t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

திருக்குறள்: 

குறள் 73: அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. 
                    
விளக்க உரை: 

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

பழமொழி :
Hardwork is the root of success.      

 கடின உழைப்பே வெற்றியின் வேர்.

இரண்டொழுக்க பண்புகள் :


1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

புத்தாண்டில் ஒரு நாள் என்பது 365 பக்க புத்தகத்தில் எழுதப்படாத ஒரு பக்கமாகும். அதில் நல்லவற்றை நன்றாக எழுதுங்கள்.- பிராட் பைஸ்லி

பொது அறிவு : 

01.இந்தியாவில் முதன்மையான முதலை பூங்கா எங்குள்ளது?

    தமிழ்நாடு -சென்னை 

    Tamilnadu - Chennai

02.இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

திரு.தாதாபாய் நௌரோஜி

Dadabhai Naoroji

English words :

New horizons - new beginnings புதிய தொடக்கம் 

confetti - small pieces of colour papers விழாக்களில் தூவப்படும் சிறிய வண்ணத் தாள்கள்

தமிழ் இலக்கணம்: 

 பிற மொழி சொற்களைக் கண்டு பிடிப்பது எப்படி?
1. தனிக் குறில் எழுத்தை அடுத்து "ர்" வரும் சொற்கள் எல்லாமே பிறமொழிச் சொற்களே.

எ. கா –1. *_தர்மம்_* செய்ய முயலுங்கள்

 தூய தமிழில் - *_அறம்_* செய்ய முயலுங்கள்

2. *_கர்ம_* வீரர் காமராசர்
  
 தூய தமிழில்    *_செயல்_* வீரர் காமராசர்

3. இதற்கு என்ன *_அர்த்தம்_* தெரியுமா?
     

 தூய தமிழில் - இதற்கு என்ன *_பொருள்_* தெரியுமா?

      தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

 நாசா வல்லுநர்களின் கூற்றுப்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும்.  2015 ஆம் ஆண்டில் வெளியிப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.

நீதிக்கதை

 மூன்று தோசைகள் 



ஒரு ஊரில் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய உணவு விடுதி இருந்தது. அங்குள்ள மக்கள் தங்கள் அவசரத்திற்கு அங்கு சென்று உணவு வாங்குவதோ சாப்பிட்டுக் கொள்வதோ பழக்கம். இந்த உணவு விடுதியாளர் தனது உணவு விடுதியை மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்.  எனவே அந்த வழியாக பெரு நகரத்திற்கு செல்லுபவர்கள்  அங்கு வந்து உணவு உண்டு விட்டு செல்வது பழக்கம். அங்கு ஒரு அருமையான தோசை மாஸ்டர் இருந்தார் அவர் மிகவும் ருசியான தோசை சுடுவதில் மிகவும் வல்லவர். மிகவும் பிரசித்தி பெற்றவர். அவர் எண்ணும் விதமாய்  தோசைகள் விதம் விதமாக செய்வார். அவர் அப்படியாக  செய்வதற்கு ஏற்றார் போல் தோசைகள் தங்களை விட்டுக் கொடுக்கும். ஒரு நாள் தோசைகளை அவர் ஊற்றும் பொழுது இரு தோசைகளுக்கு ஒரு எண்ணம் வந்தது. இவர் சொல்படியே நாம் கேட்க வேண்டுமா? நாம் இஷ்டப்படி சொல்லி அவரை சுடச் சொல்லுவோம் என்று சொல்ல ஆரம்பித்தது.   ஒரு தோசை மட்டும் இல்லை நாம் அப்படி செய்யக்கூடாது மாஸ்டருக்கு தான் தெரியும் நம்மை எப்படி உருவாக்க வேண்டும் என்று எனவே நாம் இப்படியாக செய்யக்கூடாது. அவர் செய்வதற்கு நாம் விட்டுக் கொடுத்து காத்திருக்க வேண்டும் என்று சொல்லியது. ஆனால் மற்ற தோசை மாவுகள் அப்படியாக செய்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மாஸ்டர் முதல்  தோசையை ஊற்றினார். முதல் தோசை அவர் திருப்பி போடும் முன்னாலே அவரைப் பார்த்து கத்த ஆரம்பித்தது. போதும் என்னை சுட்டது எடுத்துக் கொண்டு அங்கு காத்திருப்பவருக்கு கொடுங்கள் என்று சொல்லியது. இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ஆனால் தோசை கேட்க வழியில்லை எனவே அந்த தோசையை எடுத்துக்கொண்டு அங்கு சென்ற பொழுது அவர் அதைப் பார்த்துவிட்டு என்ன வேகாத தோசை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறி கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு குப்பை கூடையில் போட்டு விட்டார். அதற்குள்ளாக அவர் இரண்டாவது தோசையை ஊற்றி இருந்தார். அதை திருப்பி போடுவதற்கு முன்பாக அதிலே சில காய்கறிகளை சில பொருட்களை போடுவதற்கு அவர் யோசித்தார். அப்பொழுது அந்த இரண்டாவது தோசை “என் மீது எதுவும் போட வேண்டாம் இப்படியே என்னைக் கொண்டு கொடுங்கள் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு செய்யாதீர்கள் என்று சொன்னது”   அவர் இதனிடமும் சொல்லிப் பார்த்தார் “உன்னை நன்கு உருவாக்குவேன்” என்று ஆனால் அது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே அந்த சாதா தோசையை கொண்டு போய் சாப்பிட வந்தவரிடம்  கொடுத்தார் அவர் அதற்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டுவிட்டு பரவாயில்லை என்றார். மூன்றாவது தோசையை  இவர் மெதுவாக ஊற்றி அதை சுற்றி நெய் ஊற்றி குடமிளகாய் வெங்காயம் கேரட் போன்ற சத்துள்ள பொருட்களை அதன் மீது துருவி போட்டு அதன் பின்பு நன்கு இரண்டு பக்கமும் வெந்த பிறகு அதை கொண்டு போய் சாப்பிடுவரிடம் கொடுத்தார் அவர் முகம் மலர்ந்து இதுதான் மிகச் சிறந்த தோசை என்று சொல்லி அவர் கொடுக்க வேண்டிய அளவிற்கு மேலாகவே பணம் கொடுத்து அந்த தோசையை சாப்பிட்டு விட்டு சென்றார் .மாணவர்களே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது

