t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 June 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.06.2025

 


திருக்குறள்: 


குறள் 397:


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

விளக்கம்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.


பழமொழி :

Say well is good, but do well is better. 

நல்லதைச் சொல்வது நல்லது; அதை விட நல்லதை செய்வது நல்லது.


இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :

மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி. -மகாத்மா காந்தி


பொது அறிவு : 

01.எந்த நாள் சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது?



ஜனவரி 24 (January 24)

02.எந்த நதி பூமத்திய ரேகையை இருமுறை கடக்கிறது?


காங்கோ ஆறு (Congo River)

English words & Tips :


intelligent - clever. விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல்.‌ 


wisdom - ability to make sensible decisions with one's knowledge. விவேகம், மதிநுட்பம்

 What Is a Common Noun?


Common Nouns Referring to Human Beings

Common Nouns Referring to Animals

Common Nouns Referring to Birds

Common Nouns Referring to Insects

Common Nouns Referring to Reptiles

Common Nouns Referring to Places

Common Nouns Referring to Things/Objects

Common Nouns Referring to Ideas

அறிவியல் களஞ்சியம் :


 பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..


ஜூன் 03


உலக மிதிவண்டி நாள்


உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது.


கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தினம்


முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

நீதிக்கதை


 கிளியின் நட்பு


கதை :

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. 


அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. 


அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது. 


கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. 


இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும். 


நீதி :

தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள்


03.06.2025


இன்றைய செய்திகள் 

⭐அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.


⭐ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.


⭐ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.


⭐உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் - 


விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 7 பேர் பதக்கம் வென்றனர். தொடர் ஓட்ட பந்தயங்களில் 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் சுபா வெங்கடேசன். 


🏀தென்கொரியாவில் நடந்த இத்தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, | 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம் பெற்றது.


Today's Headlines


TODAY'S HEADLINES

✏ Tamilnadu School Education Department orders temporary appointment of teachers in government schools.

✏ UGC instructs colleges to submit anti-ragging schemes.

✏ Powerful earthquake in Japan. 6.0 hertz is recorded on the Richter scale. Buildings shook due to the powerful Earthquake.

✏In the two-and

a-half-year war in Ukraine, a highest toll of 45,287 Russian soldiers have died in 2024 alone -

 SPORTS NEWS

🏀 Out of the 9 athletes from Tamil Nadu who participated in the Asian Athletics Championships, 7 won medals. Subha Venkatesan won 2 medals in the relay races.

🏀 India finished second in the tournament held in South Korea with 24 medals, including 8 gold, 10 silver and 6 bronze.


2 June 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025


திருக்குறள்: 

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

பழமொழி :
He who has an art, has everywhere a part. 

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர்

29 May 2025

மகப்பேறு விடுப்பு - அரசாணை வெளியீடு!...




அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்; இதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

''இதனால் பதவி உயர்வு, பணி மூப்பை இழக்க நேரிடாது''

முன்னதாக, தகுதிகாண் பருவ காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



26 May 2025

2.6.2025 பள்ளி துவங்கும் நாள் அன்று செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


2.6.2025 பள்ளி துவங்கும் நாள் அன்று செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் தொடக்கக்கல்வி/ பள்ளிக்கல்வி இயக்குனர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் CLICK HERE TO DOWNLOAD

25 May 2025

அரசு ஊழியர்களுக்கான அனைத்து விடுப்புகள் பற்றிய விபரங்கள்.. ஒரே பக்கத்தில்..


அரசு ஊழியர்களுக்கான அனைத்து விடுப்புகள் பற்றிய விபரங்கள்.. 


18 May 2025

ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு!

ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு!!






JOIN KALVICHUDAR CHANNEL