. -->

Now Online

FLASH NEWS


Showing posts with label HEALTH. Show all posts
Showing posts with label HEALTH. Show all posts

Thursday 25 November 2021

இதய பிரச்சினை இல்லாமல் நீண்டநாள் நல்ல ஆயுளோடு வாழ ரகசிய உணவு

..

*இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க..)

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும்...

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க்கவும்...

#பச்சைபூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் "#சமைத்து_சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கி கொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!...

சமைத்தால், அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

#செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர, "#எமதர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

#குறிப்பு: இது மருந்தல்ல.. உணவு...!!!

Monday 22 November 2021

இந்த வகை உணவுகள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்! கவனம்



*இந்த நவீன யுகத்தில் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளை கடைப்பிடித்த பிறகும், பலரும் நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு நீங்கள் சாப்பிடும் உணவுகளும் ஒரு காரணமாக அமையலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் உணவுகள் அல்லது நீங்கள் தினமும் உட்கொள்ளும் பானங்கள் உங்களது மனநிலையை மோசமாக்குகிறது. அவை என்ன மாதிரியான உணவு பொருட்கள் என்பதை பின்வருமாறு காணலாம்.*

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்:

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இதய பிரச்சனைகள், நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் போன்ற பாதிப்புகளின் அபாயத்தை அதிகரிப்பதற்கான ஒரு காரணி ஆகும். பொதுவாக இது பல்வேறு டயட் முறைகளில் சேர்க்கப்படுவதில்லை. மனநல சுகாதார அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் நுகர்வு கவலை மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டின் ஆபத்தையும் அதிகரிக்கிறது என்பதை நிரூபித்தது. எனவே வெள்ளை மாவு அல்லது மைதா மாவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, நீலக்கத்தாழை சர்க்கரை, சிரப், மிட்டாய் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முயற்சிக்கவும். இதற்கு ஆரோக்கியமான மாற்றாக ஓட்ஸ், பழுப்பு அரிசி, குயினோவா, தானியங்கள், முழு அல்லது முளைத்த கோதுமை மாவில் தயாரித்த ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம்.

சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகள்:

இனிப்பான உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கான ஆற்றல் மட்டங்களை பாதிக்கும். இது ஒருவரின் மனநிலையை சமநிலையற்றதாக்கி, கவலை சிக்கல் உணர்வினை ஊக்குவிக்கும். எனவே, பதப்படுத்தப்பட்ட அல்லது அடெட் சர்க்கரை கொண்ட ப்ரிசர்வ்டு பழச்சாறுகள், ஜாம், கெட்ச்அப், டிரஸ்ஸிங் மற்றும் சாஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். இதற்கு பதிலாக இயற்கையான சர்க்கரை மாற்றீடுகள் அல்லது ஸ்டீவியா, எரித்ரிட்டால் மற்றும் யாகான் சிரப் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும். மேலும் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் அதிக பாதுகாப்பானதாகவும் சர்க்கரைகளைக் கொண்ட தொகுக்கப்பட்ட பழச்சாறுகளை விட மிகச் சிறந்தவையாக இருக்கும்.

காஃபினேட் பானங்கள்:

காஃபின் மூலக்கூறுகள் மூளை ஏற்பிகளுடன் இணைந்து அடினோசினின் பிணைப்பு நிகழ்வை தூண்டுவதன் மூலம் தூக்க சுழற்சியை பாதிக்கிறது. இறுதியில் பதட்டம், தூக்கமின்மையால் தூண்டப்படும் மன அழுத்தத்தை காஃபின் ஏற்படுத்துகிறது. காஃபினின் குறைவான நுகர்வு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் அதிகமான அளவு காபி குடிக்கும் ஒருவராக இருந்தால், நீங்கள் விரைவில் கவலை, பதட்டம் ஆகிய சிக்கல்களுக்கு இரையாகலாம். சாதாரண தேநீர், சில சாக்லேட்டுகள் மற்றும் சுவையான கேக்குகளில் கூட காஃபின் இருப்பதை மறந்துவிடாதீர்கள். அதற்கு பதிலாக சுவையான மூலிகை தேநீர், புதினா, எலுமிச்சை அல்லது தேங்காய் நீரில் இருந்து தயாரிக்கப்படும் கலவையை சுவைத்து பார்க்கலாமே.

ஆல்கஹால்:

ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கடுமையாக சேதப்படுத்தும். துன்பம், மனமுடைதல், மனநிலை மாற்றங்கள் அல்லது கோபத்தை சமாளிக்க பலர் ஆல்கஹால் உதவியைப் பெறுகிறார்கள். மது இனிமையான அல்லது அமைதியான விளைவுகளைத் தருவதாக பலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு மாறாக, இது உடல் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. ஏனென்றால், ஆல்கஹால் மூளையில் உள்ள செரோடோனின் மற்றும் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை மாற்றியமைக்கிறது. இதனால் பதட்டம் அதிகரிக்கிறது. மேலும், உடல் நிலை நாளடைவில் மோசமடையும். எனவே, இதற்கு பதிலாக மோஜிடோஸ் அல்லது மாக்டெயில் அல்லது ஆல்கஹால் அல்லாத பியர்களை குடிக்க முயற்சிக்கலாம்.

டிரான்ஸ் கொழுப்பு:

சிப்ஸ் பாக்கெட் அல்லது கோழி நகட்ஸ் சாப்பிடுபவர்கள், உங்களில் மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பாதிப்பு மிகவும் அதிகம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். டீப் பிரை செய்யப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பொதுவாக ஓரளவு ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகிறது. அதில் காய்கறி எண்ணெய் மிகவும் திடமான எண்ணெய்யாக மாற்றப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த எண்ணெயை நீண்ட காலம் உபயோகிக்க முடிகிறது. எனவே, டிரான்ஸ் கொழுப்புகளின் அத்தகைய ஆதாரம் கடுமையான இதய பாதிப்பிற்கும், மன பிரச்சினைகளுக்கும் பங்களிக்கும். நெய் அல்லது வெண்ணெய் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளால் செய்யப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவது நல்லது.

அதிக உப்பு உள்ளடக்கம்:

உடலில் அதிகப்படியான சோடியம் சிறுநீரகத்தையும் நரம்பியல் அமைப்பையும் சீர்குலைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் தலையிடுவதன் மூலம் உப்பு மனநிலை கோளாறுகள், மனச்சோர்வு அல்லது உடல் சோர்வினை ஏற்படுத்துகிறது. இருப்பினும், உப்பு உட்கொள்வதால் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சனை கொண்டவர்களிடையே எதிர்மறையான உடல் உருவத்தை கூட தரும். எனவே அதிக உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்



Saturday 20 November 2021

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் தவறுகள்

உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்வதும் பலன் இல்லாமல் கவலைப்படுபவர்கள் அதிகம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். எடையை குறைத்து தொப்பை இல்லாத ஜீரோ சைஸ் வயிறு என்பது பலரது கனவாக இருக்கிறது. 

