t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:467

குறள்:

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்:

செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.  

பழமொழி :
Penny wise, pound foolish.

சிறியதை காக்கப் பெரியதை இழக்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை பொழியும் போது பூமி சிரிக்கிறது.

Thought for the Day :

Save every drop of rain, and you save the future.

பொது அறிவு : 

1. பறவைகள் பற்றி படிக்கும் படிப்பு எது? 

ஆர்னித்தாலஜி. 

2.இந்தியாவின் பறவை மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்? 

டாக்டர். சலீம் அலி.

English words :

Insightful – Understands deeply, ஆழ்ந்த புரிதல் உடையவர். 

 versatile - Multi -Skilled.பல்திறமைசாலி.

புவியியலும் சுற்றுசூழலும் :

சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்

தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணுதல்

மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை பராமரித்தல்

அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகும்



NMMS :

SAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ________________________ முட்டைகள் இடும் . 

 (1) 600. 

 (2) 500. 

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர்



இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார்.  இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
நீதிக்கதை

 ராணுவ வீரரின் பார்வையில், தாய்நாட்டுப் பற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை :

"என் உயிரை விட உயர்ந்தது என் தாய்நாடு"

நான் அரவிந்த். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன். பல மாதங்களாக என் குடும்பத்தைப் பார்க்காமல், நாட்டின் எல்லையில் காவல் காத்துக் கொண்டிருந்தேன். கடும் பனியிலும், மழையிலும், வெயிலிலும் எங்கள் கடமையை ஒருநாளும் தவறவிடவில்லை .

ஒருநாள் இரவு, எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவு தெரிந்தது.

உடனே நானும் என் நண்பர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். எங்கள் விழிப்புணர்வால் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது.

அன்று என் தாயின் பிறந்தநாள். அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பே என் முதல் கடமை என்பதால், என் ஆசையை ஒதுக்கிவைத்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு விடுமுறையில் வீட்டிற்குச் சென்றேன். என் தாய் என்னைப் பார்த்து, "மகனே , எங்களை விட இந்த நாட்டை நீ அதிகமாக நேசிக்கிறாய் அல்லவா?" என்று கேட்டார்.

நான் புன்னகையுடன், "அம்மா, நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். ஆனால் இந்தத் தாய்நாடுதான் அந்த உயிருக்கு அர்த்தம் கொடுத்தது. நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நம் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்," என்றேன். என் தாய் பெருமையுடன் என் தோளில் கை வைத்து, "உன்னைப் போன்ற வீரர்கள் இருப்பதால்தான் நாங்கள் அமைதியாக வாழ்கிறோம்," என்றார்.

நீதி:

தாய்நாட்டைப் நேசிப்பதும், அதன் பாதுகாப்பிற்காகத் தன் கடமையை நேர்மையாகச் செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் உயர்ந்த பொறுப்பாகும்.

இன்றைய செய்திகள்

07.08.2026

🗒️கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

🗒️'AC' பெட்டிகளில், பயணிக்கும் .R.A.C, பயணிகளுக்கும்  போர்வை, கம்பளி வழங்க  ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

🗒️11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவ படகு மீட்பு நடவடிக்கையில்  இலங்கை கடற்படையும் இணைந்து செயல்பட்டுள்ளது.
 
 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கிராண்ட் செஸ் தொடர்: 
நெதர்லாந்து வீரர் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் உடன் மோதியதில் பிரக்ஞானந்தா முன்னிலையில் உள்ளார்.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has written a letter to the Prime Minister, requesting action to implement the Godavari–Cauvery–Gundar river linking project.

🗒️ The Railway Board has instructed that blankets and bed sheets should also be provided to RAC passengers travelling in AC coaches.

🗒️ The Sri Lankan Navy also joined the rescue operation after an Indian fishing boat carrying 11 fishermen met with an accident.

🏀 Sports News

🗒️ Grand Chess Tournament: Praggnanandhaa is in the lead after his match against Dutch player Jorden van Foreest.


6 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -06.08.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:466

குறள்:

 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

பழமொழி :
Learn ever from an enemy.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை இல்லையேல் உயிரில்லை; நீர் இல்லையேல் உலகமில்லை.