1. நம் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் 

2. இரண்டாவது நாம் நம்முடைய மதிப்பை கூட்ட வேண்டும் என்றால் வாழ்வில் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.01.2026

⭐தெற்கு ரயில்வே காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. (2025) கடந்த மார்ச் முதல் நவம்பர் வரையில் 2.424 கோடி அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.17.87 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது. 

⭐தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கியூஆர் குறியீடு (QR) அடங்கிய ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐ இந்தியாவை அனைத்து பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கும் யுக்தியில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளில் சீனா தனது இராணுவத் தளங்களை நிறுவ திட்டமிட்டு அனு ஆயுதங்களை குவித்து வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: எங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள்- ஐசிசிக்கு வங்கதேசம் வேண்டுகோள்
வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

Today's Headlines

⭐ Southern Railway is actively involved in wind power generation projects. (2025) From March to November last year, 2.424 crore units of electricity have been generated. This has saved Rs. 17.87 crore.

⭐The Tamilnadu government has ordered that stickers containing QR codes must be pasted in all drug stores in Tamil Nadu.

⭐ China is planning to establish military bases in Sri Lanka, Pakistan, Bangladesh, and Myanmar, and is amassing nuclear weapons, in a strategy to surround India from all sides.

 *SPORTS NEWS* 

🏀T20 World Cup: Bangladesh appeals to ICC to hold  matches outside India There is growing opposition to Bangladesh players not playing in India.

Covai women ICT_போதிமரம்


4 January 2026

TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா!?✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா!?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

பதிவை முழுமையாகப் படிக்கும் முன் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுகிறேன். . . .

1. நமது கோரிக்கையை ஏற்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அச்சடித்து வெளியிட்ட வாக்குறுதி, 'பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்' என்பதே.

2. ஓய்வூதியம் என்பது பிச்சையோ, ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்கும் எச்சமோ அல்ல; ஓய்வூதியம் என்பது கொடுபடா ஊதியம்.

