t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 March 2026

சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு 2026 - பயிற்சி வகுப்பு தேதிகள் அறிவிப்பு

தேர்தல் 2026 - பயிற்சி வகுப்பு தேதிகள் அறிவிப்பு

General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 Training for Polling Personnel Instructions-Communicated- Reg.

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் தற்போது தலைமை தேர்தல் அலுவலர் திருமதி அர்ச்சனா பட்நாயக் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது 






2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு.



2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2026


திருக்குறள்: 

குறள் 573: 

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் 
கண்ணோட்டம் இல்லாத கண். 

விளக்க உரை: 

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

பழமொழி :
Everything has its own worth. 

அதற்கு அதற்குரிய மதிப்பு உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

வன்முறை என்பது மோசமானது. ஆனால், அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானது - சுபாஷ் சந்திர போஸ்

பொது அறிவு : 

1. உலக அளவில் புளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

இந்தியா

2. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்  நாடு எது?

தாய்லாந்து

English words :

Candidate – A person who contests in an election

Constituency – Area where people vote for a candidate

தமிழ் இலக்கணம்: 

எத்தனை, எத்துணை இவைகளின் வேறுபாடு காண்போம்.

 எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்

எ. கா.

 1. எத்தனை நோட்டுகள் வேண்டும்?

2. எத்தனை பழங்கள் விற்பனை ஆயின?

 எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்

எ. கா. 1. எத்துணை பெரிய மலை

2. எத்துணை சிறிய பூச்சி 

   3. எத்துணை ஆண்டு பழமையானது


4. எத்துணை மாதம் ஆகும்?

அறிவியல் களஞ்சியம் :

மனித வயிற்று அமிலம் ரேஸர் பிளேடுகளைக் கரைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD)

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
நீதிக்கதை

 யானையும் தேனீயும்



ஒரு காட்டில் ஒரு தேனீ வசித்து வந்தது. அந்தத் தேனீக்கு தான் மட்டும் தான் இந்த காட்டில் மிகவும் அழகானவன் என்ற கர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு நாள் அந்தக் காட்டில் தேனீ பறந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு யானை வந்து கொண்டு இருந்தது.

அப்பொழுது அந்த தேனீ யானையின் காதின் மீது அமர்ந்து யானையை நலம் விசாரித்துக் கொண்டு யானையே நீ இவ்வளவு குண்டாக இருக்கிறாய் , என்னைப்பார் நான் எவ்வளவு மெலிதாக அழகாக இருக்கிறேன் என்னுடைய இந்த இறக்கைகள் என்னுடைய உடம்பிற்கு அழகினை கொடுக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டது.

அந்த நேரத்தில் தேனீ யானையிடம் கூறியது, ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் உனக்கு நீண்ட தும்பிக்கையை உள்ளது. எனக்கு நீண்ட வாய் உள்ளது .ஆனால் என் வாயினால் நான் பூவில் உள்ள தேனை உறிஞ்சுவேன். உன்னால் அது முடியுமா என்று கேட்டு கேலி செய்தது.

அந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று வீசியது. அந்தக் காற்றின் வேகத்தை யானை தாங்கிக் கொண்டது. ஆனால் தேனீயால் அந்த காற்றினை தாங்க முடியவில்லை. அந்த காற்றினால் அடித்து செல்லப்பட்ட ”தேனீ ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்கள், என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்று கத்திக்கொண்டே சென்றது.

அச்சமயம் யானை தேனீயை காப்பாற்றலாம் என்று பார்க்கும்பொழுது தேனீ கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டது. யானை அதன் கொழுத்த உடலைக் கொண்டு அங்கிருந்து சிறிது வருத்தத்துடன் நகர்ந்து சென்றது.

கருத்து: கர்வம் கூடாது

இன்றைய செய்திகள்

20.03.2026

⭐உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்து உள்ளது.

⭐மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 15 அமெரிக்க நிறுவனங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரானின் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

⭐ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் துபாய் துறைமுகத்தில் சிக்கியுள்ளன. இதனால் சூடானில் சுமார் 4,00,000 நோயாளிகள் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது

Today's Headlines

⭐ Even though crude oil prices are rising in the global market, India’s Ministry of Petroleum has announced that there is currently no plan to increase petrol and diesel prices in the country.

⭐ Iran’s security force (IRGC) has warned 15 American companies operating in Middle Eastern countries to immediately evacuate their employees.

⭐ Due to the Iran–Israel conflict, essential medicines worth about 600,000 dollars are stuck at the Dubai port. As a result, around 400,000 patients in Sudan are suffering without alternative arrangements.

*SPORTS NEWS*

🏀 The IPL 2026 cricket festival is set to begin on the 28th. Chennai Super Kings will face the defending champions, Royal Challengers Bangalore, in the opening match.


19 March 2026

தேர்தல் வாக்குப்பணிக்கான கையேடு - 2026

ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

 

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கப்பட்டன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

18 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026

திருக்குறள்: 

குறள் 571: 

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு. 

விளக்க உரை: 

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

பழமொழி :
When fortune smiles embrace her. 

அதிர்ஷ்டம் கதவை தட்டும் போது அனைத்துக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் பொழுது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான் - டாக்டர் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?