இந்த நோக்கத்தில் பல முயற்சிகளை மேற்கொள்ளும் போது நம்மை அறியாமலே ஒரு சில தவறுகளை செய்கிறோம். 

அதுவே எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது.

முதலில் மனது தயாரானதும், எடைக்குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தான் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

சிலர் உண்ணும் உணவை குறைப்பதற்காக வழக்கமாக சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும் அதிகம் தவிர்க்காமலும் அளவாக சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். ஆனால் பழச்சாறுகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதை காட்டிலும் அதிக அளவு பசியை தூண்டிவிடும்.

உடல் எடையை வேகமாக குறைப்பதற்காக தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவ்தும் தவறு. இது உடல் எடை குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும்.

துரித கொழுப்பு உணவுகளை உடனடியாக தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக சிலர் உணவை குறைத்துவிட்டு நொறுக்கி தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும்.

உணவுக்கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்த பலனையும் கொடுக்காது.

எடையை குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்

7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.

 

சேற்றுப்புண்ணில் இருந்து கால்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?


சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு என்ன தீர்வ

 சேற்றுப்புண்………
மழைக்கால நோய்களில் இல்லத்தரசிகளை அதிகம் தாக்குவது இந்த சேற்றுப்புண் தான். நடக்கவே முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடிய இதை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரிசெய்வது……

#சேற்றுப்புண்ணுக்கு……

👉 #மருந்து_01

சேற்றுபுண், பித்த வெடிப்பு போக்க 

▶விளக்கெண்ணை - 50 g

▶நல்லெண்ணை - 10 g

▶தேங்காய் எண்ணை - 10 g

▶புன்னை எண்ணை - 10 g 

▶பிரம்ம தண்டு வேர் - சிறிது

▶கண்டகத்திரி இலை - சிறிது

▶கடுக்காய் தூள் - 1 Spoon

▶மஞ்சள் தூள் - 1 Spoon

▶தேன் மெழுகு- 10 g

-இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து  காய்ச்சவும்.

-சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில்  மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)

-Double Boiling முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றவும்.

-பாதங்களை சுத்தம் செய்து பிறகு பயன்படுத்தவும். இக்களிம்பை ஒரு வாரம் தேய்த்து வர குணமாகும்.

 சேற்றுப் புண்ணுக்கு போட்டு வர குணமாகும்.

👉#மருந்து02

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு,அரிப்பு, படர்தாமரை, எரிச்சல்,சேற்று புண் ஆகியவை சரியாக இயற்கை மூலிகை மருந்து தயாரிக்கும் முறை*

 தேவையான பொருட்கள

▶தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்

▶தேள் கொடுக்கு இலை - 5 எண்ணிக்கை

▶மஞ்சள் - 1/2 ஸ்பூன்

👉தயாரிக்கும் முறை

முதலில் தேள் கொடுக்கு இலையை அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த இலையை சேர்க்கவும். 
பின் மஞ்சள் சேர்த்து நன்றாக காய்ச்சி தையலாம் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொள்ளவும். இதை தோலில் உள்ள புண்கள்,சிராய்வுகள், சொரி, அரிப்பு போன்ற வற்றில் தடவி வந்தால் எளிதில் குணமாக்கி விடலாம்.

 கடுக்காய்த் தோல் அரைத்து எடுத்து வேப்பஎண்ணெய் காய்ச்சி அதில் கலந்து  பூச சேற்றுப் புண் குறையும்.

வெண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் காலை நன்றாக நனைத்து எடுக்க சேற்றுபுண் குணமாகும்.

காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

 
கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.

அரைக்கப்பட்ட மருதாணி இலை அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூள் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு 
வைத்தியங்கள் மூலம் இது குணப்படுத்தப்படலாம்.

கால் டம்ளர் நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போதே சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும். இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்.

வேப்பிலையை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து குழைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் தடவவேண்டும். இவை உடலை சுத்தம் செய்வது போன்று கால்களில் இருக்கும் பூஞ்சை தொற்றையும் சுத்தம் செய்யும்.

அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அதில் பிடியளவு உப்பு சேர்க்கவும். அதில் கால்களை நனைத்து ஊறவைத்து பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து சுத்தமான துணியால் துடைத்து எடுக்கவும். அதன் பிறகு மருந்து வைக்கலாம்.

மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்கள் முழுக்க தடவ வேண்டும். காலையில் எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.இரண்டே நாளில் மாற்றம் தெரியும்.

கால் விரல்கள் இடுக்குகளில் தேங்காயெண்ணெய் கலந்து பிறகு குளிக்கலாம். இன்னும் பாதுகாப்பு தேவையெனில் தேங்காயெண்ணெயோடு மஞ்சளை குழைத்தும் பூசி பிறகு குளிக்கலாம். அதற்கு மாற்றாக வேப்ப எண்ணெய் கலந்தும் பூசலாம்.

வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டோ,  எலுமிச்சை பழச் சாறு கலந்தோ கால்களை கழுவலாம். 

ஒரு கைப்பிடி அளவு  வேப்பிலையுடன் நீர் சேர்த்து, அதை கொதிக்க வைத்த பின் அந்த நீரைக்கொண்டும் பாதங்களை கழுவலாம்.

வீட்டில் அரிசியை அலசும் தண்ணீரை சேகரித்து, அதை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு பாதங்களை கழுவிய  பின்பு  ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். 

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது.

 குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண்  வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவலாம். இதனால் எரிச்சல் இல்லாமல் இருக்கும். 

ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் 'சிந்துராதி லேபம்',  'மகாதிக்தக லேபம்' போன்ற மருத்துகளை காலை மாலை இரு வேளை பூசிக் கொள்ளலாம் சுத்தமான தேங்காய் எண்ணெயும் சூடு செய்து பூசலாம்.

Tuesday 16 November 2021

மதிய உணவை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

தற்போதைய அவசர உலகில் பலருக்கும் காலையில் உணவு சாப்பிட பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அதனால் பலரும் மதியம் தான் சாவகாசமாக பிடித்த உணவுகளை ஒரு கட்டு கட்டுகின்றனர் . அதற்கேற்றார் போல அந்த சமயத்தில் அதிகம் பசியும் இருக்கும் .

இரவு வேளைகளில் வயிறு முட்ட உண்பது, மத்திய வேளைகளில் அசைவ அல்லது சைவ உணவு விடுதிகளில் நன்றாக உண்பது என்று நம்மில் பலருண்டு.


ஆனால், இவர்களில் பலர் தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பவராக இருக்கிறார்கள்.

காலை உணவை தவிர்த்தால், அன்றைய நாளுக்கு வேண்டிய ஆற்றல் இல்லாமல், நாள் முழுவதும் சோர்வுடன் தான் செயல்படக்கூடும். அதுமட்டுமின்றி, காலையில் கண்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து, ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே, நல்ல பலனைப் பெற முடியும்.