3. பணிக்கொடைக்கும் (Gratuity) ஓய்வூதியத்திற்கும் தொடர்பில்லை. இரண்டும் வெவ்வேறு தனித்த சட்டங்கள். இந்தியாவில் GPF / EPF / NPS / UPS என ஓய்வூதியத் திட்டங்கள் மாறுபட்டாலும் - மாற்றப்பட்டாலும் அதில் உள்ள பணியாளருக்கு Gratuity உண்டு. தமிழ்நாட்டில் CPSல் உள்ளோருக்கு மட்டும் ஓய்வூதியத்துடன் Gratuityயும் நிறுத்தப்பட்டுவிட்டது.

4. The Payment of Gratuity Act, 1972ன்படி குறைந்தது 10 நபர்கள் பணிபுரியும் நிறுவனம் என்றால், குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்  ஊழியருக்கு ஆண்டிற்கு 15 நாள் ஊதியத்தை பணிக்கொடையாக வழங்க வேண்டும்.


---- இப்ப TAPSக்கு வருவோம் ----

Tamil Nadu Assured Pension Scheme எனும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் செய்திக்குறிப்பு வெளிவந்து சங்கத்தலைமைகள் அநேகரால் வாழ்த்து மழைகளும், அடிப்படை உறுப்பினர்கள் பெரும்பான்மையினரால் கேள்விகளும் குவிந்து வருகின்றன. தற்போது வெளிவந்துள்ளது அரசாணை அல்ல என்பதால் செய்திக்குறிப்பை மட்டும் முன்வைத்து சில புரிதல்களை நமக்கு நாமே தெளிவுபடுத்திக்கொள்ளவே இப்பதிவு.

செய்திக்குறிப்பில், ஓய்வூதியம் பெறத் தகுதி வாய்ந்த ஆண்டுகள் பணியாற்றிய ஊழியரது 10% பங்களிப்பை வைத்துத்தான் அவருக்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு நிதி போதவில்லையெனில் மீதத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். அப்பணிக்காலத்திற்குக் குறைவானவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ரூ.25,00,000/- வரை பணிக்கொடை வழங்கப்படும். CPSல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதாக உள்ளன.


*புரிதல் :*

1. பிடித்தம் செய்யப்படும் 10% CPS தொகை மொத்தமாகத் திரும்பக்கிடைக்காது.

2. 50% ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் குறைந்தது 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

3. 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணிக்காலம் உள்ளோருக்கு, 50% ஓய்வூதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஓய்வூதியம் என்ற ஒன்று வழங்கப்படும்.

4. 30 ஆண்டுகள் பணியாற்றி 50% ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% அதாவது ரூ10,000/- Pension வாங்கியிருப்பின், ரூ.6,000/- Family Pensionஆகக் கிடைக்கும்.

5. Retirement / Death Gratuity (பணிக்கொடை) பணிக்காலத்தைப் பொறுத்து வழங்கப்படும்

6. 30 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரின் Basic Pay + DA ரூ.1,44,445 என்றால் அவருக்கு, உட்சபட்ச பணிக்கொடை ரூ.25,00,000/- கிடைக்கும். மற்றவர்களுக்கு (Working Years × Basic&DA × 15) ÷ 26 என்ற கணக்கீட்டின்படி கிடைக்கும்.

7. TAPS தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு இது நடைமுறைப்படுத்தும் நாள்வரை ஓய்வு பெற உள்ளோருக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

8. 50% ஓய்வூதியம் பெறுவோருக்கு மட்டுமே ஆண்டிற்கு 2 முறை DA கூடும். மற்றபடி 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணியாற்றுவோருக்கும் DAவிற்கும் தொடர்பில்லை.


*கேள்விகள் :*

1. அரசு இனி தனது பங்களிப்பை மாதம்தோறும் ஒதுக்குமா? /  ஆண்டிற்கொருமுறை நேரடியாக ஓய்வூதிய நிதியத்தில் செலுத்துமா?

2. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோருக்கு எத்தனை ஆண்டுகள் அடிப்படையில் எவ்வாறு குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும்?

3. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோர் இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா?

4. TAPS நடைமுறைக்கு வரும்முன் ஓய்வு பெற்றோருக்கு கருணை ஓய்வூதியம் உண்டு எனில், 01.04.2003ற்குப் பின் பணியேற்று தற்போது வரை ஓய்வுபெற்றுவிட்டோர் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்துமா?

5. கருணை ஓய்வூதியம் என்பது எவ்வளவு ரூபாய்?

