t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.2025




திருக்குறள்: 

குறள் 436: 

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு. 

விளக்க உரை: 

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

பழமொழி :
Small steps lead to big journeys. 

சிறிய படிகள் பெரிய பயணத்தை ஏற்படுத்தும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

அறியாமை தான் பயம் . பயம் தான் பாதி தோல்விக்குக் காரணம் - எழுத்தாளர் சுஜாதா

பொது அறிவு : 

01."இந்திய அறிவியலின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

சர் ஜகதீஷ் சந்திர போஸ்
Sir Jagadish Chandra Bose

02.திருமறைக்காடு என்று அழைக்கப்பட்ட ஊர் எது?

வேதாரண்யம் -Vedaranyam

English words :

affluent-wealthy

 whammed-hit

தமிழ் இலக்கணம்: 

வல்லினம் மிகா இடங்கள் 
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,

மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது. 

அறிவியல் களஞ்சியம் :

பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை (முசுக்கொட்டை இலை) விரும்பி சாப்பிடுகின்றன. மற்ற இலைகளை இவை தொடுவதில்லை. இதனால் பட்டு நூலுக்காக பட்டுப்புழுக்களை வளர்ப்பவர்கள் மல்பெரி புதர்களை வளர்க்க வேண்டிவருகிறது. பட்டுப்புழுக்களை செயற்கையான உணவுப் பதார்த்தங்களில் வளர்ப்பதற்கும் வேறு வகை தாவர இலைகளில் வளர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவை ஓரளவுக்கு வெற்றிகளைத் தந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பட்டுநூலானது மட்ட ரகமாக இருக்கின்றன.
நவம்பர் 07

மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்


சர்.சி.வி.இராமன்



சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.



அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்





அழ. வள்ளியப்பா



அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

நீதிக்கதை

 பொம்மைகள்

ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன், மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்தும் மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.

படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்கு பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர்.

ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.

ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடிவமைத்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த சீலா, ”ஏண்டா ரகு அழுகிறாய்?” எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன் கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினாள் மேகலா.

அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை சீலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும்படி, இயற்கையாக அமைந்தது போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தன. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.

ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது. தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.

அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். ”கல்வியோடு கூட குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால், அவர்கள் சாதனையாளர்கள்தான்” என்றார் வரதன்.

 வாழ்த்துக்கள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.

சிறு, சிறு காகித பொம்மைகளை செய்துவந்த ரகு இப்போது பெரிய ஓவியனாகி இருந்தான். அதுமட்டுமல்ல கல்வியிலும் முதன்மையாகத் திகழ்ந்தான். 

கல்வியுடன் கூடிய திறமை என்றும் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இன்றைய செய்திகள்

07.11.2025

⭐வடக்கு டெல்லியின் நரேலாவில், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 264 ஆக உயர்ந்து, மோசமாக இருந்தது.
நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

⭐இந்தியாவில் 3 கோடி கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் - மாருதி சுசுகி சாதனை

⭐சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀4-வது T20 போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

🏀உலக கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மோதிய 2-வது ஆட்டமும் டிராவில் முடிந்தது.

Today's Headlines

⭐In North Delhi's Narela, the overall air quality index rose to 264, which was poor. Delhi's air remains very poor from November 6 to 8, it said.

⭐Maruti Suzuki becomes the first company to sell 3 crore cars in India - Record.

⭐Moderate rains have been recorded in various places in Chennai.

 SPORTS NEWS 

🏀4th T20 match: India beats Australia to clinch series 

🏀World Cup Chess: The second game of Praggnanandha also ended in a draw.

.

6 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2025




திருக்குறள்: 

குறள் 433: 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் 
கொள்வர் பழிநாணு வார். 

விளக்க உரை: 

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

5 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.11.2025



திருக்குறள்:

குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 

விளக்க உரை: 

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

பழமொழி :
Curiosity is the spark of knowledge. 

ஆர்வமே அறிவின் தீப்பொறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன - சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு : 

01.மனித சிரிப்பு போன்ற ஒலியை எழுப்பும்பறவை எது?


கூக்காபுரா- kookaburr

02.உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா எது?

மெக்சிகோ வளைகுடா
Gulf of Mexico
English words :

Drenched-completely socked

candid-honest and straightforward

தமிழ் இலக்கணம்: 

 வல்லினம் மிகா இடங்கள்.

1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.
நவம்பர் 05

விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்

விராட் கோலி (பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது , 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது . இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஶ்ரீ விருது வழங்கியது.. துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது. மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[]ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.
உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

நீதிக்கதை

 ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டில் பல விதமான பறவைகளும் விலங்குகளும் வசித்து வந்தன. ஆனால் மனிதர்கள் காட்டை வெட்டி வெட்டி அதை அழித்து விட்டதால் மழை பெய்வது குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திலே காடு பாலைவனமாக மாறிவிட்டது. எனவே எல்லா விலங்குகளும் பறவைகளும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டன. 

ஒரே ஒரு குருவி மட்டும் அந்த பாலைவனத்திலே விடாமல் இருந்து வந்தது. ஆனால் அந்த குருவிக்கு உணவு கிடைக்கவில்லை அதிக வெயில் அதிக வெப்பம் தண்ணீர் கூட இல்லாத நிலையிலே அந்த குருவிக்கு ஒதுங்குவதற்கு பாறைகள் தான் இருந்தது. உணவும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் அந்த குருவி மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தது. பெலவீனம் ஆகி விட்டது. இப்பொழுது அதனால் பறந்து செல்லவும் முடியவில்லை. இவ்வாறு அனுதினமும் கஷ்டத்தை அடைந்து வந்தது. 

