t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 February 2025

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்கிறது!!




அரசு ஊழியர்களுக்கு 01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்கிறது.

தற்போது 53% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 2% அகவிலைப்படி உயர்வினால் 55% அகவிலைப்படி பெறுவார்கள்.

01.01.2025 முதல் 31.03.2025 வரை 3 மாதங்களுக்குரிய அகவிலைப்படி உயர்வுத் தொகை ஏப்ரல் முதல் வாரத்தில் நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாத இறுதியில் வெளியாகும்.

ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்ததும், இதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும், அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2025


 
திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்: 974

20 February 2025

ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் உரை


மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் உரை - பக்கம் 4, பத்தி 2ல்!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:973

 மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
 கீழ்அல்லார் கீழ்அல் லவர்.

பொருள்:
உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவா் சிறியர்; கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான எண்ணமில்லாதவர் பெரியோர்.

பழமொழி :
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.  

 He who knows himself may know his maker.

இரண்டொழுக்க பண்புகள் :   

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.  

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

--கவிஞர் கண்ணதாசன்

பொது அறிவு : 

1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது? 

விடை : ஹீலியம்.       

2. இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது? 

விடை : கங்கை டால்பின்

English words & meanings :

 College. - கல்லூரி

Court. - நீதிமன்றம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்…

பிப்ரவரி 20

உலக நீதி நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.
நீதிக்கதை

 தென்றலும்‌ சூறாவளியும் 



ஆற்றங்கரையிலே நின்ற அந்த மாமரம்‌ சலசலவென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன்‌ கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள்‌ அழகாகத்‌ தொங்கிக்‌ கொண்டிருந்தன. ஓர்‌ அணிற்‌ பிள்ளையும்‌ ஒரு கிளிப்பிள்ளையும்‌ அந்த மாமரத்தை நெருங்கின. 



“அம்மா, மாமரத்‌ தாயே ! பசித்து வந்திருக்‌கிறோம்‌” என்றது கிளிப்பிள்ளை. “உங்களுக்காகத்தானே பழம்‌ வைத்திருக்‌கிறேன்‌. நன்றாகச்‌ சாப்பிடுங்கள்‌”? என்று கூறியது மாமரம்‌. 



“மாவம்மா,இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல்‌ தெரிகிறதே! என்ன காரணம்‌?” என்று விசாரித்தது அணிற்பிள்ளை. 



“பிள்ளைகளே ! தென்றல்‌மாமா வந்திருக்‌கிறார்‌. அவர்‌ வந்திருப்பதே ஓர்‌ இன்பம்தானே!” என்று கூறியது மாமரம்‌. 



அணிற்பிள்ளையும்‌ கிளிப்பிள்ளையும்‌ வயிறு நிறைய பழம்‌ சாப்பிட்டுவிட்‌.டுச்‌ சென்றுவிட்டன. தென்றல்‌ மாமாவுடன்‌ நேரம்‌ போவது தெரியாமல்‌ பேசிக்‌ கொண்டிருந்தது மாமரம்‌.



இரண்டு நாட்கழித்து,

“மாவம்மா! நேற்றெல்லாம்‌ *ஓ*வென்று அலறிக்‌ கொண்டிருந்தாயே ஏன்‌?” என்று கேட்டுக் கொண்டே மாமரத்திடம் வந்தது அணிற்பிள்ளை.



மாமரத்தைப் பார்த்து “இதென்ன அநியாயம்‌! மாமரத்‌ தாயே! உன்‌கிளைகளெல்லாம்‌ ஏன்‌ முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம்‌ கீழே வீழுந்து அழுகிக்‌ கிடக்கின்றனவே, ஏன்‌?' என்று பதறிப்‌ போய்க்‌ கேட்டது கிளிப்பிள்ளை. 



பிள்ளைகளே, நேற்று சூறாவளி என்கிற முரடன்‌ வந்தான்‌. அவன்‌ செய்த அட்டூழியம்தான்‌ இது!” என்று கூறிக்‌ கண்ணீர்‌ விட்டது மாமரம்‌. மாமரத்தின்‌ துன்பத்தைக்‌ காணப்‌ பொறுக்காமல்‌ கிளிப்பிள்ளையும்‌

அணிற்பிள்ளையும்‌ கண்ணீர்‌ விட்டன.  



அவற்றிற்குப்‌ பழம்‌ கொடுக்க முடியாமல்‌ போய்‌விட்டதே என்று மாமரம்‌ வருந்தியது. பின்னர் 

அவையிரண்டும்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ நோக்கிச்‌ சென்றன.



கருத்துரை:-- நல்லவர்கள்‌ வரவால்‌ இன்பம்‌ உண்டாகும்‌. தீயோர்கள்‌ வரவால்‌ துன்பமே உண்டாகும்‌.

இன்றைய செய்திகள்

20.02.2025

* தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

* “விண்வெளி உட்பட பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது” - மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்.

* தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

* துபாய் ஓபன் டென்னிஸ் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா.

* பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.

Today's Headlines

* Tamil Nadu Chief Minister M.K. Stalin has written to Union Minister for Women and Child Development Smriti Irani, requesting her to release the central government's share of funds for various schemes within a specified timeframe.

* Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Tidal Parks in Trichy and Madurai, which will provide employment opportunities for 12,000 people.

* "India is making rapid progress in various fields, including space technology," said Union Minister of State for Technology Jitendra Singh.

* The United Nations has stated that India will experience rapid growth using clean energy and industrialization.

* Dubai Open Tennis: Kazakhstani player Elena Rybakina advances to the next round.

