஓபிசி-க்கு 50 சதவீதமாகவும் எஸ்சி, எஸ்டி-க்கு 45 சதவீத மாகவும் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஓபிசி-க்கு 55 சதவீதமாகவும் எஸ்சி, எஸ்டி-க்கு 45 சதவீதமாகவும் இருக்கிறது. ஹரியானா மற்றும் ஒடிசாவிலும் அனைத்து பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் மதிப்பெண்ணை குறைக்க அரசு முன்வந்துள்ளது. அதன்படி, ஆந்திராவில் இருப்பதைப்போன்று பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும் (150-க்கு 75 மதிப்பெண்) எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (150-க்கு 60) என குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் குறைப்பை கடந்த 2025 டெட் தேர்வில் இருந்தே அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, தேர்ச்சி பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, டெட் தாள்1-ல்தேர்ச்சி பெற்று 68,756 இடைநிலை ஆசிரியர்களும், தாள் 2-ல் தேர்ச்சி பெற்று 66,660 பட்டதாரி ஆசிரியர்களும் பணியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்தவரையில் டெட் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் பணிநியமனத்துக்கு மற்றொரு போட்டித் தேர்வை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Comments (Atom)