Thought for the Day :

Rain nourishes the Earth just as kindness nourishes the heart.

பொது அறிவு : 

1. ஒன்பது நிறங்களை கொண்ட பறவை எது? 

இந்தியன் பிட்டா. 

2. மிக நீண்ட தூரம் பறக்கும் பறவை எது? 

ஆர்க்டிக் ஆலா.

English words :

Innovative – Brings new ideas, புதுமையானவர்.

Persistent – Never gives up, விடாமுயற்சியாளர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம பஞ்சாயத்து கிராமத்தின் அன்றாட நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது.
கிராம பஞ்சாயத்தின் பணிகள்

குடிநீர் வசதி ஏற்படுத்துதல்

தெரு விளக்குகளை பராமரித்தல்...

NMMS :

MAT 

ஹைட்ரோஃபோபியா என்றால் ______________________ 

(1) நீரைக் கண்டு பயப்படுவது 

(2) ஒலியைக் கேட்டு பயப்படுவது 

(3) பசியின்மை 

(4) தோல் தடிப்பு 

விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது

ஆகஸ்ட் 06

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

1928 -ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.
நீதிக்கதை

  "நேர்மையான அணிலும் பொற்கொட்டையும்"

ஒரு பெரிய காட்டில் ஒரு சிறிய அணில் வாழ்ந்து வந்தது. அது எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டது.

ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, ஒரு மரத்தின் அடியில் பொன்னிறத்தில் ஜொலிக்கும் ஒரு சிறிய பெட்டியைக் கண்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதில் பல பொற்கொட்டைகள் இருந்தன.

அப்போது காகம் ஒன்று வந்து,

"இதை யாரும் பார்க்கவில்லை. நீயே வைத்துக்கொள்!" என்றது.

ஆனால் அணில்,

"இது என்னுடையது அல்ல. உரிமையாளரிடம் சேர்ப்பதே சரி." என்றது.

சிறிது நேரத்தில் வயதான ஒரு ஆமை பதற்றத்துடன் வந்தது.

"என் பொற்கொட்டைகள் இருந்த பெட்டியை யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்டது.

அணில் உடனே அந்தப் பெட்டியை ஆமைக்கு கொடுத்தது.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஆமை,

"உன் நேர்மை எனக்கு என் பொருளைவிட அதிக மகிழ்ச்சியைத் தந்தது. உன்னைப் போன்றவர்கள் உலகிற்கு ஒரு ஆசீர்வாதம்" என்றது.

அந்த நாளிலிருந்து காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் அணிலை மதித்து, அதன் நேர்மையைப் பின்பற்றத் தொடங்கின.

நீதி: நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும். பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லொழுக்கம்

இன்றைய செய்திகள்

06.08.2026

🗒️முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள்  காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களைப் பாராட்டி ஊக்கத்தொகை 
வழங்கினார்.

🗒️ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி  நிலவின் மேற்பரப்பில் மோதியதில்  நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 அடி அகலமும் 12 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🗒️சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தின் ஆய்வகத்தில் நெல் விளைவித்து சாதனை படைத்துள்ளது.

🗒️சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்  'செக்ரட்டரி பறவை' இனத்தை 'அழிந்து வரும் இனம்' என அறிவித்துள்ள நிலையில் பிரிட்டன் விலங்கியல் பூங்காவில் 5 குஞ்சுகள் பொரித்து சாதனை செய்துள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை நடத்த  ரூ.10 கோடி நிதியினை தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும், என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay congratulated the Tamil Nadu athletes who won medals in the Commonwealth Games and awarded them cash rewards as encouragement.

🗒️ The upper part of SpaceX’s Falcon 9 rocket is expected to have crashed on the Moon’s surface. It may have created a crater about 60 feet wide and 12 feet deep, according to reports.

🗒️ China has achieved a new milestone by successfully growing rice in the laboratory of its own space station.

🗒️ While the International Union for Conservation of Nature (IUCN) has classified the 'Secretary Bird' as an endangered species, a British zoo has achieved a milestone with the hatching of five chicks.