தேக்கு மரம் -Teakwood

02.இந்தியாவில் முந்திரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா -Maharastra
English words :

opportunity -

a chance to do something that you would like to do, செய்ய விரும்பும் ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு

opponent -a person who disagrees with somebody's actions, எதிராளி

தமிழ் இலக்கணம்: 

அன்று என்பது ஒருமைக்கும் அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

எ. கா. 1. இது பழம் அன்று

இவை பழங்கள் அல்ல.

2. இது காகம் அன்று. 


        இவை காகங்கள் அல்ல

அறிவியல் களஞ்சியம் :

தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது; 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கூட உண்ணக்கூடிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 18

ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (பி. மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
நீதிக்கதை

 பொய்

நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் பாண்டியனும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டியன் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா

“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”

“ஆமாம்”

“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”

“ஆமாம்”

“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”

இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். “ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்.

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டியன் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டியன் வசதியானவர் என்று சொல்ல முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.

“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டியன். “நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டியன் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

“பாண்டியன் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு.

பாண்டியனுக்குப் பெருமையாக இருந்தது.

அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இன்றைய செய்திகள்

18.03.2026

⭐நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்... 11000 கி.மீ. நீள சோலார் பெல்ட் அமைக்கும் ஜப்பானிய நிறுவனம்!
உலகிற்கே தடையற்ற மின்சாரம் வழங்க நிலவைச் சுற்றி 11,000 கி.மீ நீளத்திற்கு சோலார் வளையத்தை உருவாக்கும் ஜப்பானின் பிரம்மாண்ட 'லூனா ரிங்' திட்டம்.

⭐மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போர், இந்தியாவின் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என (GJEPC) எச்சரித்துள்ளது.

⭐ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், வரும் ஐபிஎல் தொடரில் அந்த கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளார்.

Today's Headlines

⭐ A Japanese company has proposed a massive “Luna Ring” project to generate 13,000 terawatts of electricity from the Moon. The plan involves building an 11,000 km-long solar belt around the Moon to provide uninterrupted power to the entire world.

⭐ The ongoing Israel–Iran conflict in the Middle East is expected to significantly impact India’s $2 billion gem and jewellery exports, according to the Gem & Jewellery Export Promotion Council (GJEPC).

⭐ The United States Commerce Secretary Scott Bessent has stated that Iranian oil tankers are being allowed to pass through the Strait of Hormuz.

*SPORTS NEWS*

🏀 In the IPL tournament, Virat Kohli is set to return to play for Royal Challengers Bangalore. After playing a key role in helping the team win their first-ever title last season, he will aim to defend the championship in the upcoming IPL season.


17 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2026


திருக்குறள்: 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து.            

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :
Hear more,but talk less.       

அதிகமாக கேள்,குறைவாக பேசு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

வெற்றியோ, தோல்வியோ எது வரினும் நம் கடமையை செய்வோம். பிறர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் - அண்ணல் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.உலகின் மிக அதிகமான எரிமலைகள்எந்த பெருங்கடலில்  உள்ளது?

பசிபிக் பெருங்கடல் 

Pacific Ocean

02.மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரிகோர் மெண்டல் -Gregor Mendel

English words :

Election-

The process where people vote to choose their representatives or leaders.

Candidate-

A person who contests in an election to win a position.

தமிழ் இலக்கணம்: 

முன்னாள் அமைச்சர்

முந்நாள் அமைச்சர் 

முன்னால் அமைச்சர் 

இவற்றில் எது சரி ?

எல்லாமே சரி தான். நாம் உபயோகப் படுத்தும் இடத்தைப் பொறுத்து அமையும்.

முன்னாள் அமைச்சர் என்றால் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முந்நாள் அமைச்சர் என்றால் மூன்று நாட்கள் மட்டும் அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முன்னால் அமைச்சர் என்றால் நமக்கு முன்னால் அமைச்சர் இருக்கிறார் என்று பொருள்.


ஆக மூன்று வார்த்தைகளும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.
நீதிக்கதை

ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான். மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா. “நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா. “நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார். மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான். வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான். பாடங்களில் அவன் மனம் கவனம் செல்லவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார். ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், “உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார். முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலெக்டரிடம் கேட்டான். “ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்டராக வர ஆசைப்படுவது பேராசையா?

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலெக்டர். “நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”. “உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலெக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலெக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

இன்றைய செய்திகள்


⭐அசாம் & புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 9ம்தேதி நடைபெறவுள்ளது.


⭐ எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி 2025- விருது அறிவிப்பு


⭐ போதுமான அளவு பெட்ரோல் எரிபொருள் கையிருப்பு உள்ளது என மத்திய  பெட்ரோலியத் துறை தகவல் 


 *விளையாட்டு செய்திகள்* 

🏀நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்திடம் தென்னாப்பிரிக்கா  வெற்றி பெற்றது.

Today's Headlines

⭐ Voting for the Assam & Puducherry Legislative Assembly elections will be held on April 9.

⭐ Writer Tamil Selvan has been announced as the recipient of the Sahitya Akademi Award 2025.

⭐ The Union Petroleum Ministry has stated that there is sufficient stock of petrol fuel available.

Sports News

🏀 The South African team, which is touring New Zealand, is playing a 5-match T20 series. In the first T20 match, South Africa defeated New Zealand.

JOIN KALVICHUDAR CHANNEL