மேலும், காலை உணவை தவிர்ப்பதால் நாள் முழுக்க உடல் சோர்வுடன் காணப்படும். காலை உணவை தவிர்ப்பவர்கள் உற்சாகத்தை விரைவில் இழந்து விடுவர் அவர்களால் தங்கள் பணிகளில் கவனம் செலுத்த முடியாது.

ஆனால், காலை உணவை தவிர்ப்பதன் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் தைராய்ட் சுரப்பி பாதிக்கப்படும். இதனால் விரைவில் தைராய்ட் பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், காலை உணவை தவிர்ப்பது அதீத உடல் சோர்வை ஏற்படுத்தும். இதன் விளைவு கடுமையான மன அழுத்தம் உண்டாகும். காலை உணவை தவிர்ப்பவர்களின் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து காணப்படும். இதனால் மயக்கம், தளர்ச்சி, வாந்தி போன்ற ஒவ்வாமைகள் உடலை வாட்டும்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தொடர் குமட்டால், அல்சர், மலச்சிக்கல் போன்றவை காலை உணவை தவிர்ப்பவர்களின் வீட்டை தட்டும்.

சுருங்க சொல்வதானால், பேரரசனாக காலை உணவை உண்டு, இளவரசனை போல மத்திய உணவையும், இரவு உணவை எளியவர் போல உண்பவர்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

அதே சமயம் கிடைத்த உணவுகளை எல்லாம் மதியம் சாப்பிட கூடாது.

மதியம் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து காண்போம்.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில், அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் திரும்பத் திரும்ப பாலீஷ் செய்யப்படுகிறது. இந்த வகை அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது. மாறாக, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ரசாயனங்களே அதிகம் இடம்பெற்று இருக்கும். அதனால் இதைச் சமைத்துச் சாப்பிடுவதால் எந்தவிதப் பலனும் இல்லை.

 

கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் இயற்கையாகவே இதில் நிறைந்திருக்கின்றன. இதைச் சாப்பிடுவதால், உடல் வலிமை பெறும்.

மதிய உணவில் அதிக அளவு நீர்ச் சத்துள்ள காய்களை சேர்த்துக்கொள்ளலாம் பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவை நம் உடலுக்கு நலம் பயக்கும் நீர்ச்சத்துள்ள காய்கள்.

எண்ணெயில் செய்யப்படும் பொரியல்களைத் தவிர்க்கலாம். அதிக அளவில் அவியல், கூட்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டது செரிமானம் ஆக தேவையான நேரம் கிடைக்கும். அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது.

மைதாதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றுக்கு மதிய வேளையில் `நோ' சொல்லுங்கள். அதற்குப் பதிலாக கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தைப் போலவே சூப்பும் மதியம் சாப்பிடச் சிறந்தது.

தயிர் சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழிவகுக்கும். எனவே, தயிரைச் சேர்த்துக்கொள்ளலாம். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், தயிர் ஆகாது என்பவர்கள் நீர்த்த மோரைச் சேர்த்துக் கொள்ளலாம்,

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க உதவும் வெந்தயம்.எப்படி பயன் படுத்துவது?


கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்… என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சரி… சர்க்கரைநோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

டைப் 1 சர்க்கரைநோய்: சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.

டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். 

நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ருசியான உணவை தேடி ஆரோக்கியமான உணவை இழந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

நம் சமையறையில் இருக்கும் பொருட்களை கொண்டே பல நோய்களை விரட்டி அடித்து விடலாம். குறிப்பாக வெந்தயத்தில் பல நன்மைகள் உள்ளது. சரி வாங்க வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி நீரிழிவு நோயில் இருந்து வெளியே வருவது குறித்து பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு வெந்தயம் சேர்த்து அதில் வெந்நீரை ஊற்றி கிட்டத்தட்ட 10 நிமிடம் நன்றாக ஊறவைக்கவும். சுவைக்கு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை கலந்து கொண்டு வடிகட்டி சூடான தேனீராக பருகலாம்.

நன்மைகள்:-

வெந்தயத்தில் உள்ள நார் சத்துக்கள் இயற்கையாகவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவையே ஈஸியாக சமாளிக்க முடியும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது 8வது மாதத்தில் இருந்து தினமும் வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் சுக பிரசவம் நடக்கும். அதுமட்டும் இல்லாமல் இது கருப்பை சுருங்காமல் காக்கின்றது.

சில சமயங்களில் வெந்தயக்கீரையை மாவாக அரைத்து கொண்டு துணியில் மூட்டை கட்டி நெருப்பில் சூடு செய்து தோலில் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறு செய்வதால் உடல் வலி, தசை வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.

வெந்தய விதைகளை வெறும் வயிற்றில் தினமும் உட்கொள்வது மூலம் முக சுருக்கங்கள், கரும் புள்ளிகள் போன்றவையே தடுக்கலாம். வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்...

Monday 15 November 2021

உடல் எடையைக் குறைக்கும் ஆரோக்கியமான உணவு


ஒவ்வொருத்தர் ஒவ்வொரு உணவு பழக்கத்தை கடைபிடிப்பார்கள். நான் போதுவாக கொடுக்கிறேன்.

காலை...எழுந்ததும் 2 டம்ளர் வெது வெதுப்பான தண்ணீர்.
அல்லது
டீ, காபி தவிர்த்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ (தேவைப்பட்டால் 1 ரஸ்க் அல்லது 1 மாரி பிஸ்கெட் உடன்).

காலை உணவு 7.30 - 8.30 க்குள்

ஆவியில் வேகவைத்த உணவு ஏதாவது ஒன்று இட்லி - 4 (பெரிய இட்லி என்றால் 2), / இடியாப்பம் - 2, /  புட்டு - ஒரு கப் / சிறுதானிய உப்புமா.

அல்லது

தோசை - 2 எண்ணெய் சேர்க்காமல்

அல்லது

மல்ட்டிகிரெயின் பிரெட் அல்லது ஓட்ஸ் பிரெட் (கிரிஸ்பி டோஸ்ட் செய்யப்பட்டது) 

அல்லது 

வெஜிடபுள் சாண்ட்விச் 
அல்லது முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் பயன்படுத்திச் செய்த ஆம்லெட் 

அல்லது 

கோதுமை ரவை கஞ்சி 
அல்லது 
கோதுமை ரவை உப்புமா 
அல்லது 
சப்பாத்தி - 2 

(இவற்றுடன் ஒரு நாள் முளை கட்டிய பயறு, ஒரு நாள் இனிப்பு சேர்க்காத Fresh Juice போன்றவற்றை எடுத்துக்  கொள்ளலாம்)

காலை உணவு பழக்கம் வீட்டிற்கு வீடு மாறும்  அதனால் எல்லாம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளவும்.

காலை 11 மணிக்கு...

கீரின் டீ / Fresh Juice / Biscuits /
பச்சை காய்கறி சாலட் அல்லது ஆப்பிள், மாதுளை, பப்பாளிப் பழங்களில் ஏதேனும் 1 ஒரு கப் அளவு.