🏀 Sports News

🏀 Chief Minister Vijay announced that the Tamil Nadu Government will allocate ₹10 crore to conduct the Chennai Open Women’s Tennis Tournament.


5 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -05.08.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:465

குறள்:

 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

பொருள்:

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

பழமொழி :
Laugh away your fears.

இடுக் கண் வருங்கால் நகுக.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை இயற்கையின் வரம்; அதை பாதுகாப்பது மனிதனின் கடமை.

Thought for the Day :

When rain falls, hope rises.

பொது அறிவு : 

1. தமிழ்நாடு அரசின் மாநில குறிக்கோள் எது? 

"வாய்மையே வெல்லும்." 

2. "சத்யமேவ ஜெயதே " என்பதை தமிழில் "வாய்மையே வெல்லும்" என மாற்றியவர் யார்? 

அறிஞர் அண்ணா.

English words :

Articulate – Speaks clearly, தெளிவாக பேசுபவர்.

Meticulous – Very careful, மிகுந்த கவனமானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்தியாவின் காலநிலை

பெரும்பாலும் பருவமழைக் காலநிலை காணப்படுகிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் நாட்டிற்கு மழை வழங்குகின்றன.

NMMS :

SAT 

_________________ என்னும் பாசி, விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்-டை-ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது. 

(1) குளோரெல்லா ஃபைரினாய்டோசா 

(2) அனபீனா 

(3) லேமினேரியா

 (4) ஜெலீடியம் 

விடை: (1) குளோரெல்லா ஃபைரினாய்டோசா

ஆகஸ்ட் 05

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 
நீதிக்கதை

 "மேகத்திற்குப் பின்னால் சூரியன்"

ஒரு கிராமத்தில் அகில் என்ற 12ஆம் வகுப்பு மாணவன் வாழ்ந்து வந்தான். படிப்பில் நல்ல திறமை இருந்தாலும், பொதுத் தேர்வு நெருங்கியபோது அவனுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டது. "என்னால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா?", "நான் தோல்வி அடைந்தால் என்ன செய்வேன்?" என்ற எண்ணங்கள் அவனை தினமும் வாட்டின.

முன்பு நண்பர்களுடன் சிரித்துப் பேசும் அகில், இப்போது தனியாகவே இருக்கத் தொடங்கினான். பாடப்புத்தகத்தைத் திறந்தாலே பயம் வந்தது. "என் வாழ்க்கை முடிந்துவிட்டது" என்று அவன் நினைக்க ஆரம்பித்தான்.

ஒருநாள் அவனுடைய ஆசிரியர் இதைக் கவனித்தார். அகிலை அழைத்து, ஒரு சிறிய செடியைக் காட்டி, "இந்தச் செடி இரண்டு நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிட்டது. அதனால் இது இனி வளராது என்று சொல்வாயா?" என்று கேட்டார்.

அகில், "இல்லை ஐயா. மீண்டும் தண்ணீர் ஊற்றி பராமரித்தால் அது நன்றாக வளரும்," என்றான்.

அதற்கு ஆசிரியர் சிரித்தபடி, "அதேபோல மனமும் தான். சில நாட்கள் மனஅழுத்தம் வந்ததால் வாழ்க்கை முடிந்துவிடாது. உதவி கேள், ஓய்வு எடு, நம்பிக்கையை விடாதே. மேகங்கள் சூரியனை மறைக்கலாம்; ஆனால் சூரியனை அழிக்க முடியாது," என்றார்.

அந்த வார்த்தைகள் அகிலுக்கு புதிய தைரியம் அளித்தன. அவன் நண்பர்களுடன் பேசத் தொடங்கினான், ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டான், தினமும் சிறிது நேரம் ஓய்வும் எடுத்தான். மெதுவாக அவன் மனஅழுத்தம் குறைந்தது. தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றான்.

நீதி:உயர்நிலை வகுப்புகளில் மனஅழுத்தம் வருவது இயல்பானது. ஆனால் அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு தனியாக போராடாமல், பெற்றோர், ஆசிரியர் அல்லது நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து உதவி கேட்டால், எந்தச் சிரமத்தையும் கடக்க முடியும். இருண்ட இரவுக்குப் பிறகு விடியல் வருவது போல, கஷ்டத்திற்குப் பிறகு நிச்சயம் நல்ல காலம் வரும்.

