t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2025




திருக்குறள்:

குறள் 456:

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை 

விளக்க உரை: 

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

பழமொழி :
Time well spent is the life well lived. 

சரியாக பயன்படுத்திய நேரமே நன்றாக வாழ்ந்த வாழ்க்கை ஆகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

தோற்றத்தில் எளிமையும் இனிமையும் அழகிற்கு அத்தியாவசிய தேவை- எட்மண்ட் பர்க்.

பொது அறிவு : 

01.உலகில் அதிக தூரம் பயணிக்கும் பறவை எது?


ஆர்க்டிக் ஆலா - Arctic tern

02.இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர். எஸ்.ஆர்.ரங்கநாதன் 
Dr. S. R. Ranganathan 
English words :

pampering – to take care of somebody very well and make them comfortable, ஒருவரை மிக நல்ல முறையில் பேணுதல், செல்லம் கொடுத்தல்

தமிழ் இலக்கணம்: 

 வினைச்சொல் முக்கியமாகத் தெரிநிலை வினை, குறிப்புவினை என இருவகைப்படும்.
எ.கா. தொடுத்தாள், வந்தான், கரிகாலன்

அறிவியல் களஞ்சியம் :

 நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
அக்டோபர் 27

கே. ஆர். நாராயணன் அவர்களின் பிறந்தநாள்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.
நீதிக்கதை

கதை :

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 



பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 



முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 



எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 



அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 



இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 



நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்தி விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

27.10.2025

⭐அரபிக் கடலில் 11 நாட்களாக சிக்கித் தவித்த 31 மீனவர்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை

⭐ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு-பிரதமர் மோடி பெருமிதம்

⭐போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் உலக கோப்பை: கடைசி லீக்கில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து

Today's Headlines

⭐Indian Coast Guard rescues 31 fishermen stranded in Arabian Sea for 11 days 

⭐PM Modi proudly said GST tax cut boosts sales of goods .

⭐93 killed in Israeli strikes on Gaza in violation of ceasefire 

 *SPORTS NEWS* 

🏀Women's World Cup, England easily beat New Zealand in final league.


25 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2025




திருக்குறள்:

குறள் 137: 

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவ ரெய்தாப் பழி. 

உரை: 

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

24 October 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2025




திருக்குறள்:

குறள் 978: 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 
அணியுமாம் தன்னை வியந்து. 

உரை: 

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

பழமொழி :
No effort, no harvest. 

முயற்சி இல்லாமல் விளைச்சல் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அழகே உண்மை .உண்மையே அழகு - கீட்ஸ்

பொது அறிவு : 

01.தாவரங்களின் வளர்ச்சி நிலையை அறிய பயன்படும் கருவியின் பெயர் என்ன? 

   ஆக்ஸனோமீட்டர்-வளர்ச்சிமானி 

                      Auxanometer

02. நமது உடலில் இன்சுலினை சுரக்கும் சுரப்பி  எது?

         கணையம் - Pancreas

English words :

destroy-ruin

devote-dedicate

தமிழ் இலக்கணம்: 

 காலப்பெயர்: ஓர் காலத்தைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: காலை, மாலை, ஆண்டு.

சினைப்பெயர்: ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: கண், கை, இலை, பழம்

அறிவியல் களஞ்சியம் :

 பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

அக்டோபர் 24

உலக இளம்பிள்ளை வாத நாள்

 இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. 


ஐக்கிய நாடுகள் நாள்


1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை

 கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார். 



நீதி :

கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

24.10.2025

⭐தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு- தமிழக அரசு அனுமதி

⭐சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார்- தமிழக அரசு

⭐ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

⭐உக்ரைன் போர் விவகாரம்: 2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதாரம் தடை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம்- ஸ்மிருதி மந்தனா சாதனை.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

Today's Headlines

⭐ Tamilnadu government has approved to provide three free meals every day for sanitation workers .

 ⭐1436 motor pumps and 298 vehicles have been made ready to prevent rainwater from accumulating in Chennai .

⭐Chief Minister M.K. Stalin will open the renovated Tolkappiyam Park for public use today at the cost of Rs. 42.45 crore.

⭐Ukraine war issue: US imposes economic sanctions on 2 Russian oil companies.

 *SPORTS NEWS* 

🏀 Mandhana scored 109 runs in today's match against New Zealand. Smriti Mandhana holds the record for scoring the most centuries in women's ODIs.


23 October 2025

குரங்கு பெடல் சிறார் திரைப்படம் Direct Download Link ATTACHED

குரங்கு பெடல் சிறார் திரைப்படம் Direct Download Link
 . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.2025



திருக்குறள்:

குறள் 975: 

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை யுடைய செயல். 

உரை: 

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

22 October 2025

கன மழை காரணமாக இன்று (23-10-2025) வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

கன மழை காரணமாக இன்று (23-10-2025) வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்


பள்ளிகளுக்கு மட்டும்

1.தருமபுரி


பள்ளி, கல்லூரிகள்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.10.2025





திருக்குறள்: 

குறள் 972: 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

 உரை: 

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

பழமொழி :
A positive thought is the first step to victory. 

நல்ல சிந்தனையே வெற்றியின் முதல் படி ஆகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அறிவை தேடுங்கள். அது நம்மை ஆற்றல் உடையவனாக ஆக்குகிறது. அறிவு, தனிமையில் நமது தோழன்; இன்பத்திற்கு வழிகாட்டி; துன்பத்திலோ ஆதரவாளர் - விநோபா

பொது அறிவு : 

01.மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?

             100 - 120 நாட்கள் 

100-120 days

02. தனிநபர் ஒருவர் கணக்கு தொடங்க இயலாத வங்கி எது? 

          இந்திய ரிசர்வ் வங்கி

Indian Reserve Bank

English words :

Delight-pleasure, 

defend -protect 

தமிழ் இலக்கணம்: 

 பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர் (பண்புப்பெயர்), தொழிற்பெயர் ஆகும்.

அறிவியல் களஞ்சியம் :

 குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

அக்டோபர் 22

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.
நீதிக்கதை

 ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 

அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 

ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 

இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 

நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

22.10.2025


⭐செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு-அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

⭐வட தமிழகத்தை நோக்கி புயல் சின்னம் நகர்கிறது-14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

⭐ இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6,000 டன் காந்தங்களை உற்பத்தி செய்யும் வகையில் ₹7,350 கோடி காந்த உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀IPL (Indian Premier League): ஐபிஎல் 2025 பரீட்சை தற்போது கிளியரான முறையில் நடைபெற்று வருகிறது. பங்கு பெற்ற அணிகள் பல வருடங்களுக்குப் பிறகு வலுவான போட்டிகளை நடத்தி வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சிறந்த வெற்றிகளை பெற்றுள்ளது.

Today's Headlines


⭐Chembarambakkam Lake opened and Warned to people along the banks of Adayaaru river for rescues in advance.

⭐Storm symbol moving towards North Tamilnadu due to heavy rain warning for 14 districts.

⭐ The Indian government is planning to set up ₹7,350 crore magnet manufacturing plants in India to produce about 6,000 tonnes of magnets per year. 

⭐151 metric tonnes of firecracker waste removed in Chennai so far last 3 days.

 *SPORTS NEWS* 

🏀IPL (Indian Premier League): The IPL 2025 exam is currently underway in a clear manner. The participating teams are playing strong matches after many years. The Mumbai Indians team, led by Rohit Sharma, has achieved great victories so far.


JOIN KALVICHUDAR CHANNEL