மதிய உணவு 12.30 - 1.30 க்குள்

4 சப்பாத்தியுடன், 2 கப் காய்கறி 
அல்லது 
1 கப் அரிசியுடன் 2 கப் காய்கறி, அசைவம் என்றால் குழம்பில் போட்ட கறி இரண்டு துண்டுகள் 100 கிராம் அளவு (பொரித்த கறி மற்றும் வகைகளை தவிர்க்கவும் காய்கறிகள் என்றால் கிழங்கு கூடாது. தேங்காய் மற்றும் எண்ணெய் சேர்த்ததைத் தவிர்க்கவும்,  கூட்டாகவோ, பொரியலாகவோ சாப்பிடலாம். பாதி உப்பு மட்டும்  சேர்த்துக் கொள்ளவும்)

அளவுக்காக கப் என்று  சொல்லப்பட்டுள்ளது, சாதத்தை விட காய்கறி அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 

மாலையில்... 4 மணிக்கு

1 கப் டீயுடன் 2 பிஸ்கெட் அல்லது 60 கிராம் சுண்டல். 

சுண்டல் போடும்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயிறு சாப்பிடும்படி போடவும்.

இரவு உணவுக்கு 7 -8 க்குள்

காய்கறி சூப் அல்லது காய்கறி சாலட்  அல்லது பழம் 
அல்லது 
2 தோசை  பச்சைப் பயறு தோசை / உளுந்து தோசை / கோதுமை தோசை ஏதாவது ஒரு வகை அல்லது 2 புல்கா (எண்ணெய் இல்லாத சப்பாத்தி) உடன் காய்கறி.

படுக்கப் போகும் முன்...

கொழுப்பு நீக்கிய பால் 100 மி.லி. (கால்சியம் தேவை இருப்போருக்கு மட்டும்).

இவை தவிர...

√ 100 மி.லி. தயிரை தண்ணீர் விட்டுக் கடைந்து 1 லிட்டர் மோராக்கிக் கொண்டு, காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்.

√ 1 லிட்டர் எலுமிச்சைச்சாற்றை (மிதமான உப்பு சேர்த்தது) நாள் முழுவதும் குடிக்கலாம் (அசிடிட்டி பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவும்).

√ தினம் 1 இளநீர் குடிக்கலாம். (நீரிழிவு இருப்போர் தவிர்க்கவும்).

* மேற்கூறிய உணவுப் பட்டியல் ஓரளவு எடை குறைக்க உதவும் என்றாலும், உடற்பயிற்சி என்பதும் மிகமிக அவசியமானது. இந்த உணவு முறையுடன் தினமும் அரை மணி முதல் 45 நிமிடங்கள் வரை நடப்பது கூடுதல் பலன் தரும்.

* சாப்பாட்டு அளவைக் குறைக்கிறதால எடை குறைஞ்சிடும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. உண்மையில் டயட்டுங்கிறது வயசு, உடல்வாகு, அவங்களோட வேலையின் தன்மைனு பல விஷயங்களைப் பொறுத்தது.

√ அதிக இரத்த அழுத்தம் அல்லது நீரழிவு நோய் உள்ளவர்கள் குறைந்த உப்பு பயன்படுத்தும் டயட் திட்டத்தை தேர்வுசெய்யலாம்.  

√ முதலில் கஷ்டமாக இருக்கும் அப்புறம் பழக்கமாகிடும். படிப்படியாக அமல்படுத்துங்கள் முதலில் காலை உணவு அது பழகியபின் மதிய உணவு அதன் பின் இரவு உணவு.

√ வாரம் 12 வேளை சிறுதானிய உணவு உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமாக வைக்கும்.



Tuesday 9 November 2021

மன அழுத்தம் குறைய மற்றும் மனமகிழ்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா

மகிழ்ச்சிக்கும் 
உணவுக்கும் தொடர்பு உண்டு..

உளவியல்... உணவியல்...

நாம் உண்ணும் உணவு நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனநிலையையும் பாதிக்கிறது. மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் மோசமான நிலைக்குச் செல்வதற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்கிறது ஐரோப்பிய நரம்பியல் மனோதத்துவ இதழில் (European Neuro psycho pharmacology) வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு.

உணவுக்கும் மனநல ஆரோக்கியத்துக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை மனச்சோர்விலும் வைட்டமின் B12 குறைபாட்டால் ஏற்படும் தாக்கத்திலும் உதாரணமாகக் கொண்டு உறுதிப்படுத்த முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா.
ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவர் தன் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

வாழைப்பழம் எப்பவுமே பெஸ்ட்..

மூளையில் சுரக்கும் செரோடோனின்(Serotonin) அளவு குறைவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். வாழைப்பழங்களில் Tryptophan என்கிற அமினோ அமிலம் நிறைவாக உள்ளது. இதுவே செரோடோனின் என்கிற மோனோ அமைன் நரம்பியல் கடத்தியாக (Monoamine neurotransmitter) மாற்றப்படுகிறது. இந்த செரோடோனின் நமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்..

மீன் எண்ணெயில் Omega-3 polyunsaturated fatty acids (PUFA)

இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலமானது மனச்சோர்வினை எதிர்த்துப் போராடும் விளைவுகளைத் தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவு உண்பவர்கள் இந்த கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள Algae plant oil-ஐப் பயன்படுத்தலாம். இது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மெக்னீசியம் நிறைந்த பயறுகள்..

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிட்ட குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு முழுமையான ஆற்றலைப் பெற்றதுபோல நீங்கள் உணரலாம். அதுபோல உங்களுடைய மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கையாளுவதற்கு மெக்னீசியம் தேவைப்படுகிறது. மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து உங்கள் குடலுக்குள் இருக்கும் காரவகை(Alkaline) உணவு மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த குடல் ஆரோக்கியம் ஒருவரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

அஸ்வகந்தாவும் பிராமியும்..

இந்திய ஜின்ஸெங் அல்லது குளிர்கால செர்ரி என்று அழைக்கப்படுகிற அஸ்வகந்தா(Ashwagandha), பிராமி(Brahmi) ஆகியவை மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும் மருத்துவப் பண்புகளைக் கொண்டிருக்கிறது. அஸ்வகந்தா மற்றும் பிராமி போன்றவற்றை கொழுப்புச் சத்துள்ள பொருட்களான பால், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யில் கலந்து சாப்பிடலாம். Lactose intolerance பிரச்னை இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். அஸ்வகந்தாவின் வேர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவுவதோடு, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை உயர்த்துவதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நட்ஸ் ஸ்பெஷல்..

பூசணி விதைகள், முந்திரி, வேர்க்கடலை போன்ற பிற கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் சத்து நிறைவாக உள்ளது. இச்சத்து தசைகள் தளர்வடைய உதவுவதோடு மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலமாக மனநல ஆரோக்கியம் மேம்படுகிறது.   

உணவினை தேர்ந்தெடுங்கள்...

மனச்சோர்வுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கலாம். தைராய்டு பிரச்னை உடையவர்களுக்கும் மனச்சோர்வு ஏற்படலாம். இதுபோன்று மனச்சோர்வுக்கான காரணங்கள் வேறுபடலாம். எனவே, அதற்குரிய காரணங்களை அறிந்து கொள்வதன் மூலம் அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்கலாம். பால் மற்றும் தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு இருக்கும் அயோடின் சத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை வெல்ல உதவுகிறது.

மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் உணவுப் பொருட்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதார பயிற்சியாளருமான Tapasys Mundhra.

இவற்றைத் தவிருங்கள்.!

சர்க்கரை..
இனிப்பு சேர்க்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ளும் மக்களில் பலர் மனச்சோர்வு அறிகுறிகளுடன் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுப்பழக்கம்: எதிர்மறையான மனநிலையில் இருக்கையில் மது அருந்துகிற பழக்கம் உடையவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு அவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கஃபைன்..
நாம் அனுதினமும் அருந்துகிற டீ, காபி போன்றவற்றில் உள்ள கஃபைன்(Caffeine) என்கிற பொருள் நமது மூளையில் உள்ள செரடோனின் அளவைக் குறைக்கிறது. இது கவலையை அதிகமாக்குவதோடு அதைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது.

Sunday 7 November 2021

வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் - படித்ததில் பிடித்தது


வாழ்வு ரொம்ப மகிழ்ச்சியாக

1.எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும்
கவலை படாதீங்க.
காலையில அழுதா
ஈவினிங் சிரிப்போம்..
துக்கமோ மகிழ்வோ எதுவோ
அதிக நேரம் நம்ம உடல்நிலை எடுத்துக்காது.
எல்லாம் கொஞ்ச நேரம்.
மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம்.

2.யதார்த்தம் பழகுங்க..
அதான் முக்கியம்.
யார்‌ வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க.
எனக்கா இந்த நிலைமை ன்னு வாயடைச்சு போகாதீங்க.
உங்களை விட அவமான பட்டவங்க எல்லாம் உலகத்துல இருக்காங்க.

3.எதையும் ஆழமாக நேசிக்காதீங்க.
எதையும் ஆழமாக யோசிக்காதீங்க.
ரொம்ப சிம்பிள் இது.
நேசித்தலும் அதற்கான
யோசித்தலும் தான் அழுகைக்கு அடிப்படை காரணம் என்ற தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க.

4.ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க.
வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டியது அவங்க தான். ‌
நீங்க இல்ல.
உதாசீன படுத்தினா உதறி விடுங்க.
விலகி செல்பவர்களிடம் தானா போயிட்டு அன்பை கொட்டாதீங்க..
அதனால் வர அற்ப கவலைகளுக்கு
இடம் தராதீங்க..
அந்த நினைவுகள் மேலே எழும்பிச்சுன்னா ஒரே போடு போட்டு புதைச்சிடுங்க..

5.துரோகம் பழகுங்க...
பிறப்பு இறப்பு போல துரோகமும்
மனித வாழ்வில் ஓர் அங்கம்.
ஏமாற்றத்தை ஏற்றுக்கங்க.
அப்பதான் அடுத்த முறை
ஏமாற மாட்டீங்க.
இழப்புகளை இயல்பாக்குங்க.
அப்போதுதான் இழப்புகளை பற்றி
கவலைபட மாட்டீங்க.
அவ்வளவு எளிதில் எவரையும்
நம்பிடாதீங்க.
வாழ்க்கையில் இதான் முக்கியம்.

6.ஆறுதலா இருக்க உங்களை தயார்படுத்திக்கங்க.
வேற யாரும் பண்ணுவாங்கன்னு நிக்காதீங்க.
உங்களுக்கு நீங்க தான் வேலைக்காரன் எஜமான் எல்லாமே..

Sunday 31 October 2021

தலைவலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்


தலைவலியை அனுபவிக்காத வர்கள் யாரும் இருக்க முடியாது. 

அந்த அளவிற்கு பொதுவான விடயம் இது. 

மற்ற வயதினரை விட 15 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கே தலைவலி அதிகம் வருகிறது. 

அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி அதிகம். 

அதிக வேலை, சரியான துாக்கம் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வருவது தலை பாரமாக இருக்கும். 

இதற்காக அடிக்கடி மாத்திரைகளை போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை வைத்து கூட எளியமுறையில் இதனை போக்க முடியும் 

தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

உருளைக் கிழங்கை துண்டாக்கி, நெற்றியில் தேய்க்கவும் அல்லது அதனை அரைத்து தலையில் பற்று போல் இடுங்கள்.

சில நிமிடங்களில் தலை வலி மறைந்து போகும்.

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 

10 நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள்.

பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, 

அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென விட்டுவிடும்.

சுக்கு ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று இடுங்கள். 
தலைவலி குணமாகிவிடும்

உங்கள் உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது சூடேறி தலைவலி உண்டாகும்.

உடனே சில டம்ளர் நீர் குடித்து பாருங்கள்.

முட்டைக் கோஸ் இலையை நீர் விடாமல் அரைத்து அதனை தலையில் பற்று இடவும்.

அதன் சற்றினை நெற்றியில் தடவவும்.

பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.   

தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தொடரும் தலைவலிகள் தீரும்.

Thursday 28 October 2021

முருங்கையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா?


எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்...

பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கை கீரை🌿 அல்லது முருங்கை காயை வாரம் மூன்று முறை உட்கொண்டால் போதும் நமது நோய் எதிர்ப்பு திறன் பலமடங்கு உயர்ந்து விடும்....

முருங்கையில் உள்ள வைட்டமின்C ஆனது 'ஆரஞ்சு பழத்தில்🍊 உள்ளதைவிட 7மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள வைட்டமின்A ஆனது கேரட்டில்🥕 உள்ளதைவிட 4மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில்🍌 உள்ளதைவிட 50மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில்🥔 உள்ளதைவிட 50மடங்கு அதிகம்...

முருங்கையில் உள்ள கால்சியம் சத்தானது பாலில்🥛 உள்ளதைவிட 5மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள புரோட்டின்(புரதச்சத்து) பாலில்🥛 உள்ளதைவிட 2மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதைவிட 36மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள இரும்புச்சத்து மற்ற கீரைகளில்🌿 உள்ளதைவிட தோரயமாக 25மடங்கு அதிகம்....

முருங்கையில் உள்ள பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில்🍌 உள்ளதைவிட 3மடங்கு அதிகம்....

Wednesday 27 October 2021

கறுப்பு வைரம் மிளகில் இவ்வளவு மருத்துவ குணங்களா?


1. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன

2. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

3. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.

4. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. 5. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.

6. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.

7. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.

மிளகின் விரிவான மருத்துவப் பயன்கள்:

* மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

* மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.

* சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.

* அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.

* மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.

* இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.

* நொச்சி இலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகை தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்தால் மலேரியா ஜுரம் கட்டுப்படும்.

* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சிறிது சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

* மிளகை தினமும் சமையலில் பயன்படுத்தி வர பல் வலியில் இருந்து முடக்கு வாதம் வரையிலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கும்.

* மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும்.

* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

* ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் மிளகைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.