இன்றைய செய்திகள்

05.08.2026

🗒️முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் நடைபெற்றது.

🗒️இந்திய ரெயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி டன் சரக்குகளை கையாண்டு  சாதனை புரிந்துள்ளது.

🗒️ உலகின் மிக இளம் வயது பேராசிரியர் என்ற சாதனையை அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நாதன் தாமஸ், (18 வயது) படைத்துள்ளார். அவர் 306 ஆண்டு கால சாதனையை முறியடித்து பலரது கவனத்தை பெற்றார்.

 விளையாட்டுச் செய்திகள்

🏀 சிட்டி ஓபன் டென்னிஸ்: பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அலெக்சாண்டர் ஈலா சாம்பியன் பட்டம் வென்றார். 

🏀 கடைசி டி20 கிரிக்கெட்:  இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி.

Today's Headlines

🗒️ A State Council meeting on the development plans for Scheduled Castes and Scheduled Tribes was held under the leadership of Chief Minister Vijay.

🗒️ Indian Railways handled a record 140 million tonnes of goods in July.

🗒️ Nathan Thomas, an 18-year-old from Florida, USA, has become the youngest professor. He broke a 306-year-old record and attracted worldwide attention.

🏀 Sports News

🏀 City Open Tennis: Alexander Eala played very well in an exciting final match and won the championship.

🏀 Last T20 Cricket Match: Pakistan defeated Sri Lanka and won the match.


4 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:464

குறள்:

 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். 

பொருள்:

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.  

பழமொழி :
Lamp at home and a lion at chase

பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழைத்துளி சிறியது; ஆனால் அதன் பலன் அளவற்றது.

Thought for the Day :

Rain is nature's blessing to the Earth.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டு மாநில அரசின் இலச்சு ( Tamilnadu state emblem) எது?

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம். 

2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்துடன் கூடிய தமிழக அரசின் மாநில சின்னத்தை வடிவமைத்தவர் யார்? 

R. கிருஷ்ணா ராவ்.

English words :

Prudent – Acts wisely, விவேகமானவர்.

Compassionate – Shows kindness, இரக்கமுள்ளவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

முக்கிய நதிகள்

கங்கை

யமுனை

பிரம்மபுத்திரா

கோதாவரி

கிருஷ்ணா

காவிரி

நர்மதா

தபதி

NMMS :


MAT 

மகரந்தச் சேர்க்கை அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு 

 (1) ஆப்பிள்

 (2) பூசணி

 (3) தக்காளி

 (4) பிளம்ஸ் 

 விடை: (3) தக்காளி

ஆகஸ்ட் 04

பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்

பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
நீதிக்கதை

"புதிய யோசனையின் வெ ற்றி" ஒரு கிராமத்தில் சுதன் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் மற்றவர்கள் செய்வதையே செய்து வந்தான். ஆனால் அவனுடை ய தோழி ஸ்மிதா, "புதியதாக யோசித்தால்தான் புதிய வெற்றிகள் கிடைக்கும்" என்று நம்பினாள்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், "வீட்டில் பயன்படும் ஒரு புதிய கருவியைக்  உருவாக்குங்கள்" என்று கூறினார்.

பல மாணவர்கள் ஏற்கனவே இருந்த பொருட்களைப்  போவே செய்து வந்தனர். ஆனால் ஸ்மிதா மட்டும், மழை நீரை சேமித்து தாவரங்களுக்கு தானாகவே தண்ணீரை பாய்ச்சும் ஒரு எளிய கருவியை உருவாக்கினாள்.

அதைப் பற்றி புத்தகங்கள் படித்தும், இணையத்தில் தெரிந்துக்கண்டும், ஆசிரியர்களிடம் கேட்டும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டாள்.

அவளது புதிய சிந்தனையும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. போட்டியில் முதல் பரிசையும் பெற்றாள்.

அப்போது ஆசிரியர் கூறினார்: "புதிய விஷயங்களைக் கற்றறிந்து, புதுமையாக யோசிப்பவர்கள்தான் நாளைய உலகை மாற்றுபவர்கள்."

