t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 January 2026

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?செல்வ.ரஞ்சித் குமார்

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?

செல்வ.ரஞ்சித் குமார்
நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.


`Total Gross Income :`

Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.

_(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)_


`Net Taxable Income :`

இந்த Total Gross Incomeல் இருந்து,

1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி
2. Standard Deduction Rs.75,000/- 

உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


`Tax Slab :`

Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.

Rs.4,00,000 வரை                    - வரியில்லை
Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%
Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%
Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%
Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%
Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%
Rs.24,00,000க்கு மேல்           - 30%


`Rebate :`

Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.

அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,
முதல் 4,00,000 × 0% = 0
2வது  4,00,000 × 5% = 20,000
3வது  4,00,000 × 10% = 40,000
என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.


`Marginal Relief :`

Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால்  Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.

இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.

இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.

இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,
Rs.4,00,000 =   0% = 0
Rs.4,00,000 =   5% = 20,000
Rs.4,00,000 = 10% = 40,000
Rs.70,590.   = 15% = 10,589
மொத்த வரி          = 70,589

எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.


`Marginal Relief Formula :`

12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.

Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income

இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,

Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500

12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000

ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500

ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,
= Actual Tax - Marginal Relief
= 61,500 - 51,500
= Rs.10,000/-



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2026


திருக்குறள்: 

குறள் 291: 

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.         
விளக்க உரை: 

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பழமொழி :
Today's effort is tomorrow's success.  

இன்றைய முயற்சியே  நாளைய வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

உங்களை சிறப்பாக செயல்பட வைக்கவே பிரச்சினைகள் ஒரு வாய்ப்பாக வருகிறது.

     டியூக் எலிங்டன்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட மலர் இனம் எது?

ரஃப்லேசியா அர்னால்டி 

            Rafflesia  arnoldii

02.இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு கடல் பாலம் எது?

புதிய பாம்பன் பாலம் -

ராமேஸ்வரம், தமிழ்நாடு 

New Pamban Bridge -Rameshwaram Tamil Nadu.

English words :

shriveled-shrinked due to age

 fatigue-weariness

தமிழ் இலக்கணம்: 

 இன்று செய்வதற்கான வினை மரபுச் சொற்களை பார்ப்போம்
1. மாறன் சிலை செய்தான் – தவறு
    மாறன் சிலை வடித்தான்
2.குமரன் பானை செய்தார் –தவறு
குமரன் பானை வனைந்தான் 
3.வீரன் போர் செய்தான் –வீரன் போர் புரிந்தான்
4.மற்றவர்களுக்கு தீங்கு செய்யாதே – தவறு 
மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதே

அறிவியல் களஞ்சியம் :

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

ஜனவரி 20

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்
நீதிக்கதை

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்



ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 

நீதி :

எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது 

இன்றைய செய்திகள்

20.01.2026


⭐குடியரசு தின விழா - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார். குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

⭐தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு. நேற்றைய நிலவரப்படி 13.03 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
பிப்ரவரி 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர்.

⭐ஸ்பெயினில் 2 அதிவிரைவு ரெயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு. மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐Regarding Republic Day Celebrations - 1 lakh policemen on security duty across Tamilnadu. The respective state governments are making arrangements for the Republic Day celebrations.

⭐Time is extended  to add names to voter list in Tamilnadu.  As of yesterday, 13.03 lakh people have applied to include their names. The final voter list will be published on February 17, Officers of Election  Commission of India  said.

⭐ 21 killed in Spain high-speed train collision. Train carrying 300 passengers derails between Malaga and Madrid.

 *SPORTS NEWS* 

🏀T20 series against Pakistan: Australia team announced under Marsh. Pakistan and Australia teams will compete in a 3-match T20 series. The T20 World Cup is scheduled to be held next month.


19 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

திருக்குறள்: 

குறள் 241: 
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணு முள.                   

விளக்க உரை: 

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்

பழமொழி :
Good things take time.        

நல்லவை நடக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி : 

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

பொது அறிவு : 

01.இந்திய தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?

  சேவைத் துறை -Tertiary Sector

2. உலக அளவில் தொழிற்புரட்சி முதல் முதலில் நடைபெற்ற நாடு எது?

     இங்கிலாந்து- England 

English words :

swoop-dive

 bifurcated-split

தமிழ் இலக்கணம்:


போடு, செய் , எடு – இவை நம் வினை மரபுச் சொற்களை எவ்வாறு மங்கி அழிந்து போகச் செய்கிறது என்பதைக் குறித்து இன்று காண்போம்.
*போடு*
1.பசு கன்று போட்டது –தவறு
பசு கன்று ஈன்றது 
2.வீட்டின் மேல் கூரை போட்டனர் – தவறு 
வீட்டின் மேல் கூரை வேய்ந்தனர் 
3.நீதி மன்றத்தில் வழக்கு போட்டார் –தவறு 
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
4.புதிதாக சாலை போட்டனர் – தவறு 
புதிதாக சாலை அமைத்தனர்
இன்று சில சரியான வினை முற்றுச் சொற்களை பார்த்தோம். நாளையும் தொடரும்
அறிவியல் களஞ்சியம் :

நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.

ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.
நீதிக்கதை

 கரடியும் இரண்டு நண்பர்களும்



ஒரு ஊரில் இரண்டு இணை பிரியாத நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராகவன் மற்றொருவன் சுந்தரன். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராகவன், சுந்தரனிடம் நீ எதைப்பற்றியும் பயபடாமல் என்னுடன் வா. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறினான். 