* வயிறு மந்தமாக இருந்தால் கால் தேக்கரண்டி அளவு மிளகுப் பொடியை மோரில் கலந்து குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். இது தவிர, வாயு சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிளகு அரும் மருந்தாக உள்ளது.

* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

* கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும் .

* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

* மிளகைப் பொடி செய்து குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

* மிளகை தட்டிப் போட்டு காய்ச்சிய பாலில் அதனை போட்டு இரவில் குடித்தால் ஜலதோஷம் தலைபாரம் குறையும்.

* மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.

* மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா எல்லாம் சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.

* ஏழு, எட்டு மிளகை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* தினமும் பத்து மிளகை உண்டு வர ரத்தம் சுத்தமாகும்.

* மிளகை தினமும் உணவில் சேர்த்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.

* கனிந்த வாழைப் பழத்தின் உள்ளே மிளகுப் பொடியை வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் விரைவில் ஆஸ்துமா நோய் குணமாகும்.

* மிளகு, ஜாதிக்காய், சந்தனம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருத் தொல்லைகள் வராது. முகம் பளபளக்கும்.



Tuesday 19 October 2021

தொப்பையை குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ்

*உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு முறை என பல உள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் தவிர்த்து மிக எளிதில் அதிலும் இயக்கையான முறையில் உங்கள் உடை எடையை குறைக்க ஒரு வழி இருக்கிறது. கூடுதல் கொழுப்பை வேகமாக குறைக்க சுரைக்காய் நிச்சயமாக உதவும் என்று ஒரு ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது.*

சுரைக்காய் ஜீரணத்தை எளிதாக்குவது மட்டுமல்ல, விரைவான கொழுப்பு இழப்புக்கும் வழிவகை செய்கிறது. இந்திய சமையலறைகளில் காணப்படும் பொதுவான காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. மேலும் இந்த காய்கறியில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதால் இதனை நமது வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.

காய்கறி மட்டுமல்ல, அதன் சாறும் கூட கூடுதல் கொழுப்பைக் குறைப்பதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. சுரைக்காய் சாற்றை ஒரு சக்திவாய்ந்த சுகாதார பானம் என்று அழைப்பது சரியாக இருக்கும். இதில், தண்ணீர் மற்றும் ஃபைபர் ஏராளமாக உள்ளது. எடை இழப்பு தவிர, அமிலத்தன்மை, அஜீரணம், வயிற்றுப் புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க இது ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சுரைக்காயில் சுமார் 92% தண்ணீர் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது உதவுகிறது.

சுரைக்காயில் எவ்வளவு கலோரி உள்ளது?

கலோரி உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, 100 கிராம் சுரைக்காயில் சுமார் 15 கலோரிகளும், வெறும் 1 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவாக உள்ளது. இந்த காய்கறி அனைத்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று என்பதால் உங்களை நீண்ட நேரம் பசியின்மையோடு முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எலிகளின் எடை அதிகரிப்பைக் குறைக்க சுரைக்காய் உதவியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுபோன்ற எந்த ஆராய்ச்சியும் இதுவரை மனிதர்களில் நடத்தப்படவில்லை. உடலில் இருந்து கொழுப்பை எரிக்கத் தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்துள்ளது. இதுதவிர இந்த காய்கறியில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்பு, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

சசுரைக்காய் எடை இழப்பு திட்டத்திற்கு ஒரு சிறந்த திட்டமாக அமைகிறது. ஏனெனில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருக்கும் உணவு எடை இழக்கவும், பராமரிக்கவும் உதவக்கூடும் என்று மே 2012 இல் அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது வயிற்று கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் வயிற்றுப் பகுதியில் உள்ள கூடுதல் பவுண்டுகளை குறைக்கும் வேலையை சுரைக்காய் ஜூஸ் மட்டும் செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை கடைப்பிடிப்பதில் இருந்து உடல் பயிற்சிகள் செய்வது வரை ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல எடை இழப்பு முறையைப் பின்பற்றுவது முக்கியம்.

எப்போது உட்கொள்ள வேண்டும்?

சிறந்த எடை இழப்பு முடிவுகளை பெற நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த சுரைக்காய் ஜூஸை குடிப்பது நல்லது. மேலும், சாறு மிக வேகமாக ஆக்சிஜனேற்றம் அடையும் என்பதால் ஜூஸை நீண்ட நேரம் வைத்து குடிக்கக்கூடாது. உடனடியாக உட்கொள்ள வேண்டும். சுரைக்காய் அரைத்து சல்லடை மூலம் சாற்றை வடிகட்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் நார்ச்சத்தை இழக்க நேரிடும். ஏனெனில் கூடுதல் கிலோவைக் குறைப்பதற்கு அவை மிக முக்கியமாகும். அதன் சுவையை அதிகரிக்க சுரைக்காயுடன் எலுமிச்சை மற்றும் புதினாவை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

இருப்பினும், சுரைக்காய் ஜூஸை அதிக அளவில் குடிப்பதால் குமட்டல், புண்கள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பல மோசமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆபத்தை குறைக்க நல்ல சுரைக்காயில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். கசப்பான சுவை கொண்ட ஒன்றை உட்கொள்ளக்கூடாது. சுரைக்காய் சாற்றின் கசப்பான சுவை அதில் உள்ள கக்கூர்பிடசின் சேர்மங்களால் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு நச்சுத்தன்மையை உருவாக்குகிறது.

எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

ஒரு நாளில் மூன்று அவுன்ஸுக்கு அதிகமாக (தோராயமாக 88 மில்லி) சுரைக்காய் சாற்றை ஒருவர் குடிக்கக் கூடாது என்று சர்வதேச ஊட்டச்சத்து, மருந்தியல், நரம்பியல் நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sunday 10 October 2021

நெஞ்செரிச்சலை தடுக்கும் வழிமுறைகள்


சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது.

 இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. உணவுக் குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது.

 இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

நன்மை உண்டாவது எப்படி?

வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும். இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.

மாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும். அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.

சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது...

குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்ல வேண்டும்; உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக் கூடாது; படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதைத் தடுக்கத்தான்.

கூடுதலாக சில நன்மைகள்...

வலது பக்கமாகப் படுக்கும்போது உணவு நிரம்பிய இரைப்பை கல்லீரலை அழுத்தும். இடது பக்கமாகப் படுக்கும்போது கல்லீரலுக்கு அந்த அழுத்தம் இல்லை என்பதால், உணவுச் செரிமான நீர்கள் சரியாகச் சுரந்து செரிமானத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கும்.

இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டுவதால், உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ரத்தம் சீக்கிரம் சுத்தமாகிறது.

வழக்கமான ரத்தச் சுற்றோட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது. முக்கியமாகக் கீழ்ப்பெருஞ்சிரை (Inferior vena cava) வலது பக்கத்தில் இருப்பதால், வலது பக்கமாகப் படுக்கும்போது அது அழுத்தப்படும். இடது பக்கமாகப் படுக்கும்போது இந்த அழுத்தம் ஏற்படாது. எனவே, இதில் ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இது இதயத்துக்கும் நல்லது.