நீதி:

புதுமையாக யோசித்து, புதிய விஷயங்களைக் கற்றறிந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவே முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழிவகுக்கும். 

இன்றைய செய்திகள்

04.08.2026

🗒️காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்துகளை பகிர்ந்தார்.

🗒️ இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடும் விதமாக புதிய “மெலோடி” மிட்டாயை அறிமுகம் செய்த பார்லே நிருவனம்.

🗒️ராணுவத்தில் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் - சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀2026 காமன்வெல்த் விளையாட்டு நிறைவு: 2030 போட்டிகளை நடத்தும் இந்தியா... கொடி ஒப்படைப்பு
2030 காமன்வெல்த் போட்டிகள் குஜராத் 
அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளன...

Today's Headlines

🗒️ President Droupadi Murmu congratulated the players who won medals in the Commonwealth Games.

🗒️ Parle company introduced a new candy called “Melody” to celebrate the friendship between India and Italy.

🗒️ Chinese President Xi Jinping ordered the military to increase the use of Artificial Intelligence (AI).

🏀 Sports News

🏀 The 2026 Commonwealth Games have ended. India will host the 2030 Commonwealth Games. The flag was handed over to India.

🏟️ The 2030 Commonwealth Games will be held in Ahmedabad, Gujarat.



2 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2026



திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:463

குறள்:

 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பொருள்:

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.  

பழமொழி :
Knowledge is power.

அறிவே ஆற்றல்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை பெய்தால் மண் செழிக்கும்; நல்ல எண்ணம் இருந்தால் வாழ்க்கை செழிக்கும்.

Thought for the Day :

Every raindrop is a promise of a greener tomorrow.

பொது அறிவு : 

1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

 ஜுலை 18. 

2. தமிழ்நாட்டின் மாநில மீன் எது? 

அயிரை மீன்.

English words :

Resilient – Recovers quickly, மீண்டு எழுபவர்.

Diligent – Works hard, விடாமுயற்சியாளர்

புவியியலும் சுற்றுசூழலும் :

இமயமலையின் சிறப்புகள்

உலகின் மிக உயரமான மலைத்தொடர்.

இந்தியாவை வடக்கிலிருந்து பாதுகாக்கிறது.

பல முக்கிய நதிகள் இங்கிருந்து தோன்றுகின்றன.

இந்தியாவின் காலநிலையைச் சீராக்க உதவுகிறது

NMMS :

SAT 

___________________ என்ற சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைத்துக்கொள்கிறது.

 (1) நெமடோடா

 (2) பிளாஸ்மோடெஸ்மாட்டா

 (3) எக்கைனோடெர்மேட்டா

 (4) சைடோசால் 

 விடை: (2)பிளாஸ்மோடெஸ்மாட்டா

நீதிக்கதை

 வெள்ளத்தில் உயிர் காத்த வரீர்கள்

தொடர்ந்து பெய்த கனமழையால் நகரம் ஒன்றின் தாழ்வான பகுதி முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளிலேயே சிக்கிக்கொண்டனர். பள்ளி, தெருக்கள், வயல்கள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருந்தது.

அந்தச் சமயத்தில், அந்நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலரும்,இளைஞர் குழுவினரும் தன்னார்வமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.படகுகளின் உதவியுடன் வீடுவீடாகச் சென்று, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு வீட்டின் மாடியில் ஒரு பாட்டியும், இரண்டு சிறிய குழந்தைகளும் உதவிக்காக காத்திருந்தனர். அவர்களைப் பார்த்த இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் படகை செலுத்திச் சென்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட மக்கள் நன்றியுடன் கண்ணீர் மல்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரும் அவர்களின் மனிதநேயச் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அன்றைய தினம் அந்தப் பகுதி மக்கள் ஒரு உண்மையை உணர்ந்தனர். ஆபத்து நேரத்தில் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களே உண்மையான வீரர்கள் என்பதை அனைவரும் புரிந்துக்கொண்டனர்.

நீதி:

ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது உயர்ந்த மனிதநேயப் பணியாகும்.

இன்றைய செய்திகள்

03.08.2026

🗒️காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக புதிய வழக்கு தொடர்வது  சார்பாக உச்சநீதி மன்றத்தை நாட தமிழக அரசு முடிவு.