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கரடி ஒன்றின் உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதுமே இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. சில வினாடிகள் ஓடிய பிறகு ராகவன் ஒரு மரம் இருப்பதை கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராகவன் ஏறி அமர்ந்து கொண்டான். 

சுந்தரனுக்கோ மரம் ஏறத் தெரியாது என்று ராகவன் நன்கு அறிந்திருந்தும் அவனைக் கீழே விட்டு விட்டுத் தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற சுய நலத்தோடு ராகவன் நடந்து கொண்டான். சுந்தரனுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் இறந்தவனைப்போல் மூச்சை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான். 

அப்போது அங்கு வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. சுந்தரன் இறந்துவிட்டான் என்று நினைத்து அந்த கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. சுந்தரனின் காதருகே சென்று கரடி முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராகவன் கரடி சுந்தரனிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து கரடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. 

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராகவன், கீழே இறங்கி வந்து சுந்தரனை எழுப்பினான். சுந்தரா எழுந்திரி நாம் தப்பி விட்டோம். அந்த கரடி சென்று விட்டது என்று கூறிச் சுந்தரனை எழுப்பினான். சுந்தரனும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். 

ராகவன், சுந்தரனிடம், கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது? என்று கேட்டான். அதற்குப் சுந்தரன், ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது என்றான். சுந்தரனின் பதிலைக் கேட்டு, ராகவன் தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சுந்தரனோ இனி மேல் நம் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறி விட்டுத் தனியே நடந்து சென்றான். 

நீதி :

ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்.

இன்றைய செய்திகள்

19.01.2026

⭐வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை செய்யும் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அனைத்து வாகனத்திலும் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐2024-ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

⭐தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் வகையில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 9 புதிய அம்ரித் பாரத் ரயில்களின் சேவை  தொடங்கின.

⭐242 சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்ட இணையதளங்களின் இணைப்புகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய ஓபன் பேட்மிண்டன்:  
தென் கொரிய வீராங்கனை
அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி வெற்றி. உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்.

Today's Headlines

⭐The central government is planning to make it mandatory to install Vehicle-to-Vehicle (V2V) communication technology in all vehicles, which will immediately alert you when vehicles come too close.

⭐Tamilnadu has ranked 2nd in the NITI Aayog's export ranking list for the year 2024.

⭐9 new Amrit Bharat trains, including three new Amrit Bharat trains connecting Tamilnadu and West Bengal, have started service.

⭐The Indian government has blocked links to 242 illegal betting and gambling websites.

 *SPORTS NEWS* 

🏀Indian Open Badminton: South Korean player Ahn Se-young has already won the championship title in 2023 and 2025. Now she has won the championship title for the 3rd time.

🏀 In Australian Open Tennis  series, Suvarev and  Jasmine Paolini won in first round   Alexander Suvarev is ranked 3rd in the world.


13 January 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2026


திருக்குறள்: 

குறள் 136: 
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.                 
உரை: 

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

பழமொழி :
Actions speak louder than words.      

சொற்களை விட செயல்களே அதிகமாக பேசும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.

 2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி : 

இயற்கை ,காலம், பொறுமை இவை மூன்றும் பெரும் மருத்துவர்கள். பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் -ஹெச் ஜி பான்

பொது அறிவு : 

01.சர்வதேச அளவில்,  ""சட்டத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?

    ஜான் ஆஸ்டின் (John Austin) 

02. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

       மார்ச் 15- March 15

English words :

Devour -consume

Whet-sharpen

தமிழ் இலக்கணம்: 

 சென்னைப்பட்டினம் 
சென்னைப்பட்டணம் 
எது சரி?
பட்டினம் என்பது கடற்கரை ஒட்டிய நகரத்தை குறிக்கும் 
பட்டணம் என்பது பெரிய நகரத்தை குறிக்கும்.
எனவே இரண்டு பெயர்களும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகாடன் அணு குண்டுகளை ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கு கோடான கோடி நன்றிகள்!

நீதிக்கதை

 எறும்பும் வெட்டுக்கிளியும்



வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத்தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது. 

அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் என்றது. வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது. 

நாட்கள் கடந்தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அதனிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு. 

பிறகு எறும்பு வெட்டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியுள்ளது. எனவே இனிமேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்து வைத்துக்கொள் என்றது. எறும்பானது கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தியது. 

நீதி :

எதிர்காலத்திற்குத் தேவையானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.01.2026

⭐45 சவரன் நகைகள் ஒப்படைப்பு.தூய்மை பணியாளர் பத்மாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!
நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

⭐16செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
* 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

⭐சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
* முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.

Today's Headlines

⭐45 sovereigns of jewellery handed over.   Chief Minister M.K. Stalin awards Rs. 1 lakh to the sanitation worker Padma.  The police enquired about the identity of the jewellery owner and handed it over .

⭐PSLV C-62 rocket with 16 satellites launched. A small test device called 'Kestrel Initial Demonstrator' is also attached.

⭐Chief Minister launches double decker bus services in Chennai. The tourism department has decided to launch double decker bus services to major tourist destinations.

 *SPORTS NEWS* 

🏀 Big Bash League is a domestic T20 series held in Australia. The 15th season of this series is underway. In this, Melbourne Renegades and Sydney Thunder clashed.


12 January 2026

போகிப் பண்டிகை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

போகிப் பண்டிகை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

JOIN KALVICHUDAR CHANNEL