சிலருக்கு வலது பக்கமாகப் படுக்கும்போது நாக்கும் தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, அந்தத் தசைகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும். இதனால் குறட்டை ஏற்படுவதில்லை.

கர்ப்பிணிக்கும் நல்லது..!

கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக் கூடாது. அப்படிப் படுக்கும்போது வளர்ந்துவரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துப்போகும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் தாழ்ந்துவிடும். 

தலை சுற்றி, மயக்கம் வரும். இதைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது. இந்த நிலையில் அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்சினை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும்.

Thursday 7 October 2021

முக அழகை கூட்டும் பப்பாளி



அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘பப்பாளி போன்ற பளபளப்புக்கு சொந்தக்காரர்’ என்று வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு பப்பாளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’

நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.

பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கருப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.

மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.

Wednesday 29 September 2021

உலக இதய நாள் இன்று - இதய நோய் வராமல் பாதுகாப்பது எப்படி




இனிய வாழ்வுக்கு இதயம் காப்போம்
முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.*


*உலக இதய நாள் இன்று (செப்டம்பர் மாதம் - 29 ந்தேதி)*
கடைபிடிக்கப்படுகிறது. இதய சம்பந்தமான நோய்களான மாரடைப்பு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை மற்றும் வருமுன் காப்பது அவசியம் என்பதை பொதுமக்களிடையே உலக இதய நாள் நடைப்பயணம், ஓடுதல், இதய சிகிச்சை முகாம்கள், குறும்படங்கள், கண்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

*🧿மாரடைப்பு*

இந்தியாவில் அதிகமாக ஏற்படக்கூடிய இதய நோய்களில் ஒன்று மாரடைப்பு. இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும் போது இதயத்திசு இறப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் சேர்ந்து இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயத்தசைகளுக்கு குறைந்த அளவு குருதியே செல்வதால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.  

இந்நிலை உள்ளவர்கள் கடினமான வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதற்கு உரிய மருத்துவம் செய்யாவிடில் இரத்த குழாய்களில் உள்ள வீக்கமானது வெடித்து குருதி உறைவு ஏற்பட்டு நிரத்தரமான அடைப்பு ஏற்பட்டு இதயத்தசைகளுக்கு குருதி செல்வது தடைப்பட்டு இதயத்தசை இறப்பு (மாரடைப்பு) ஏற்படுகிறது. முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

*🧿இருதய நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:*

❤️5 மணி நேரங்களுக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதை குறைக்கவும். அடிக்கடி 5-10 நிமிடங்களாவது இடைஇடையே நடந்து செல்லவும்.

❤️மது, புகையிலை அருந்துவதைத் தவிர்க்கவும்.

❤️கோபம் அடிக்கடி வருவதை தவிர்க்கவும். கோபமானது இதய நோய் வருவதை இரட்டிப்பாக்கும்.

❤️உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

❤️குறைந்தது 8 - 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கமின்மை மன இறுக்கத்தை உண்டாக்கும்.

❤️சர்க்கரை நோயாளிகள், உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக கொலஸ்டிரால் உள்ளவர்கள் அவற்றின் அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

❤️பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். 38 சதவீத இதய இரத்தக்குழாய் சம்பந்தமான வியாதியுள்ளவர்களுக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.

❤️வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

❤️அதிக எடையுள்ள கனமான பொருட்களை தூக்க கூடாது. குனிந்தபடி அதிக நேரம் வேலை செய்தல் போன்றவற்றை செய்யும் போது இதயத்திற்கு சுமையை அதிகரிக்கச் செய்யும்.

*🧿உணவு முறைகள்:*

40 வயதைக் கடந்த அனைவரும் சரியான சமச்சீர் உணவுகளை உண்பது இதய பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

மாதுளம்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்கள் இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். பெரியநெல்லிக்காய் ஒன்றினை வாரத்திற்கு இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

உணவில் நார்ச்சத்துகள் உள்ள உணவினை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கட்டிய தானிய வகைகளை எடுத்துக் கொள்ளவும்.

*🧿தவிர்க்க வேண்டிய உணவுகள்:*

உணவில் உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளவும்.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்துகள் அதிகம் உள்ள உணவினை உண்பதை குறைக்கவும்.

உடலுக்குத் தேவையான அளவை விட அதிக அளவு உண்பதை குறைத்துக் கொள்ளவும்.

முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள் உண்பதை தவிர்க்கவும்.

பெரும்பாலும், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இனிப்புப் பண்டங்கள் அடிக்கடி அதிகளவில் உண்பதை தவிர்க்கவும்.

அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

உருளைக்கிழங்கு, வாழைக்காய், மொச்சை, பட்டாணி, காராமணி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை வாதத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பாலிலிருந்து கிடைக்கக்கூடிய பாலாடைகட்டி, சீஸ், கோவா போன்றவற்றை தவிர்க்கவும்.

*உடற்பயிற்சி:*

ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது நடக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்தி இரத்த குழாய்களை விரிவடையச்செய்யும்.
சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி, 30 நிமிடம் செய்வதன் மூலம் இதயமானது வலுப்பெறும். மாடிப்படி 15 நிமிடமாவது ஏறி இறங்கலாம்.

மேற்கூறிய உடற்பயிற்சியை Ejection Fraction அதாவது இதயம் தனக்கு வரும் ரத்தத்தில் குறைந்தது 60--70 சதவீதம் வெளித்தள்ள வேண்டும். EF-50 சதவீதம் மேல் இருந்தால் வேகமான நடைபெயற்சி செய்யலாம். EF-40 சதவீதம் குறைவாக இருப்பவர்கள் எந்த உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் செய்யக் கூடாது.

*இதயத்தை பலமாக்கும் யோகாசனங்கள்:*

விருஷாசனம் (மரம் போன்ற நிலை)
திரிகோணாசனம்
புஜங்காசனம்
உத்கடாசனம்

போன்ற யோகாசனங்களை மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி செய்து வந்தால் மாரடைப்பு, இதயப்படபடப்பு போன்றவற்றிற்கு காரணமான உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மார்பு பகுதியை விரிவடையச் செய்து ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தினை இதயத்திற்கு சீராக எடுத்துச் செல்ல உதவுகிறது.

Monday 27 September 2021

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இத்தனை அற்புத பயன்களா


கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. மேலும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.


 கொத்தவரங்காயில் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
 

கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
 

 கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும். வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும்.

 
 கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும். எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.
 

 கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும் .பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்

Sunday 26 September 2021

மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா..?


மாதவிடாய் என்னும் சிரமமான சமயத்தில் உடற்பயிற்சி என்பது கடினமான விஷயம்தான். இருப்பினும் முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 அதாவது வயிற்று வலி, வயிற்று மந்தம், சோர்வு, தலைவலி போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சியை தவிர்த்துவிடுவார்கள். மேலும் அதன் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது ஏன் முக்கியம்?