6. UPS திட்டத்திலும் இதே போன்று ஊழியரின் பங்களிப்பைக் கொண்டே 50% ஓய்வூதியம், 60% குடும்ப ஓய்வூதியம் & குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதிசெய்யப்பட்டுள்ளதே. அப்படியானால், UPSன் மறுவடிவம் தான் TAPSஆ?

7. UPSல் அரசின் பங்களிப்பு 14%. TAPSல் அரசின் பங்களிப்பு என்ன?

8. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை அரசின் பங்களிப்பு கூடிக்கொண்டே போனால் அரசிற்கு கடும் நிதிச்சுமை நிதியாண்டு தோறும் ஏற்படாதா?

9. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை 100% ஊழியர்களுக்கும் அரசின் பங்களிப்பினை அளிக்காமல் ஓய்வு பெருவோருக்கு மட்டும் பங்களிப்பு செய்யும் பழைய ஓய்வூதியத் திட்டம் தானே அரசிற்கும் நல்லது?

10. நடப்பு நிதி ஆண்டில் ரூ.11,000 கோடி அரசுப் பங்களிப்போடே கூடுதலாக ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய இயலுமா?

11. ஜனவரி 20ல் தொடங்கும் இந்த ஆட்சியின் இறுதிக் கூட்டத்தொடரில் ரூ.13,000 கோடியை TAPSற்கென கூடுதலாக ஒதுக்கீடு செய்து திருந்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது சாத்தியமா?


---- சரி TAPS டாப்பா? ஆப்பா? ----

மேற்படி புரிதல் சரியெனில், அதனைத் தொடரும் கேள்விகள் நியாயம்தானெனில் அதற்குண்டான விடைகள் அரசாணையில் கிடைக்கும் என நம்புவோம்.

மேலும், TAPS அறிவிப்பின் வழியே 23 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட பணிக்கொடை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

TAPS உங்களுக்கு டாப்பா? ஆப்பா? என்பதை உங்களது ஒட்டுமொத்த பணிக்காலம், பிடித்தம் செய்யப்பட்ட & செய்யப்படவுள்ள CPS தொகை ஆகியவற்றை வைத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், இதன் பலன்கள் ஒவ்வொரு தனித்த நபரின்  சூழல் சார்ந்தவையே.

முடிவு செய்யும் முன், 

LICன் ஜீவன் உட்சவ்வில், 30 - 46 வயதுவரை 16 ஆண்டுகள் மட்டும் மாதம் ரூ.10,375/- செலுத்தினால், 48வது வயது முதல் 100 வயது வரை ஆண்டிற்கு ரூ.2,00,000/- கிடைக்கும்.

LICன் ஜீவன் ஆனந்த்தில், 30 - 60 வயதுவரை மாதம் ரூ.4,800/- வீதம் ரூ.16,90,749/- மட்டும் செலுத்தினால், 60வது வயதில், ரூ.52,60,000/- கிடைக்கும். இதை 8.05% வட்டி வீதத்தில் Fixed Depositல் முதலீடு செய்தால் மாதம் ரூ.36,365/- வீதம் ஆண்டிற்கு ரூ.4,36,385/- வட்டியாகக் கிடைக்கும். இது போக, 100 வயது வரை ரூ.15,00,000/- இலட்சத்திற்கான Long Life Coverageம் கிடைக்கும்.

இதே, தொகையை ஓய்வூதியமாகப் பெற வேண்டுமெனில், 30 ஆண்டுகள் பணிக்காலத்தோடு, இறுதி மாதத்தில் ரூ.72,730/- அடிப்படை ஊதியமாகப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஊதியத்திற்கு நீங்கள் ஜீவன் ஆனந்த்தைவிட மாதம் ரூ.3,000/- கூடுதலாக TAPSற்கு செலுத்தியிருப்பீர்கள்.

மேலும், CPSலேயே இருந்து Settlement வாங்கி அதை Fixed Depositல் முதலீடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இது ஒரு மாதிரிக் கணக்கீடே. இன்னும் இது போன்ற பல திட்டங்கள் பல்வேறு நிறுவனங்களில் இருக்கலாம். விசாரித்துப் பாருங்கள்.

அதையெல்லாம் விசாரித்துவிட்டு, உங்களது நிதிநிலையை முன்வைத்து உங்களுக்கு TAPS டாப்பா? ஆப்பா?  என்ற முடிவிற்கு வாருங்கள்.