அப்பொழுது ஒரு நாள் ஒரு புறா அதைக் கடந்து சென்றது இப்பொழுது குருவி மிகுந்த மெல்லிய குரலிலே “புறா அண்ணா புறா அண்ணா” என்று கூப்பிட்டது. புறாவிற்கு அந்த சத்தம் காதிலே விழுந்தது. அது மேலிருந்து கீழே இறங்கி அந்த குருவியின் அருகில் வந்து அமர்ந்து, குருவியிடம் “என்ன குருவி உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது . “புறா அண்ணா என்னுடைய நிலையை பாருங்கள். நான் மிகுந்த வெயிலும் மிகுந்த வறண்ட இடத்தில் இருப்பதினால் எனக்கு உணவு இல்லை, நீரில்லை. அதனால் என்னுடைய உடலும் பலவீனம் அடைந்து விட்டது. எனக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டது. 

அப்பொழுது புறா “நான் வானுலகத்திற்கு செல்கிறேன்” என்று சொன்னது. அப்பொழுது இந்த குருவி தாங்கள் தயவு கூர்ந்து அங்குள்ள தேவதைகளிடம் “எனக்கு என்ன நடக்கும் என்று கேட்டு சொல்லுங்கள் “ என்று கூறியது. புறாவும் தான் கண்டிப்பாக கேட்டு வந்து செல்வதாக சொன்னது. இப்போது புறா வான் உலகம் சென்றது.

 அங்கு உள்ள தேவதைகளிடம் இந்த குருவியின் நிலையை எடுத்துக் கூறியது. இப்பொழுது ஒரு தேவதை சொன்னது “அதற்கு மிகவும் கடினமான வாழ்க்கை தான், ஆனால் இந்த கடின வாழ்க்கையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால் என்ன நடந்தாலும் "கடவுளே உங்களுக்கு நன்றி என்று கூற வேண்டும்” என்று கூறியது. 

புறாவும் சிறிது நாட்கள் வானுலகில் இருந்து விட்டு இந்த பாலைவனத்தை கடந்து தன் இருப்பிடத்திற்கு சென்றது. செல்லும் வழியில் பாலைவனத்தில் இறங்கி குருவியை பார்த்து “உன்னுடைய நிலைமையை சொன்னேன் தேவதைகள் சொன்னார்கள் என்ன நடந்தாலும் நீ கடவுளே நன்றி என்று கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்கள். எனவே நீ நன்றி கடவுளே என்று கூறு” என்று சொல்லி அறிவுரை சொல்லிவிட்டு பறந்து சென்றது. 

இப்பொழுது குருவி நான் எப்படி நன்றி கூறுவேன் என்னுடைய வாழ்வில் எதுவுமே சரியாக இல்லை என்று நினைத்தது. ஆனாலும் தேவதைகளின் வார்த்தைக்கு கீழ்ப்படிய நினைத்தது. அதிகம் சோர்ந்து போயிருந்தது அதனால் நடக்க கூட முடியவில்லை அப்படியே ஒரு பாறைக்கு அடியில் படுத்து கிடந்து “நன்றி ஆண்டவரே இந்த பாலைவனத்திற்கு நன்றி. இந்த வெயிலுக்கு நன்றி இந்த பாறைக்கு நன்றி என்று நன்றி நன்றி” என்று கூறிக் கொண்டே இருந்தது. 

இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் கடந்து சென்றது. ஒரு நாள் திடீரென்று அதனுடைய இறக்கையிலும் உடம்பிலும் ஒரு புது பலன் வந்தது போல் இருந்தது. மேலும் மேகங்கள் வந்து நன்கு மழையை பொழிந்தது. மழை பொழிந்ததினால் அந்த இடத்திலே புற்களும் சிறு சிறு செடிகளும் வளர ஆரம்பித்தன. 

செடிகளிலிருந்து சிறுசிறு தானியங்களும் அதற்கு கிடைக்க ஆரம்பித்தது. சிறு சிறு செடிகளில் கூட சிறு சிறு பழங்கள் வந்தது. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் கூட வளர ஆரம்பித்தது. 

ஒரு மாதம் கழித்து அந்தப் பக்கமாக வந்த புறா ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு போனது. செழிப்பான பாலைவனம் அருமையான அழகான குருவி. இதற்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள் வேறு ஒன்றும் இல்லை நன்றி உள்ள இருதயம் எப்பொழுதும் செழுமையும் வளமையையும் நம்முடைய வாழ்விலே கொண்டு வரும்.

இன்றைய செய்திகள்

05.11.2025


⭐குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது.

⭐பீகார் சட்டசபை தேர்தல்:
முதல்கட்டமாக 121 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

⭐சத்தீஸ்கரில் சரக்கு ரெயில்மீது பயணிகள் ரெயில் மோதல்: 6 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி தரவரிசை: தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் முதலிடம் பிடித்தார்.

Today's Headlines

⭐ The Canadian government has introduced various immigration restrictions, including reducing the number of visas issued to international students.

⭐Bihar Assembly Elections: First phase of campaigning ends in 121 constituencies 

⭐Passenger train collides with freight train in Chhattisgarh: 6 killed.

 SPORTS NEWS 

🏀ICC Rankings: South Africa captain Laura Walworth remains at number one.


4 November 2025

முதன்மை கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் விபரங்கள் வெளியீடு

முதன்மை கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் விபரங்கள் வெளியீடு 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2025




திருக்குறள்:

குறள் 401: 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.   

கல்வி முன்பணம், திருமண முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் IFHRMS மூலம் பட்டியல் தயாரிக்கும் முறை வெளியீடு


கல்வி முன்பணம், திருமண முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் IFHRMS மூலம் பட்டியல் தயாரிக்கும் முறை வெளியீடு!!

JOIN KALVICHUDAR CHANNEL