🗒️ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, 'லோகமான்ய திலகர்' தேசிய விருது அறிவிப்பு.

🗒️நீட்' முதுநிலை தேர்வு, இனி ஒரே 'ஷிப்ட்'டில் நடத்தப்படும்; மாணவர்கள் நலன் கருதி தேர்வுக்கான வினாக்களும் 200லிருந்து 180 ஆக குறைக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀காமன்வெல்த் போட்டி: அங்குஷ் பங்கல் அசத்தல்... குத்துச் சண்டையில் 7 தங்கம் குவித்த இந்தியா.

🏀காமன்வெல்த் போட்டியில் இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

🏀தைபே ஓபன் பேட்மிண்டன்:
 வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதி இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

📰The Tamil Nadu government has decided to approach the Supreme Court to file a new case regarding the sharing of Cauvery river water.

📰National Security Adviser Ajit Doval has been announced as the winner of the Lokmanya Tilak National Award.

📰The NEET-PG exam will now be conducted in a single shift. For the benefit of students, the number of questions has also been reduced from 200 to 180, the Central Government said.

🏅 Sports News

🏀Commonwealth Games: India performed very well in boxing and won 7 gold medals. Ankush Panghal also gave an impressive performance.

🏀India is in 4th place in the Commonwealth Games medal table with 39 medals.

🏀Taipei Open Badminton: India's Tanvi Sharma defeated Vietnam's Nguyen Thu Linh and won the championship title.


TAPS பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

TAPS 
1.1.26 முதல் CPS retirement employees
Interim monthly payout option கொடுக்கலாம் அல்லது CPS final closure letter கொடுக்கலாம் 
நீங்க அறிந்ததே

தற்போது interim monthly payout sanction order ( DDO/ SR mainten authority) வழங்கலாம் என அரசாணை வந்துள்ளது 🙏

1) ஓய்வு பெற்ற பணியாளர் செய்ய வேண்டியது

* விண்ணப்பம்/ விருப்ப கடிதம் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தில் வழங்குதல்
* Form 1 வழங்குதல்
* உரிய இணைப்புகள் வழங்குதல்
* எல்லாம் 3 பிரதிநிதிகள்
* காலக்கெடு பணி ஓய்வில் இருந்து 60 நாட்கள்
* 1/1/26 to 31/5/26 வரை ஓய்வு எனில் அரசாணை வந்து 60 நாட்களுக்கு உள்ளே
* அரசாணை 16/6/26 எனவே 16/8/26 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் 
2) தலைமை ஆசிரியர்/ Head of office/ SR maintenance Authority செய்ய வேண்டியது
* 1/1/26 க்கு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாணை 111 தகவல் தெரிவித்தல்
* அவர்கள் இடம் இருந்து விருப்ப கடிதம் விண்ணப்பம் உரிய இணைப்புகள் பெறுதல்
* CPS final closure எனில் option letter வாங்கி தற்போது உள்ள நடைமுறை படி CPS final settlement letter IFHRMS இல் process செய்து சென்னை அனுப்புதல்
* TAPS Interim Monthly payout option எனில் , form 1 attestation, 
* Manual preparation of sanction order
* processing in IFHRMS
* annexure 1 download from IFHRMS ( some technical issues will be rectified soon)
* Fill manually the unfilled details in annexure 1 (download form)
* Process through IFHRMS
* upload necessary attachments
* process steps/flow chart shared by DTA CPS wing Chennai
* Virudhunagar, Salem, The Nilgiri DTOs shared procedure in screenshot refer it
* for further details contact your ST/PAO/District Treasury
* Chennai CPS wing (DTA) department will process it
* DDO should maintain the interim monthly payout register ( model attached)
* easy steps... 
* முதல் முறையாக என்பதால் சில இடங்களில் technical issues வரலாம்.... 
* எல்லாம் விரைவில் சரி செய்யப்படும்..
* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப் பலன் கிடைக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது...
* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் சிரமங்களை குறைத்திட வேண்டும் என்ற நோக்கில் அரசு நினைக்கிறது...
* நாமும், ஓய்வு பெற்றவர்களின் கண்ணியம் காத்து. உரிய பலன்களை அவர்கள் சிரமம் இன்றி பெற்றிட உறுதுணையாக இருப்போம்