* MRF team joins British Rally Championship for the 2025 season and obtains the rights to supply all the necessary tires for the tournament.

Covai women ICT_போதிமரம்


19 February 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2025



திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்: பெருமை

தமிழக அரசின் முழு உடல் பரிசோதனை திட்டம்: ஆசிரியர்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்



அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

18 February 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2025



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இனிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

பொருள்:
ஊக்கம் மிகுதியே ஒருவனுக்கு பெருமையாகும்: ஊக்கமின்றி உயிர் வாழ எண்ணுதல் சிறுமையேயாகும்.

பழமொழி :
சௌரியம் பேசேல்.  

 Boast not of your strength.

இரண்டொழுக்க பண்புகள் :   

* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.  

* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

--அன்னை தெரசா

பொது அறிவு : 

1. உங்கள் உள்ளங்கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது? 

விடை: காலியம்

2. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை எவ்வளவு? 

விடை: பூஜ்ஜியம்

English words & meanings :

 Bookstore. - புத்தகக் கடை

 Bus stop. - பேருந்து நிறுத்தம்
பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர் அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. 

மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.
நீதிக்கதை

 கறையும்‌ இருளும்‌ 



இரவு நேரம்‌. நாரையொன்று காற்றில்‌ பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும்‌ பட்டப்‌ பகல்போல்‌ ஒளி பரவியிருந்தது. அந்த ஒளியில்‌ வெப்பம் இல்லை.குளிர்ச்சி நிறைந்த அந்த ஒளி எங்கிருந்து வருகிறது? என்று தேடித்தான்‌ அந்த நாரை பறந்து கொண்டிருந்தது.  

உலகமமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை சென்ற இடமெல்லாம்‌ அந்த ஒளி நிறைந்‌திருந்தது, நாரை, சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது. 

உயரத்தில்‌ ஒளித்தகடு போல்‌ வட்டநிலா அழகுடன்‌ விளங்கியது. நாரை அதன் அழகில்‌ மயங்கி நிலாவையே பார்த்துக்‌ கொண்டு நின்றது. 

நிலா அழகாகத்தான்‌ இருந்தது. உலகம் முழுவதும்‌ ஒளி பரப்பும்‌ பேரொளியைப்‌ பெற்றுத்தான்‌ விளங்கியது. ஆனால்‌ அந்த ஒளிநிறைந்த நிலாவின்‌ இடையிலே ஓர்‌ இருட்டுப்‌ பகுதியும்‌ இருந்தது. அது நிலவின்‌ இடையில்‌ ஒரு கறை போல இருந்தது. இவ்வளவு அழகான நிலவின்‌ இடையில்‌ இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது நாரை.

தன்னிடம்‌ உள்ள கறையை நீக்கிக்‌கொள்ளாமல்‌ உலகைச்‌ சூழ்ந்துள்ள இருளை ஓட்டப்‌ புறப்பட்டு விட்டதே இந்த நிலவு! இதன்‌ கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப்‌பட்டது. 

அது நிலாவை நோக்கிப்‌ பறந்தது.எவ்வளவு உயரம்‌ பறந்தும்‌ அதனால்‌ நிலாவை அடைய முடியவில்லை . போகப்‌ போக மேலும்‌ மேலும்‌ தொலைவில்தான்‌ இருந்து கொண்டிருந்தது. 

நிலாவை நெருங்க முடியாது என்று கண்டு கொண்ட நாரை, அருகில்‌ காற்றில்‌ தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப்‌ பார்த்து “மேகமே, நிலா தன்னிடமுள்ள கறையைப்‌ போக்கிக்‌ கொள்ளாமல்‌, உலகில்‌உள்ள இருளைப்‌ போக்குகிறதே இதன்‌ கருத்து என்ன ? என்று கேட்டது.

 “நாரையே, உயர்ந்த பெரியோர்கள்‌ தங்கள்‌ துன்பத்தை விட பிறருடைய துன்பத்தை நீக்குவதே முதற்கடமை என்று நினைப்பார்கள்‌. அது போன்றதுதான்‌ நிலாவின்‌ இயல்பு!” என்றது மேகம்.

நிலாவின்‌ உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக்‌ கொண்டே இறங்கி வந்தது நாரை.

கருத்துரை :-- தன்‌ துன்பத்தைக்‌ காட்டிலும்‌ பிறர்‌ துன்பத்தைப்‌ பெரிதாக நினைத்து அதைப்‌ போக்க உதவி செய்வதே நல்லோர்‌ இயல்பாகும்‌.

இன்றைய செய்திகள்

18.02.2025

* கோடைகால மின் தேவையை சமாளிக்க, 8,525 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

* சென்னையில்பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்மை வழிகாட்டுதல் வெளியீடு.

* தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.

* உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

* 6 வது புரோ ஆக்கி லீக் தொடர்: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: முகமதன் எஸ்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி.

Today's Headlines

* * To meet the summer electricity demand, the Electricity Regulatory Commission has granted permission to the Power Department to purchase 8,525 megawatts of electricity on a short-term contract basis.

* * In Chennai, a fine of Rs. 5,000 will be imposed for dumping construction waste in public places: Guidelines for Construction Waste Management released.

* * An earthquake occurred in Delhi and its surrounding areas yesterday, measuring 4.0 on the Richter scale.

* * Ukrainian President Vladinir Zelensky stated that they will not recognize agreements made without Ukraine's participation.

* In the 6th Pro Archery League, India won by defeating Spain.

* In the ISL football match, East Bengal won by defeating Mohammedan SC.

Covai women ICT_போதிமரம்


JOIN KALVICHUDAR CHANNEL