t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2025




திருக்குறள்:

குறள் 722: 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லு வார் 

விளக்க உரை: 

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

பழமொழி :
Hardwork turns dreams into reality. 

கடின உழைப்பை கனவுகளை நனவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதைவிட நீ உயர்ந்தவன் சிறந்தவன் என்ற மன உறுதி வேண்டும் - டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.மிகக் குறுகிய காலம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?


வில்லியம் ஹென்றி ஹாரிசன்
(William Henry Harrison)

02. எரிமலைகள் அதிகம் உள்ள நாடு எது?

அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
(United States of America)
English words :

tear up – rip into pieces,ஒரு பொருளை சிறிய துண்டுகளாகக் கிழிப்பது

தமிழ் இலக்கணம் :

 சில சுட்டு, வினாச் சொற்கள்:
'அ', 'இ', 'எ' போன்ற சுட்டு, வினா எழுத்துக்களின் முன்னரும், அவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த போன்ற சொற்களின் முன்னரும் வல்லினம் மிகுந்து வரும். 
எ.கா: இந்த + பள்ளி = இந்தப்பள்ளி 
எந்த+காடு = எந்தக்காடு
அந்த+செடி= அந்தச்செடி

அறிவியல் களஞ்சியம் :

 எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

அக்டோபர் 09

சே குவேரா அவர்களின் நினைவுநாள்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.



உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 செய்யும் தொழிலே தெய்வம் .

                  ஒரு பெரிய நகரத்தில் இருந்த பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் அவரின் கடை மிகப் பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் நீங்க வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் என்றார் கிண்டலாக .

                   பெரியவர் புன்னகைத்துவிட்டு, இல்லை ஐயா . நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த கூடையில் சமோசா விற்றபோது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்பொழுது என் வருமானம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். உங்கள் வருமானம் மாதம் இருபதாயிரம்.

                    நீங்கள் இப்பொழுது இந்த கம்பெனியில் மேனேஜர் ஆகி விட்டீர்கள். மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இப்பொழுது எனக்கு சொந்தமாக இந்த கடை இருக்கிறது. எனக்கு நல்ல பேர் இருக்கு. நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல இல்லாமல் நேரடியாக முதலாளியாக வந்து கடையை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தால் போதும் . 

                    ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்களின் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளியின் மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் அனுபவித்த அவ்வளவு கஷ்டத்தையும் அவனும் அனுபவிப்பான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே எண்ணிப் பாருங்க என்றார். ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம் என்றார். 

                    மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மௌனமாகச் சென்று விட்டார். 



நீதி : செய்யும் தொழிலைக் கொண்டு யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது.

இன்றைய செய்திகள்

09.10.2025

⭐விதிகளை பின்பற்ற தவறிய 54 அரசு & தனியார் பல்கலை க்கழகங்களுக்கு 
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

⭐அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

⭐சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய மியான்மர் ராணுவம்-40 பேர் உயிரிழப்பு

⭐2025ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு   
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் . பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.

Today's Headlines

⭐ To 54 Government & Private Universities that do not follow the protocol 
The University Grants Committee (UGC) has issued a notice.

⭐ 5G Mobile Link in all districts - Prime Minister Modi is proud.

⭐ The Myanmar Army bombarded its own country's people. 40 people were killed. 

⭐ The 2025 Nobel Prize for Chemistry is distributed to
3 people from Japan, Australia, and the United States.

🏀 Sports News

 Improvement in the ranking of the Indian players. As for the batting rankings, Jadeja has jumped 6 places from 31st place and got the 25th place.


8 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.10.2025



திருக்குறள்:

குறள் 701:

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி        

விளக்க உரை: 

ஓருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.

பழமொழி :
Knowledge is wealth no thief can steal.

7 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2025





திருக்குறள்:

குறள் 682:

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று 

6 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.10.2025





திருக்குறள்: 

குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

பழமொழி :
Success tastes sweeter after struggle.

 போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ் 

பொது அறிவு : 

01. நமது உடலின் ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது? 

  ஹீமோகுளோபின்(Hemoglobin)

02. இந்தியாவில் செம்பு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? 

           ராஜஸ்தான்(Rajasthan )

English words :

Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்

ஒற்றெழுத்து விதிகள் என்பவை தமிழில் இரண்டு சொற்கள் இணையும்போது சில வல்லின மெய்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் அல்லது இயல்பாக இருக்கும் என்னும் இலக்கண விதியாகும்.



1.நிலைமொழியில் உயிர்: முதல் சொல்லின் இறுதியில் உயிர் எழுத்து வந்து, இரண்டாம் சொல்லின் முதலில் 'க', 'ச', 'த', 'ப' வந்தால், வல்லினம் மிகுந்து வரும். 

எ.கா: பள்ளி + கூடம் = பள்ளிக்கூடம்

அறிவியல் களஞ்சியம் :

 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அக்டோபர் 06

புலமைப்பித்தன் அவர்களின் நினைவுநாள்  



புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.
நீதிக்கதை

 குரு சொன்ன அறிவுரை



ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. 



மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.



இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.



நீதி :

நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.2025


⭐சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

⭐இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் அவசர ஆலோசனை

⭐வங்கதேச இறக்குமதி குறைந்ததால் உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரிப்பு

⭐நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - 47 பேர் உயிரிழப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

🏀 இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி இடையே ஒரு முக்கியமான 2026 உலகக் கோப்பை முன்னிலை பெற்ற கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ In and around Chennai for Diwali security arrangements are intensified, 18 thousand policemen were on duty in supervising the city 

⭐ Union Health Ministry discussing urgently on child deaths by cough medicine.

⭐Demand for Tirupur garments in domestic markets increases as Bangladeshi imports declined

 ⭐47 people died due to heavy rains, floods, landslides in Nepal 

 *SPORTS NEWS* 

🏀 The World Cup cricket match is underway between India and Australia. 

🏀 An important 2026 World Cup qualifying football match is taking place between England and Germany.


2025 அக்டோபர் மாதம் SCHOOL CALENDAR



2025 அக்டோபர் மாதம்
"ஆசிரியர் டைரி"

01.10.2025 - புதன்கிழமை
சரஸ்வதி பூஜை
(ஆயுத பூஜை)
அரசு விடுமுறை

02.10.2025 - வியாழக்கிழமை
காந்தியடிகள் பிறந்தநாள்
விஜய தசமி
அரசு விடுமுறை

03-10-2025 - வெள்ளிக்கிழமை
கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)

04.10.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்

05.10.2025 ஞாயிற்றுக்கிழமை
உலக ஆசிரியர் தினம்

06.10.2025 - திங்கள் கிழமை
இரண்டாம் பருவம்
பள்ளிகள் திறப்பு

07.10.2025 - 10.10.2025
செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை
எண்ணும் எழுத்தும் பயிற்சி

11.10.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்

18.10.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
CEO அலுவலகம்

20.10.2025 - திங்கள் கிழமை
தீபாவளி பண்டிகை
அரசு விடுமுறை


21.10.2025 - செவ்வாய்க்கிழமை தீபாவளி நோன்பு
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)

30 September 2025

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது ககன் தீப் சிங் பேடி குழு



ஓய்வூதிய திட்டம் குறித்து தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த ககன் தீப் சிங் பேடி குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது.

பின்னர், உரிய அறிக்கையினை செப்டம்பர் 2025-க்குள் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது.

மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த எட்டு மாதங்களில், 7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது.

கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.

சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இச்சூழ்நிலையில், இக்குழுவானது இன்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும்.








29 September 2025

JOIN KALVICHUDAR CHANNEL