இதுவரைக்கும் இந்த ஒப்பீடெல்லாம் செய்தீர்களா? என்றால், நாம் கேட்டதும், நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியாகக் கொடுத்ததும், தற்போது அறிவித்துள்ள TAPSற்கு முற்றிலும் நேர்மாறான 100% முழுமையான ஓய்வூதியப் பலன்களை உள்ளடக்கிய பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான். அதற்கு இந்த ஒப்பீடெல்லாம் தேவையேயில்லை.

ஆனால், அதுவும் இல்லை, நம்மிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்புத்தொகையும் இல்லை, 30 ஆண்டுகளுக்குக் குறைவானால் 50% ஓய்வூதியமே இல்லை எனும் போது TAPS முதலீட்டை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய கட்டாயம் எழத்தானே செய்கிறது.

அதெல்லாம் இல்ல. . . . 'உனது புரிதலே தவறு; கேள்விகள் தேவையற்றவை; ஒப்பீடு அறமற்றது; எதுவுமே இல்லாததற்கு TAPS தேவலாம்!' என்பதே உங்களது பொருளாதாரப் புரிதல் என்றால், உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

இறுதியாக,

பசியில் அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு உணவளிப்பதாகக் கூட்டி வந்த தந்தை, அவனிடமிருந்து தான் எடுத்துக்கொண்ட 10 ரூபாயில், 1 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தாராம். So kind dadல!

அட. . .,

* அந்தக்காசே அவனோடதுதான. . .!?

* அவனோட மீதி 9 ரூபா எங்க. . . .!?

* இதுக்கு அந்தக்காச எடுக்காம இருந்தா, அவன் வயித்துக்கு ஏதோ அவனே வாங்கி சாப்ட்டிருப்பானே. . .!?

* பசியாற உணவுதானே வேணும், அதத்தான தருவேனு சொன்னாரு!?

என்றெல்லாம் உங்களுக்கும் தோன்றினால் நீயும் என் தோழனே!

3 January 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS): ஓர் விரிவான பார்வை

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS): ஓர் விரிவான பார்வை

தமிழ்நாடு அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பயன்களை அளிக்கும் வகையில், தொலைநோக்குடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் நிதிச் சுமை குறித்த விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

TAPS திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

1. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் (Assured Pension):

மாநில அரசு அலுவலர்கள் தாங்கள் இறுதியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கியப் பலன்களில் ஒன்றாகும்.

இந்த 50 சதவீத உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவதற்காக, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். பணியாளர்கள் தங்கள் பங்களிப்பாக செலுத்தும் 10 சதவீதம் மட்டுமே அவர்களிடமிருந்து பெறப்படும். இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

2. அகவிலைப்படி உயர்வு (Dearness Allowance Hike):

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையான உயர்வு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் வாங்கும் சக்தி பாதுகாக்கப்படும்.

3. குடும்ப ஓய்வூதியம் (Family Pension):

ஓய்வூதியதாரர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இது ஓய்வூதியதாரரின் குடும்பத்திற்கு நிலையான நிதி ஆதாரத்தை உறுதி செய்கிறது.

4. பணிக்கொடை (Gratuity):

அரசு அலுவலர்கள் பணி ஓய்வு பெறும் போதும் அல்லது பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவர்களின் பணிக்காலத்திற்கேற்ப, அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை பணிக்கொடையாக வழங்கப்படும். இது பணியாளர்களின் பணிநிறைவுக் காலத்திலும், எதிர்பாராத சூழலிலும் நிதிப் பலன்களை உறுதி செய்கிறது.

5. குறைந்தபட்ச ஓய்வூதியம் (Minimum Pension):

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். இது குறுகிய காலம் பணியாற்றியவர்களுக்கும் அடிப்படை நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது.

6. சிறப்பு கருணை ஓய்வூதியம் (Special Compassionate Pension):

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme - CPS) கீழ் பணியில் சேர்ந்து, TAPS திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இது, ஏற்கெனவே ஓய்வூதியம் பெற இயலாத நிலையில் இருந்த ஊழியர்களுக்கும் நிதி நிவாரணம் அளிக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாடு அரசின் நிதிச் சுமை மற்றும் அர்ப்பணிப்பு:

TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், தமிழ்நாடு அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு கணிசமான நிதிப் பங்களிப்பைச் செய்ய வேண்டியுள்ளது.

ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதல் பங்களிப்பு: இத்திட்டத்தை செயல்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை தமிழ்நாடு அரசு ஒரே தவணையாக அளிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பு: இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். பணியாளர்களின் ஊதிய உயர்வுக்கு ஏற்ப இந்தப் பங்களிப்புத் தொகை ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.

முதலமைச்சரின் வேண்டுகோள்:

தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய பெரும் செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடுகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் இந்த TAPS திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

இந்த TAPS திட்டம், அரசு ஊழியர்களுக்கு ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான ஓய்வூதிய வாழ்க்கையை உறுதி செய்வதோடு, சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கையாகும்


திறன் மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு



📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் *தமிழ், ஆங்கிலம் & கணிதம்* ஆகிய பாடங்களில் *70% or 70% மேல் மதிப்பெண்கள்* பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.

📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களில் 35% or 35% மேல் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

அதாவது,
தமிழ், ஆங்கிலம் &  கணிதம்
 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.
8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 

அறிவியல் & சமூக அறிவியல்
* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


▪️ ஐந்து பாடங்களுக்கும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

▪️ ஒருமுறை பதிவேற்றம் செய்து, *Submit Marks* button அழுத்தி விட்டால் திரும்ப பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படாது.

▪️ மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும்பொழுது, மிகவும் கவனமாக பதிவிட செய்தல் வேண்டும்.

▪️ பதிவேற்றம் செய்யும் மதிப்பெண்கள் அடிப்படையில், அடுத்தடுத்த மாணவர்கள் முன்னேற்றம் சார்ந்த Director, JD's, CEO, DEO & BEO's மீளாய்வு கூட்டத்தில் சார்ந்த விளக்கங்கள் கோரப்படும்.

நன்றி!
தகவல்: திரு.அலெக்ஸ் பாண்டியன்

TAPS - தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் - Pension & Other Benefit Calculations - முழு விளக்கம் - வெளியிட்டது தமிழக அரசு

TAPS - தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் - Pension & Other Benefit Calculations - முழு விளக்கம் CLICK HERE TO DOWNLOAD


TAPSதமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தமிழக முதல்வர் அறிவிப்பு முழு விவரம் PDF மற்றும் இணைப்பு


1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 
50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.  

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.  

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 
11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.  இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.  
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும்,  பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை,  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
****

2 January 2026

2026 ஜனவரி மாதம் SCHOOL CALENDAR & "ஆசிரியர் டைரி"

2026 ஜனவரி மாதம்
"ஆசிரியர் டைரி"

01.01.2026 - வியாழக்கிழமை
ஆங்கில புத்தாண்டு
அரசு விடுமுறை

03.01.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் -BEO அலுவலகம்
2026 Pongal Bonus apply Kalanjiyam App
ஆருத்ரா தரிசனம் - RL
வாக்காளர் சிறப்பு முகாம்

04.01.2026 - ஞாயிற்றுக்கிழமை
வாக்காளர் சிறப்பு முகாம்

05.01.2026 - திங்கள்கிழமை
பள்ளிகள் திறப்பு
மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்
RIESI, Bangalore 30 Days Trg

06.01.2025 - செவ்வாய்க்கிழமை
போட்டா-ஜியோ - காலவரையற்ற வேலைநிறுத்தம்
10.01.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் -DEO அலுவலகம்
NMMS Exam
Vidyagyan - 5th Standard Scholarship Exam

14.01.2026 - புதன்கிழமை
போகிப் பண்டிகை
(மகர சங்கராந்தி)- RL

15.01.2026 - வியாழக்கிழமை
தைப்பொங்கல் திருநாள்
அரசு விடுமுறை

16.01.2026 - வெள்ளிக்கிழமை
மாட்டுப் பொங்கல் (திருவள்ளுவர் தினம்)
அரசு விடுமுறை

17.01.2025 - சனிக்கிழமை
உழவர் திருநாள்
அரசு விடுமுறை

24.01.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
CEO அலுவலகம்

26.01.2026 - திங்கள்கிழமை குடியரசு தின நாள்
அரசு விடுமுறை

31.01.2026 TNCMTSE  EXAM

JOIN KALVICHUDAR CHANNEL