உடற்பயிற்சி நிறைய உடல் மற்றும் மனநல நன்மைகளை அளிக்கிறது. மாதவிடாய் சமயத்தில் உங்கள் உடல் ஏற்கனவே நிறைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பதால் , வொர்க்அவுட் உங்களுக்கு ஆறுதல் அளிக்கலாம் மற்றும் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். அந்த சமயத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனின் சமநிலையின்மை காரணமாகவே இதுபோன்ற உபாதைகளை அனுபவிக்கிறோம். எனவே இந்த நேரத்தில், உங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதற்குப் பதிலாக, சில மிதமான உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்.

மாதவிடாய் நாட்களில் செய்ய சிறந்த உடற்பயிற்சிகள் :

ஆரம்ப நாட்களில் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால், அந்த சமயத்தில் பயிற்சிகள் அசௌகரியத்தை உண்டாக்கலாம். அதனால்தான் இந்த நாட்களில், நீங்கள் மிதமான பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், உடற்பயிற்சி தீவிரமாக அல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். அதாவது அந்த சமயத்தில், லேசான நடைப்பயிற்சி, மிதமான கார்டியோ, யோகா மற்றும் பைலேட்ஸ் போன்றவை முயற்சிக்கலாம்.

நீங்கள் ஆரம்ப நாட்களில் அசௌகரியத்தை உணரவில்லை எனில் யோகா,பைலேட்ஸ் போன்ற பயிற்சிகளை செய்யலாம். ஆனால் சிரமமாக உணர்ந்தால் மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். நடைபயிற்சி மட்டும் செய்தால் கூட போதுமானதுதான்.

எதுவாயினும் இந்த சமயத்தில் உங்கள் நீரிழப்பை கவனிப்பது அவசியம். அதிகமாக தண்ணீர் குடியுங்கள். நீரேற்றமாக இருப்பது அவசியம். ஏனெனில் மாதவிடாய் சமயத்தில் விரைவில் நீரிழப்பு உண்டாகும். அதுவும் உடற்பயிற்சிகள் செய்யும்போது கூடுதலாக நீரிழப்பு ஏற்படும். எனவே தண்ணீர் நிறைய குடியுங்கள்.

மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யும்போது உதிரப்போக்கு கூடுதலாக இருக்கலாம். எனவே அதைக் கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள துணிவோடு இருங்கள். சானிடரி பேட், டாம்போன்களை அவசரத் தேவைக்கு கையில் வைத்திருப்பது அவசியம்.

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :

உங்கள் எண்டோர்பின் அளவை உயர்த்துகிறது : உடற்பயிற்சி உங்கள் உடலில் எண்டோர்பின் அளவை மேம்படுத்துவதால், அது உங்களை நன்றாக உணரவைக்கும் மற்றும் உங்கள் மனநிலையையும் சாந்தப்படுத்தும். எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாக இருப்பதால், உடற்பயிற்சியின் போது அவை வெளியாவதால், நீங்கள் அனுபவிக்கும் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

அதிக வலிமையையும் சக்தியையும் அனுபவிப்பீர்கள் : உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் இரண்டு வாரங்களிலிருந்தே நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் ( மாதவிடாயின் முதல் நாள்), அதன் பலனாக உடல் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது என ஆய்வு கூறுகிறது.

வலிமிகுந்த நாட்களை எதிர்த்துப் போராட உதவும் : லேசான நடைபயிற்சி கூட வலியைக் குறைக்கவும் உடனடியாக உங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனநிலையை மேம்படுத்தும் : மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சியான ஹார்மோன்களான எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது

. எனவே, நீங்கள் சோகமாகவும், சோர்வாகவும் உணரும் இந்த நேரத்தில், பயிற்சி உங்கள் மனநிலையை மேம்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உங்கள் மாதவிடாயுடன் தொடர்புடைய பிடிப்புகள், தலைவலி அல்லது முதுகு வலியையும் உடற்பயிற்சி குறைக்கிறது.

Tuesday 14 September 2021

கழுத்தில் இருக்கும் கருமையை போக்க எளிய வழிகள்

கழுத்தை சுற்றிலும் கருமையாக இருந்தாலே சற்று சங்கடமாக இருக்கும். இது சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.


கற்றாழை : கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய சரியாகும்.

ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.

பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெய்யை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

தயிர் : தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.

உருளைக்கிழங்கு : கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.

Saturday 11 September 2021

உடல் எடையை குறைக்க பயனுள்ள தகவல்கள்


உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்ற தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.

ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான விஷயங்களை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும். இப்போது உடல் எடையை குறைப்பதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போமா.

டயட்..

உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

உடற்பயிற்சி..

உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.

எலுமிச்சை, தேன்..

சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.

உப்பு..

உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.

தண்ணீர்..

உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.

எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி. குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

சாப்பிடும் முறை..

3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால் தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

கொள்ளு..

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வெள்ளை பொருட்கள்..

டயட்டில் வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்காரை, உப்பு, சாதம், பால், தயிர் போன்றவற்றின் அளவை குறைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர்க்கவும்..

1. பட்டினிக் கிடத்தல் கூடாது.

2. அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது.

3. உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு
   போன்ற கிழங்கு வகைகளை
   உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்..

4. இனிப்புகள், சர்க்கரை வகைகளை
    இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

முக்கியத்துவம்..

1. எண்ணெயில் வறுத்த மற்றும்
   பொரித்த உணவுகளைத் தவிர்த்து
   வேகவைத்த உணவுகளுக்கு
   முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

2. முட்டையின் மஞ்சள் கருவைத்
    தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை
    மட்டுமே உட்கொள்ள வேண்டும்

3. பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள
   குளிர்பானங்களை குடிக்க கூடாது.

4. தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் 
   ( 2-லிருந்து 4 வரை)

ஆரோக்கியத்திற்கு..

1. இரவு உணவுடன் அவரை, பீன்ஸ்,
   கேரட், கோஸ், காலி ஃப்ளவர்,
   முருங்கைக்காய், புடலங்காய்,
   சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு,
   வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும்
  ஒன்றை தினமும் 200 கிராம் அளவு
  சேர்த்துக்கொள்ளுங்கள்.

2. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை
   கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு
  போன்ற பயறு வகைகளை உணவில்
  சேர்த்துக் கொள்வது அவசியம்.

3. கைக்குத்தல் அவல், முழு கோதுமை,
   கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு
   போன்ற தானியங்களையும்
   அவ்வப்போது உட்கொள்ள
   வேண்டும்.

4. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள
    உணவுப் பொருட்களை தவிர்த்தல்
    மிக நன்று. பாலில் கூட குறைந்த
   கொழுப்புச் சத்து உள்ள ‘டோன்டு
   மில்க்’ வகைகளையே
   பயன்படுத்துங்கள்.

5. அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி
     வகைகளையே உட்கொள்வீர்.
     சைனீஸ், இந்தியன் வகை
    குழம்புகள் வேண்டாம்...