TAPS சார்ந்த
எனது write up
Model letter, sanction order 
அரசாணைகள்
சுற்றறிக்கைகள்
கடிதங்கள் (1-55 pages)

Vj Sir write-up
IFHRMS flow chart
Salem, Vnr (56-106) 

தனித் தனியே தேட வேண்டாம் என்பதால் எல்லாவற்றையும் மொத்த தொகுப்பாக பகிர்ந்துள்ளேன் 😊

கூடுதல் விவரங்களுக்கு தங்களின் STO/PAO/DTO தொடர்பு கொள்ளுங்கள் 

Thanks To 
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்

Taps Letters to Download Click Here

Taps Updated all pdf Click Here to Download

31 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.07.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:462

குறள்:

 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

பொருள்:

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை. 

பழமொழி :
It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

பிறருக்கு உதவுவது உயர்ந்த பண்பு என்றால் நேர்மை என்பது சிறந்த கொள்கை.

Thought for the Day :

Small steps taken daily lead to great success.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தள் மலர். 

2. ஜிம்பாபே நாட்டின் தேசிய மலர் எது? 

செங்காந்தள் மலர்.

English words :

Neat - Clean and organized, சுத்தமான.

Pure - Clean and untainted, தூய்மையான

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம பஞ்சாயத்து என்பது மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் அமைக்கப்படுகிறது.

இதன் தலைவரை பஞ்சாயத்து தலைவர்  என்று அழைப்பார்கள்.

NMMS :

MAT 

பொருந்தாததைத் தேர்ந்தெடு

(1) கடத்தும் திசு

(2) புறத்தோல் திசு

(3) அடிப்படைத்திசுக்கள்

(4) இணைப்புத்திசு

விடை: (4) இணைப்புத் திசு

நீதிக்கதை

 பழைய உணவின் பாதிப்பு

ஒரு கிராமத்தில் சஹானா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். ஒருநாள் வீட்டில் சமைத்த உணவு மீதமிருந்தது. அதை அம்மா குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்தும் அந்த உணவை சஹானா சாப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

அம்மா, "பல நாட்கள் வைத்திருக்கும் உணவில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வளரலாம். அதைச் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும்," என்று கூறினார். ஆனால் சஹானா அதைக் கேட்காமல் அந்த உணவைச் சாப்பிட்டாள்.

சில மணி நேரங்களிலேயே அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றபோது, "நீண்ட நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிட்டதால் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் புதிதாக சமைத்த உணவையே சாப்பிட வேண்டும்,"என்று அறிவுறுத்தினார்.

அதன்பிறகு சஹானா, பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடாமல், எப்போதும் சுத்தமான மற்றும் புதிய உணவையே சாப்பிடத்  தொடங்கினாள். 

நீதி:

பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடக்கூடாது; புதிய, சுத்தமான உணவே நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

இன்றைய செய்திகள்

31.07.2026

🗒️குழந்தை தொழிலாளர் விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு குழு அமைச்சர் பர்வேஸ் தகவல்.

🗒️எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு குறித்து ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🗒️தமிழகத்திற்கு காவிரியில் நீர் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀காமன்வெல்த் விளையாட்டு: 

👍🏼நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப் பதக்கம்.
👍🏼ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி.
👍குத்துச் சண்டையில் அரை இறுதிக்கு முன்னேறிய 6 இந்திய வீரர்கள்.

Today's Headlines
 
🗒️Minister Parvez said that a special committee has been formed to monitor child labour issues.

🗒️The Tamil Nadu government has formed a 7-member committee to study the El Niño climate change phenomenon.

🗒️The Cauvery Water Management Authority has directed the Karnataka government to release Cauvery water to Tamil Nadu.

Sports News

🏀Commonwealth Games:

👍🏼Murali Sreeshankar won the silver medal in the long jump.

👍🏼Neeraj Chopra has qualified for the javelin throw final.

👍🏼Six Indian boxers have advanced to the semi-finals.


JOIN KALVICHUDAR CHANNEL